என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KN.Nehru"

    • தி.மு.க. ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பேசியிருக்கிறார்கள்.
    • அமித்ஷாவின் அருகிலேயே அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமியும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    அமைச்சர் கே.என். நேரு இன்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க.வினர், நயினார் நாகேந்திரனை தலைவராக போட்டு ஒரு கூட்டத்தை கூட்டியுள்ளனர். அந்த கூட்டத்தில், தி.மு.க. ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பேசியிருக்கிறார்கள். அது அவர்களுடைய ஆசை. அந்த ஆசையை அவர்கள் சொல்லி வருகிறார்கள்.

    விவசாயத்தில், வேரோடு பிடுங்கி நடவு செய்தால் அந்த பயிர் இன்னும் பெரியதாக, செழிப்பாக வளரும். அதுபோல அவர்கள் பிடுங்க நினைத்தால் எங்கள் ஆட்சி இன்னும் சிறப்பாகத்தான் இருக்கும்.

    கடந்த 15 வருடங்களாக இந்த வேரோடு பிடுங்கும் வேலையைத்தான் பா.ஜ.க. பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களால் தமிழகத்தில் எதையும் செய்ய முடியவில்லை. தி.மு.க. கூட்டணிதான் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. வருங்காலத்திலும் தி.மு.க.தான் மாபெரும் வெற்றி பெறும்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. தமிழகத்திற்கு கடந்த காலங்களில் 3 முறை வந்த அமித்ஷா, ஒவ்வொரு முறையும் 'கூட்டணி ஆட்சி' என்றே பேசி வருகிறார். ஆனால், அதுகுறித்து அவரும் விளக்கம் சொல்லவில்லை. அமித்ஷாவின் அருகிலேயே அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமியும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது இருண்ட ஆட்சி அவர்களது கண்ணுக்கு தெரியவில்லை. அமித்ஷா பேசிய இதே ஊரில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். அவர்கள் நினைப்பது நடக்காது. உண்மையில், அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்கள் பானக கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், பா.ஜக வினரும் அ.தி.மு.க. கூட்டணியை விரும்பவில்லை.

    இப்படிப்பட்ட சூழ்நிலையை வைத்துக்கொண்டு, நாங்கள் ஜெயித்துவிடுவோம், ஆட்சியை பிடித்துவிடுவோம் என்று அவர்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அவர்கள் நினைப்பது ஒருபோதும் நடக்காது.

    முதலமைச்சரை யார் எந்த பெயரை வைத்து அழைத்தாலும், மீண்டும் அவர்தான் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார். பொதுமக்கள், குறிப்பாக மகளிர் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய ஆதரவு அலை வீசி வருகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு இருந்த மகளிர் ஆதரவை எல்லாம் தாண்டி, இப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

    நடைபெறவிருக்கும் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் தி.மு.க. ஆட்சி அமையும். எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்பார்.

    தோற்றுப் போய் விடுவோம் என்ற பயத்தில் தான், பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.வினர் பல்வேறு பிரச்சினைகளை செய்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, தி.மு.க.விற்கு போட்டியே கிடையாது. எதிரணியில் யார் நின்றாலும், நாங்கள் தான் மகத்தான வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் நிறுத்தப்படவில்லை.
    • மழைக்காலத்தில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவு.

    நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார்.

    அப்போது, அம்மா உணவகங்கள் குறித்து பேசிய அவர், " எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் நிறுத்தப்படவில்லை. அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மழைக்காலத்தில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என்றார்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் பணிகள், மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • நீர் ஆதாரங்களை கண்டறிந்து அவற்றின் மூலம் குடிநீர் தேவைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தென் மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    ஆய்வுக்கூட்டம்

    இதற்காக நேற்றிரவு மதுரையில் இருந்து கார் மூலம் அவர் தூத்துக்குடிக்கு வந்தடைந்தார். அங்கு மறவன்மடம் பகுதியில் இரவு தங்கிய அவர் இன்று காலை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தலைமை தாங்கி பங்கேற்றார்.

    இதில் கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் நகராட்சிதுறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ்மீனா, கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் கலெக்டர் தாக்ரே சுபம் ஞானதேவ் ராவ், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உமரிசங்கர் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிதுறை சார்ந்த அதிகாரிகள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கோடை காலத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் பணிகள், மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    அமைச்சர் கே.என். நேரு

    பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைத்திட குடிநீர் திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து பணிகளையும் அலுவலர்கள் துரிதமாக நிறைவேற்றிட வேண்டும்.

    நீர் ஆதாரங்களை கண்டறிந்து அவற்றின் மூலம் குடிநீர் தேவைகளை நிறைவேற்றிடவும் உரிய நடவடிக்கைகளை அலுவலர்கள் எடுக்க வேண்டும், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்பட்டால் லாரி மூலமாவது சப்ளை செய்ய வேண்டும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

    முடிவுற்ற திட்டப்பணிகள்

    தொடர்ந்து கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள உழவர்சந்தை பகுதியில் மாநகராட்சியில் ரூ. 71 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை கனிமொழி எம்.பி. முன்னிலையில் அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்.

