search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sports competitions"

    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
    • கண்ணமங்கலம் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் திருவண்ணாமலையில் நடந்த மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.

    இதில் 19 வயதுக்குட்பட்ட உயரம் தாண்டுதலில் ராகுல், 400 மீ ஓட்டப்பந்தயத்தில் இளங்கோவன் ஆகியோர் முதலிடமும், 1500 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் கிஷோர் மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    மேலும் ராகுல், இளங்கோவன் ஆகிய இருவரும் மாநில அளவில் நடக்க உள்ள விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளதாக உடற்கல்வி இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்தார். அப்போது உடற்கல்வி ஆசிரியர் அன்புகுமரன் உடனிருந்தார்.

    • சேலம் ஊரக குறுவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவி களுக்கான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
    • கிளேஸ் ஸ்புரூக்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் 2 நாட்கள் நடை பெற்றது.

    கருப்பூர்:

    தமிழ்நாடு அரசின் பள்ளி துறை சார்பில் சேலம் ஊரக குறுவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவி களுக்கான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

    இதன் இறுதிப்போட்டி சேலம் அழகாபுரம் நகர மலை அடிவாரத்தில் உள்ள கிளேஸ் ஸ்புரூக்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் 2 நாட்கள் நடை பெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த

    900-க்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்து கொண்டனர்.

    அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம், தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் கோமதி ராணி, அனைவரையும் வரவேற்று மாணவர்கள் ஏற்றி வந்த ஜோதியை பெற்றுக் கொண்டார். கிளேஸ் ஸ்புரூக் மெட்ரிக் பள்ளி செயலாளர் பால சுப்பிரமணியம், தலைமை தாங்கினார்.

    பள்ளி தாளாளர் சுப்பிர மணியம், மாவட்ட விளை யாட்டு துறை ஆய்வாளர் லாரன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சுழல் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.

    விழாவில் உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் சார்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் நடைபெற்றது.
    • திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 49 பள்ளிகளைச் சார்ந்த 4 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நத்தம்:

    நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் சார்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி, வினாடி வினா, ஓவியம் ,கட்டுரை,பேச்சுப் போட்டி, சமையல் உள்பட பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் நடைபெற்றது. ஏ.யு. ஆர்.ஏ.2023 கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 49 பள்ளிகளைச் சார்ந்த 4 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டிகளில் 9,10,11, 12-ம் வகுப்புகளுக்கான பிரிவுகளில் 140 புள்ளிகளைப் பெற்று மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் என்.பி.ஆர்.பொறியியல் கல்லூரி முதல்வர்கள் சுந்தரராஜன், கலை அறி வியல் கல்லூரி முதல்வர் சீனிவாசன், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஆனந்த், நர்சிங் கல்லூரி முதல்வர் அன்னலெட்சுமி மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நூற்றாண்டு விழா மதுரை மாநகர் பகுதிகளில் தொடர்ந்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 43 மாணவர்களுக்கு கேடயம்- பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    மதுரை

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மதுரை மாநகர் பகுதிகளில் தொடர்ந்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு நிகழ்வாக உலக சாதனையை நோக்கி மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் 2752 தூய்மை பணியாளர்களை கொண்டு 1 மணி நேரம் 20 நிமிடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவத்தை வடிவமைத்து உலக சாதனை "டிரம்ப் புத்தகத்தில்" இடம் பெற்றுள்ளது. மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களிடையே கருணாநிதி நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.

    போட்டிகள் முதலில் பள்ளி அளவில் நடத்தப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 180 மாணவ, மாணவியர்கள் ஐந்து மண்டலங்களிலும் மண்டல அளவில் நடைபெற்ற போட்டி களில் பங்கு பெற்றனர்.

