என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Angeripalayam"
- குடிநீர், தார்ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகிறோம்.
- பாறைகுழியை மூடியதற்கு பிறகு குப்பை கழிவுகளை எங்கே கொட்டுவது என்று திண்டாடி வருகிறோம்.
திருப்பூர் :
திருப்பூர் வடக்கு வட்டம் அங்கேரிப்பாளையம் எம்.எஸ்.எம். மணி நகரில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-எங்கள் பகுதியில் குடிநீர், தார்ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகிறோம்.
எங்கள் பகுதியில் இருந்த பாறைகுழியை மூடியதற்கு பிறகு குப்பை கழிவுகளை எங்கே கொட்டுவது என்று திண்டாடி வருகிறோம். தெருக்களில் மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டியும் அமைக்கப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. சாலைகள் பள்ளம் மேடாக உள்ளது. வாகனங்களில் செல்ல முடியவில்லை. இப்படியாக கடந்த 15 வருடங்களாக அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிட்ம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே இந்த பகுதியில் போதிய அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் காங்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
- 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை பணி முழுமையாக முடியாமல் பாதியிலேயே பணிகள் நிற்கின்றன.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பஸ் நிலையம் ,பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காங்கிரீட் சாலை போடப்பட்டு உள்ளது.
ஆனால் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை பணி முழுமையாக முடியாமல் பாதியிலேயே பணிகள் நிற்கின்றன. எப்போதும் போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில் சாலை பணி முழுமையாக முடியாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
அதேபோல் இந்த சாலையில் தனியார் பள்ளிகள் ,பல்வேறு பனியன் நிறுவனங்களும் உள்ளதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.காங்கிரீட் சாலையின் இரு புறங்களிலும் குழிகள் மூடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் விபத்தில் சிக்கி வருகின்றனர். அதேபோல் கான்கிரீட் போட்ட ஒரு சில இடங்களில் ரோடுகள் பெயர்ந்து பல்லாங்குழியாக கிடப்பதால் தரமற்ற முறையில் ரோடு போடப்பட்டுள்ளதா? என சந்தேகமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
தெருக்களில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் முறையாக பாதாள சாக்கடைக்கு சென்று சேரும் வகையில் வழிகள் இல்லாமல் அவசர கதியில் ஏனோ தானோ என்று ரோடு போடப்பட்டுள்ளதால் சாக்கடை நீர் சரிவர செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. எனவே மாநகராட்சி மேயர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இந்த சாலையை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து ரோடு பணியை முழுமையாக முடித்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்