என் மலர்
நீங்கள் தேடியது "மாநில கல்விக்கொள்கை"
- தொலைநோக்கு பார்வையுடன் மாநில கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
- இன்றைய சூழ்நிலைக்கு எந்த அறிவியல் பாடங்கள் தேவையோ அதையும் கொண்டு வந்துள்ளோம்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில கல்விக்கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்நிலையில் மாநில கல்விக்கொள்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எல்லோருக்கும் எல்லாம் என்பதிலிருந்து பிறந்தது தான் மாநில கல்வி கொள்கை.
* இருமொழி கொள்கை தான் என்பது மாநில கல்வி கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
* எல்லாவற்றையும் உள்ளடக்கிய அனைவருக்குமான கல்வி என்பதே திட்டம்.
* வாழ்க்கை மதிப்பீடுகள், தொலைநோக்கு பார்வை உள்ளடக்கியதாக மாநில கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
* அனைவருக்குமான கல்வியை வழங்குவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
* தொலைநோக்கு பார்வையுடன் மாநில கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
* அச்சத்துடன் மாணவர்கள் பயிலும் நிலை ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.
* உடற்கல்வி உள்ளிட்ட விஷயங்களையும் பார்த்து பார்த்து கொண்டு வந்துள்ளோம்.
* மாநில கல்விக் கொள்கை காலத்திற்கு ஏற்றாற்போல் வருடந்தோறும் மாற்றப்படும்.
* அச்சம் நிறைந்த தேர்வு என்ற நிலையை மாற்றி மாணவர்களின் திறனை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாநில கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
* இன்றைய சூழ்நிலைக்கு எந்த அறிவியல் பாடங்கள் தேவையோ அதையும் கொண்டு வந்துள்ளோம்.
* 500 பள்ளிகளை வெற்றி பள்ளிகளாக கொண்டு வர உள்ளோம்.
* AI, Robotics போன்ற பாடத்திட்டங்களையும் கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது.
* எத்தகைய பின்னணி கொண்ட மாணவர்களும் எதிர்காலத்தில் எந்த கல்லூரியில் எந்த நிலை அடைய வேண்டும் என நினைக்கும் வகையில் மாநில கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
* 9-ம் வகுப்பு படிக்கும்போதே மாணவ-மாணவிகள் கெரியர் வழிகாட்டி பெற்று எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநில கல்விக்கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில கல்விக்கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மாநில கல்விக்கொள்கையின்படி, தமிழகத்தில் 11-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 8-ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி உறுதி செய்யப்படும். நடப்பு கல்வியாண்டே 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதால் மாணவர்களின் அழுத்தம் குறையும். மேலும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வாய்ப்பாக இருக்கும் என்ற கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- எந்த மாநிலத்திலும் தமிழகத்தை போல் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தியதில்லை.
- முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் நுழைய வேண்டும்.
சென்னை:
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில கல்விக்கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் உடன் இருந்தனர்.
மாநில கல்விக்கொள்கையை வெளியிட்ட பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் பார்த்தாலே ஒரு புதிய ஆற்றல் வந்துவிடும்.
* மாணவர்களை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்து கூறி வருகிறேன்.
* இளைய பருவத்தில் என்ஜாயும் பண்ணலாம், நன்றாகப்படித்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் வரலாம்.
* கொரோனா காலத்தில் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இல்லம் தேடி கல்வி திட்டம் வழங்கினோம்.
* பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் இது சிறப்பு வாய்ந்த விழா.
* எந்த மாநிலத்திலும் தமிழகத்தை போல் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தியதில்லை.
* திராவிட மாடல் அரசில் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காகவே இந்த பாராட்டு விழா.
* திராவிட மாடல் அரசின் தாய்மை உணர்வை காட்டுவதே இந்த பாராட்டு விழா.
* 100 சதவீதம் உயர்கல்வி கற்க வேண்டும் என்பதே நமது இலக்கு. 100 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வி பெற்றனர் என்ற இலங்கை எட்டுவதற்கு சாதித்த மாணவர்கள் உதவ வேண்டும்.
* முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் நுழைய வேண்டும்.
* மாநில கல்விக் கொள்கையை உருவாக்கிய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவுக்கு நன்றி.
* தொலைநோக்கு பார்வையோடு மாநில கல்வி கொள்கையை உருவாக்கி உள்ளோம்.
* காடு எதுவாக இருந்தாலும் சிங்கம்தான் அங்கே ராஜா, அதுபோல் எளிய பின்னணியில் இருந்த வந்த நீங்கள் தான் ஹீரோ.
* மனப்பாடம் பண்ணும் மாணவர்கள் அல்லாமல் சிந்திக்கும் மாணவர்களை உருவாக்க உள்ளோம்.
* அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என நெஞ்சை நிமிர்த்தி பேச செய்த மாணவர்களுக்கு நன்றி.
* தமிழக பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக்கொள்கையே கடைப்பிடிக்கப்படும். தமிழும், ஆங்கிலமும் என இருமொழிக் கொள்கை தான் நமது உறுதியான கொள்கை.
* கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர உள்ளோம்.
* மதிப்பெண்களை நோக்கி அல்ல, மதிப்பீடுகளை நோக்கிய பயணமாக அமைக்கப்படும்.
* பிற்போக்கு சிந்தனைகள் பள்ளிகளில் நுழைய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
- 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' தவிர 'ஸ்போக்கன் தமிழ்' மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும்.
- அங்கன்வாடி மையங்களுக்கு 'தாய்-குழந்தை பராமரிப்பு மையங்கள்' என பெயரிட வேண்டும்.
சென்னை:
தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் வெளியிட்டார்.
மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது.
இந்த குழுவினர் பல்கலைக் கழக துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்டறிந்து கல்விக் கொள்கையை வடிவமைத்தனர்.
அதன்படி சுமார் 650 பக்கங்கள் கொண்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 2023-ம் ஆண்டு அக்டோபரில் தயாரானது. ஆனாலும் வெள்ளப் பாதிப்புகள், பாராளுமன்றத் தேர்தல் பணிகளால் வரைவு அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பின் மாநில கல்விக் கொள்கை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் 2024 ஜூலை 1-ந்தேதி தமிழக அரசிடம் சமர்ப்பித்தனர்.
பள்ளி கல்வித்துறைக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் உடன் இருந்தனர்.
மாநில பள்ளி கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கல்விக்கொள்கை மற்றும் மொழி
மொழி: பள்ளிக்கல்வியில் தமிழ் முதல் மொழியாக இருக்க வேண்டும். தொடக்கநிலை முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ் வழிக்கல்வியை வழங்குதல் அவசியம்.
இருமொழிக்கொள்கை: தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக்கொள்கையை பின்பற்ற வேண்டும்.
'ஸ்போக்கன் தமிழ்': 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' போலவே 'ஸ்போக்கன் தமிழ்' மீதும் கவனம் செலுத்த வேண்டும்.
தேர்வு மற்றும் மதிப்பெண்
பொதுத்தேர்வு: 3, 5, மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் இருக்கக் கூடாது.
நீட்: நீட் தேர்வு இருக்கக் கூடாது. நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.
11 மற்றும் 12-ஆம் வகுப்பு: 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர வேண்டும். கல்லூரி சேர்க்கையின்போது 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களுடன் 11-ஆம் வகுப்பு மதிப்பெண்களும் இடம்பெற வேண்டும்.
நிர்வாகம் மற்றும் கட்டணம்
மாநிலப் பட்டியல்: கல்வி, மாநிலப் பட்டியலில் வர வேண்டும்.
கட்டணக் குழு: சி.பி.எஸ்.இ மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான கட்டணங்களை சீரமைக்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.
கண்காணிப்பு: தனியார் விளையாட்டுப் பள்ளிகள், முன் தொடக்கப் பள்ளிகள் போன்றவற்றை கண்காணிக்க விரிவான ஒழுங்குமுறை உருவாக்கப்பட வேண்டும்.
மாணவர் சேர்க்கை
வயது வரம்பு: 5 வயது பூர்த்தியானவர்கள் 1-ஆம் வகுப்பில் சேரலாம்.
இடஒதுக்கீடு: இரு பெற்றோர்களையும் இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் 1% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி
அங்கன்வாடி மையங்கள்: அங்கன்வாடி மையங்களுக்கு 'தாய்-குழந்தை பராமரிப்பு மையங்கள்' என பெயரிட வேண்டும்.
பல்கலைக்கழகங்கள்:
எம்.ஜி.ஆர்., அண்ணா, மற்றும் தமிழ் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க வேண்டும்.
தமிழ் பல்கலைக்கழகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும்.
தமிழ்ச்சங்கம் நடத்தும் கல்லூரிகளுக்கு தமிழ் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும்.
கிராமப்புறப் பள்ளிகள்: கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள், முறையான பயிற்சி, விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.
சமூக பிரச்சனைகள்
போதைப்பொருள் ஒழிப்பு: ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அக்குழுவில் மனநல ஆலோசகர், சுகாதார அதிகாரி, போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் ஆகியோர் இடம்பெறுவர்.
- 164 அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
- சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
சென்னை:
அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சென்னை ராணி மேரி கல்லூரி மற்றும் மாநில கல்லூரியில் நடக்கும் கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று பார்வையிட்டார்.