    மதுரை மாநகராட்சி 27 நடுநிலைப் பள்ளிகள், 24 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளை நடத்துவதற்கு ஒருங்கிணைப் பாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது. இந்த பேச்சுப்போட்டியில் 6 ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் 89 மாணவ, மாணவிகள், 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் 40 மாணவ, மாணவிகள், 11 ஆம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு பயிலும் 23 மாணவ, மாணவிகள் என மொத்தம் 152 மாணவ, மாணவிகள் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டனர். மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக் கிடையே நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி ெபான்வசந்த், கலெக்டர் சங்கீதா, ஆணையாளர் பிரவீன் குமார், பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் ஞான சம்பந்தன், பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி, துணை ஆணையாளர் சரவணன், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சர்மா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாநகராட்சி கல்வி அலுவலர் நாகேந்திரன், கவுன்சிலர் முருகன், ஒருங்கி ணைப்பா ளர் சண்முகதிருக்குமரன் மற்றும் ஆசிரியர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமத்திவேலூர், பள்ளி சாலையில் உள்ள கிளை நூலக வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம், கடந்த 9-ம் தேதி தொடங்கி வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • இப்பயிற்சி முகாமில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பள்ளி சாலையில் உள்ள கிளை நூலக வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம், கடந்த 9-ம் தேதி தொடங்கி வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இப்பயிற்சி முகாமில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், புத்தகம் படித்தல், கணினி பயன்பாடு, கதை சொல்லுதல், கைவினை பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா, செஸ், கேரம் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும் ஆர்வமுள்ள மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என பரமத்திவேலூர் 2-ம் நிலை கிளை நூலகர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • புறா மற்றும் கலர் வண்ண பலூன்களை பறக்க விட்டனர்
    • மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது

    போளூர்:

    போளூர் ஸ்ரீ ராமஜெயம் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடந்தன. போளூர் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஒலிம்பிக் தீபச்சுடரை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

    போளூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி முக்கிய வீதி வழியாக சென்றது சாரண சாரணியர் மற்றும் பல மாணவ மாணவிகளின் அணி வகுப்போடு போளூர் ஸ்ரீ ராம ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலை அடைந்த தீபச்சுடரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீ ராம ஜெயம் கல்வி நிறுவனத்தின் சேர்மன் ஏழுமலையிடம் கொடுத்தனர்.

    பின்பு சிறப்பு விருந்தினர் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து மாணவ, மாணவி களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். தேசிய கொடி மற்றும் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையுணர்வு சமத்துவத்தை பின்பற்ற வேண்டும் என்று புறா மற்றும் கலர் வண்ண பலூன்களை வானத்தை நோக்கி பறக்க விட்டார்.

    மேலும் அவர் பேசுகையில்:-

    மாணவர்கள் படிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டிலும் கலந்து கொள்ள வேண்டும் மாணவர்களாகிய நீங்கள் விளையாடுவதன் மூலம் நல்ல ஆரோக்கியமான உடல் நலத்தை பின்பற்றலாம் எனக் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாணவ மாணவர்களின் கலை நிகழ்ச்சி பிரமிடுகள் போன்றவை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மெட்ரிக் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பி.ஆர்த்தி மற்றும் சிபிஎஸ்இ பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சரவணகுமார் மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜேஷ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் ஆண்டனி தாமஸ் நன்றி கூறினர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தென்மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடந்தது.
    • போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை ஆசிரியர்களும், மற்ற ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை யொட்டி காளீஸ்வரி கல்லூரியின் உடற்கல்விதுறை சார்பில் தென்மா வட்டத்தை சேர்ந்த 19 வயதிற்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கான கைப்பந்து, கூடைப்பந்து, கபடி மற்றும் கோ-கோ போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை காளீஸ்வரி குழுமத்தின் இயக்குநர் ராஜேஷ் தொடங்கி வைத்தார்.