    அப்போது அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து அவர் காரில் நெல்லை மாவட்டத்திற்கு புறப்பட்டார்.

    • நில மதிப்பு அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • காலிபணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை காந்திபுரத்தில் மத்திய ஜெயிலின் அருகே ரூ.130 கோடியில் செம்மொழி பூங்கா கட்டப்பட்டு வருகிறது.

    இங்கு நடைபெற்று வரும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அங்கு நடைபெற்று வரும் பணிகள், குறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரனிடம் கேட்டறிந்தனர். அவர்கள் வரைபடத்துடன் அமைச்சர்களுக்கு விளக்கம் அளித்தனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவையில் செம்மொழி பூங்கா கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது இங்கு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட காலிபணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    முதற்கட்டமாக 2,500 காலி பணியிடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நிரப்பப்பட உள்ளது. இதில் 85 சதவீதம் தேர்வு மூலமாகவும், மீதி 15 சதவீதம் நேர்முகத் தேர்வு மூலமும் நிரப்பப்படும். இந்த பணிகள் அனைத்தும் ஒருவாரம் அல்லது 10 நாட்களுக்கு நிரப்பப்படும். மீதி உள்ள காலிபணியிடங்கள் அடுத்தகட்டமாக நிரப்பப்படும்.

    கோவை மாநகராட்சியின் புதிய மேயர் யார் என்பதை தி.மு.க தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும்.

    கோவை மாநகராட்சியில் 333 தீர்மானங்களை 10 நிமிடத்தில் நிறைவேற்றியதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. அனைத்து தீர்மானங்களையும் பரிசீலித்து மக்களின் தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கட்டிட வரைபட அனுமதிக்கு ஆன்லைன் மூலம் வழங்கும் திட்டத்தால் கட்டண உயர்வு என்பது சரியல்ல. நிலத்தின் மதிப்பு அடிப்படையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி ஆகியவற்றுக்கு நில மதிப்பு அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கு மேல் கட்டணம் இருக்காது. பல இடங்களில் கட்டணம் குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதல்வா் மு.க.ஸ்டாலின் நகராட்சி நிா்வாகத் துறைக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.
    • பொதுமக்களின் குறைதீா்க்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 155304 சேவை ஆகியவற்றை அமைச்சா்கள் தொடக்கிவைத்தனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிா்வாகத் துறையின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப்பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை வகித்து நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:-

    முதல்வா் மு.க.ஸ்டாலின் நகராட்சி நிா்வாகத் துறைக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் அபிவிருத்தித் திட்டம், ஒருங்கிணைந்த மேலண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையம், புதிய குடிநீா்த் திட்டப் பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், மாநாட்டு அரங்கம் கட்டுதல், நவீன பேருந்து நிலையம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், தினசரி மற்றும் வாரசந்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேவேளையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை அமைத்தல், தெருவிளக்கு அமைத்தல், குடிநீா் வசதி உள்ளிட்டவற்றை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

    இதைத் தொடா்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த சாலையோர வியாபாரிகள் 17 பேருக்கு தொழில் தொடங்க ரூ.24 லட்சம் மதிப்பிலானவங்கிக் கடனுதவி, ஒரு குரல் புரட்சி திட்டத்தின்கீழ் பொதுமக்களின் குறைதீா்க்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 155304 சேவை ஆகியவற்றை அமைச்சா்கள் தொடக்கிவைத்தனா்.

    கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் (நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல்) சிவ்தாஸ் மீனா, மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கு.சண்முகசுந்தரம், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணைமேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், நகராட்சி நிா்வாக இயக்குநா் பி.பொன்னையா, மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • கட்டணம் இல்லா தொலைபேசி சேவை எண் 155304 திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • புகார் தெரிவித்ததும் அது தொடர்பான குறுஞ்செய்தி அவர்களின் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் 'ஒரு குரல் புரட்சி' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதனை இன்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

    மாநகராட்சியில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகள் குறித்த 300-க்கும் மேற்பட்ட பிரிவு புகார்களை தெரிவித்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் கட்டணம் இல்லா தொலைபேசி சேவை எண் 155304 திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். பல்துறைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார் தெரிவித்ததும் அது தொடர்பான குறுஞ்செய்தி அவர்களின் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். குறிப்பிட்ட கால அளவுக்கு அந்த குறைகள் நிவர்த்தி செய்து அது தொடர்பாகவும் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் அந்தப் புகார் நிவர்த்தி செய்யாத பட்சத்தில் மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வை வரை அந்த புகார் சென்று விரைந்து நடவடிக்கை எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் கீழ் இந்த சேவை தொடங்கி உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலெக்டர் வினீத், மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம், நகர் பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக பணி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என். நேரு பங்கேற்று ஆய்வு செய்தார்.திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    ×