search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Basic Needs"

    • தந்தை பெரியார் பிறந்த மண்ணில் ஈரோடு மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.
    • அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் முழுமையாக முயற்சி செய்வேன்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் புதிய கலெக்டராக ராஜ கோபால் சுங்கரா நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து அவர் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முறைப்படி கலெக்டர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

    பின்னர் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பளித்த முதல்-அமைச்சருக்கும், அமைச்சர் முத்தசாமிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தந்தை பெரியார் பிறந்த மண்ணில் ஈரோடு மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.

    பொதுமக்கள் குறைகளை தீர்க்கவும், அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் முழுமையாக முயற்சி செய்வேன். தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுவேன்.

    இம்மாவட்டத்தின் முக்கிய தொழில்களான விவசாயம், நெசவு, தொழிற்சாலை வளர்ச்சிக்காக முழு அள வில் பாடுபடுவேன். பொது மக்கள் தங்களது குறைகளை எண் நேரமும் தெரி விக்கலாம். இதற்காக 0424-2260211 என்ற தொலைபேசி எண்ணும், 97917 88852 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படை பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • தலைவர் முகமது யாசின் தலைமையில் நடந்தது.

    மேலூர்

    மேலூர் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் முகமது யாசின் தலைமையில் நடந்தது. இதில் 46 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

    2-வது வார்டு அ.ம.மு.க. கவுன்சிலர் ஆனந்த் வெங்கடேஸ்வரா நகரில் காவிரி கூட்டு குடிநீர் இணைப்பு அமைத்து தர வேண்டும். வெங்கடேஸ்வரா விரிவாக்க பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால் கட்ட வேண்டும். பர்மா காலனியில் எரிமேடை அமைக்க வேண்டும் என்றுகோரி தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

    இதற்கு பதிலளித்த நகர்மன்ற தலைவர், காவிரி கூட்டுக் குடிநீர் மேலூரில் உள்ள அனைத்து வார்டுகளிலும், நகராட்சி குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி கொடுக்கப்படும் என்றார்.

    9-வது வார்டு கவுன்சிலர் அருண் சுந்தரபிரபு, பட்டாகுளம் மாயானத்தில் எரிவாயு தகன மேடையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், மின் மயானத்தை கியாஸ் மூலமாக மாற்றப்படும் என்றார்.

    23-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் திவாகர் தமிழரசன், 12-வது கவுன்சிலர் அறிவழகன் ஆகியோர் தங்கள் வார்டில் தேவைகள் குறித்து பேசினர். அதற்கு தலைவர் நகராட்சி பகுதியில் யார் ஆக்கிரமித்தாலும் அந்த ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் நலன் கருதி நாளை (22-ந் தேதி) 1 முதல் 27 வார்டுகளிலும் அகற்றப்படும்.

    குப்பைகளை அள்ளுவதற்கு குப்பை வண்டிகளை தயார் செய்து தரப்படும். அனைத்து கவுன்சிலர் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார். மேலூர் நகர் பகுதியில் கழிவு நீர் வாய்க்கால், சாலை, பாலம் போன்ற அடிப்படைத் தேவைகள் அமைக்கும் பணிகளுக்கு ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் துணைத் தலைவர் இளஞ்செழியன், ஆணையாளர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன், சுகாதார அலுவலர் மணிகண்டன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • முதல்வா் மு.க.ஸ்டாலின் நகராட்சி நிா்வாகத் துறைக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.
    • பொதுமக்களின் குறைதீா்க்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 155304 சேவை ஆகியவற்றை அமைச்சா்கள் தொடக்கிவைத்தனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிா்வாகத் துறையின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப்பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை வகித்து நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:-

    முதல்வா் மு.க.ஸ்டாலின் நகராட்சி நிா்வாகத் துறைக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் அபிவிருத்தித் திட்டம், ஒருங்கிணைந்த மேலண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையம், புதிய குடிநீா்த் திட்டப் பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், மாநாட்டு அரங்கம் கட்டுதல், நவீன பேருந்து நிலையம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், தினசரி மற்றும் வாரசந்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேவேளையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை அமைத்தல், தெருவிளக்கு அமைத்தல், குடிநீா் வசதி உள்ளிட்டவற்றை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

    இதைத் தொடா்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த சாலையோர வியாபாரிகள் 17 பேருக்கு தொழில் தொடங்க ரூ.24 லட்சம் மதிப்பிலானவங்கிக் கடனுதவி, ஒரு குரல் புரட்சி திட்டத்தின்கீழ் பொதுமக்களின் குறைதீா்க்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 155304 சேவை ஆகியவற்றை அமைச்சா்கள் தொடக்கிவைத்தனா்.

    கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் (நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல்) சிவ்தாஸ் மீனா, மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கு.சண்முகசுந்தரம், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணைமேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், நகராட்சி நிா்வாக இயக்குநா் பி.பொன்னையா, மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • குடிநீர், தார்ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகிறோம்.
    • பாறைகுழியை மூடியதற்கு பிறகு குப்பை கழிவுகளை எங்கே கொட்டுவது என்று திண்டாடி வருகிறோம்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு வட்டம் அங்கேரிப்பாளையம் எம்.எஸ்.எம். மணி நகரில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-எங்கள் பகுதியில் குடிநீர், தார்ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகிறோம்.

    எங்கள் பகுதியில் இருந்த பாறைகுழியை மூடியதற்கு பிறகு குப்பை கழிவுகளை எங்கே கொட்டுவது என்று திண்டாடி வருகிறோம். தெருக்களில் மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டியும் அமைக்கப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. சாலைகள் பள்ளம் மேடாக உள்ளது. வாகனங்களில் செல்ல முடியவில்லை. இப்படியாக கடந்த 15 வருடங்களாக அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிட்ம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே இந்த பகுதியில் போதிய அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×