அவருடன் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், கல்லூரி கல்வி இயக்குனர் கீதா ஆகியோரும் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-
164 அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் இருக்கின்றன. தற்போது சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு தொடங்கி உள்ளது. சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வில் 643 மாணவ-மாணவிகள் தமிழ்நாடு முழுவதும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல், விரும்பிய இடங்களில் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். நாளை (வியாழக்கிழமை) முதல் பொது கலந்தாய்வு தொடங்க இருக்கிறது.
கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு 15 சதவீதம் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. அரசு கல்லூரிகளில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு இலவச விடுதி, கல்லூரி கட்டணம் என்று அறிவித்ததன் அடிப்படையில் ஆர்வமுடன் பலர் சேருகிறார்கள். அதேபோல், புதுமை பெண் திட்டம் அறிவிக்கப்பட்டதாலும், மாணவிகளின் விண்ணப்பப்பதிவு, சேர்க்கை அதிகரித்துள்ளது.
கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்தால் மட்டும் போதாது. கல்வித்தரமும் உயர வேண்டும் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். மாணவர்களின் திறமையையும், தகுதியையும் வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதுதான் நான் முதல்வன் திட்டம்.
சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார். அதன்படி, அங்குள்ள பேராசிரியர்கள், மாணவர்களும், இங்குள்ளவர்களும் அங்கே சென்று கல்வித்தரத்தை அறிந்து கொள்ள முடியும். வேலைவாய்ப்பு பயிற்சிகளை கொடுக்கவும் இயலும். வரும் காலங்களில் உயர்கல்வித்துறை மாணவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படுகிற துறையாக மாறும்.
மாணவர் சேர்க்கையை போல, கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. அந்த வழக்கு முடிந்ததும், ஜூன் முதல் வாரத்தில் அதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்படும்.
எல்லா பல்கலைக்கழகங்களிலும் மொழி பாடங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறோம். அதுதொடர்பாகவும், மாநில கல்வி கொள்கை குறித்து விவாதிக்கவும் துணைவேந்தர்கள், மண்டல இணை இயக்குனர்கள், கல்லூரி முதல்வர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது.
கவர்னர் துணைவேந்தர்கள் மாநாட்டை 5-ந்தேதி நடத்துகிறார். அதில் கலந்துகொள்வது என்பது துணைவேந்தர்களுடைய தனிப்பட்ட விருப்பம். மாநிலங்கள் மாநில கல்விக்கொள்கையை வகுப்பதற்கு முன்னுரிமை உண்டு. தமிழ்நாட்டை போல, கர்நாடகாவிலும் மாநில கல்வி கொள்கை வகுக்கப்பட உள்ளது. இதில் கவர்னர்கள் கட்டுப்பாட்டோடு இருப்பது நல்லது.
இவ்வாறு அவர் பேசினார்.
- திருப்பூா் மாவட்டத்தில் கருத்துக் கேட்புக்கூட்டம் நாளை 14-ந்தேதி பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறுகிறது.
- மாவட்டக் கல்வி அலுவலா்கள் தலைமையில் நடைபெறுகிறது.
திருப்பூர் :
மாநிலக் கல்விக் கொள்கை வகுப்பதற்காக திருப்பூா் மாவட்டத்தில் நாளை 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்துக்கு தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை வகுப்பதற்காக திருப்பூா் மாவட்டத்தில் கருத்துக் கேட்புக்கூட்டம் நாளை 14-ந்தேதி பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறுகிறது.
இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டமானது மாவட்டக் கல்வி அலுவலா்கள் தலைமையில் நடைபெறுகிறது. கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கல்வியாளா்கள், தலைமை ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியா்கள், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், பெற்றோா் கலந்துகொள்ளலாம்.
கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பும் நபா்கள் தங்களது கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்து கூட்டத்தில் ஒப்படைக்கலாம்.இந்த கருத்துக் கேட்புக் கூட்டமானது திருப்பூா் கே.எஸ்.சி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தாராபுரம் என்சிபி நகரவை மேல்நிலைப் பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாநில கல்விக்கொள்கை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தப்படவுள்ளார்.
- அடுத்த ஆண்டு மாநில கல்விக்கொள்கை அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:
தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழகத்தில் புதிதாக கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. அதன்பின் மாநில கல்விக்கொள்கைக்கான விதிமுறைகள் கடந்த மாதம் வெளியாகின.
இந்நிலையில் தற்போது மாநில கல்விக்கொள்கை குழுவினரோடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் ஜூன் 15-ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில கல்விக்கொள்கை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு மாநில கல்விக்கொள்கை அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.