    மொத்தம் 38 அணிகளை சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்றனர். கைப்பந்து மற்றும் கூடைப்பந்தில் நெல்லை எம்.என்.எம். அப்துல் ரகுமான் மேல்நிலைப்பள்ளியும், கபடி போட்டியில் ராஜபா ளையம்,ஆர்.சி.மீ னாட்சிபுரம் மேல்நிலைப்பள்ளியும், கோ-கோ போட்டியில் திருத்தங்கல் எஸ்.என்.ஜி. பெண்கள் மேல்நி லைப்பள்ளி அணியும் முதலிடத்தை பெற்றன.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு காளீஸ்வரி குழுமத்தின் இயக்குநர் ராஜேஷ் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி துறை ஆசிரியர்களும், மற்ற ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    • மாவட்ட கலெக்டர் அம்ரித், பலூன்க ளை பறக்கவிட்டு தொடங்கி வைத்தார்.
    • பல்வேறு போட்டிகள் வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித், பலூன்க ளை பறக்க விட்டு தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் பதவியேற்ற நாள் முதல் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அதேபோன்று விளையாட்டுத் துறைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

    அதன் அடிப்படையில் இன்றைய தினம் பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்ற கால்பந்து போட்டி தொடங்கி வைக்கப்பட்டது.

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ-

    மாணவிகள், மாற்றுத்திற னாளிகள், அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவினர் என அனைவரும் பங்கேற்கும் வகையில் கால்பந்து போட்டி, தடகள போட்டி, இறகுபந்து போட்டி, கபடி போட்டி, சிலம்பம், நீச்சல் போட்டி, கிரிக்கெட் போட்டி, ஆக்கிப் போட்டி, கையுந்து போட்டி என பல்வேறு போட்டிகள் வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது.

    எனவே அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்று நீலகிரி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பள்ளி அளவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை வாழ்த்தி, அணி தலைவர்களிடம் கால்பந்தினை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி தாசில்தார் ராஜசேகர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • தமிழக முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டுப் போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.
    • பள்ளி மாணவியருக்கான 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டப்பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில், மாவட்டம் முழுவதும் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழக முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டுப் போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    பள்ளி மாணவியருக்கான 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டப்பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில், மாவட்டம் முழுவதும் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இறகுப் பந்து போட்டியில் 120 பேரும், வாலிபால் போட்டியில் 9 அணிகளைச் சேர்ந்த 108 பேரும் என மொத்தம் 628 மாணவியர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    போட்டியில், முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு முறையே, ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். இன்று முதல் 10-ந் தேதி வரை, பள்ளி மாணவ, மாணவியருக்கு வாலிபால், கால்பந்து, சிலம்பம், மேசைப்பந்து, கபடி, கூடைப்பந்து, நீச்சல், மட்டைப்பந்து , ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.

    அதேபோல், வருகிற 6-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி வரை, கல்லூரி மாணவ, மாணவியருக்கு, நீச்சல், இறகுப் பந்து, தடகளம், கையுந்து பந்து, கபடி, கூடைப்பந்து, கால்பந்து, மேசைப்பந்து, மட்டைப்பந்து, சிலம்பம், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

    மேலும், வருகிற 13 மற்றும் 15-ந் தேதிகளில் அரசு ஊழியர்களுக்கு, கபடி, தடகளம், வாலிபால், இறகு பந்து போட்டிகளும், வரும் 14-ந் தேதி, பொது பிரிவினருக்கு, கபடி, தடகளம், சிலம்பம், வாலி பால், இறகு பந்து, மட்டைபந்து ஆகிய போட்டிகளும், வரும் 15-ந் தேதி, மாற்றுத்திறனாளிகளுக்கு, கபடி, தடகளம், சிறப்பு கையுந்துபந்து, இறகுப்பந்து, எறிபந்து போட்டிகளும் நடைபெற உள்ளது.

    அனைத்து போட்டி களிலும், வெற்றி பெறுப

    வர்களுக்கு, மொத்தம் ரூ.41.58 லட்சம் மதிப்பி லான பரிசுத்தொகை வழங்கப்ப டும் என கலெக்டர் தெரி வித்துள்ளார்.

    • ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
    • இதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:-

    விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    அத்தகைய போட்டிகள் நடைபெறும்போது விளை யாட்டு வீரர்கள் அதிக ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைக்கு ஏற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டியிலும் மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்று சிறந்த வீரர்களாக திகழ்ந்திட வேண்டும்.

    அந்த வகையில் தற்போது இறகுப்பந்து, மேசைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, கபாடி, ஆக்கி, கூடைப்பந்து, நீச்சல் போட்டி, டென்னிஸ், கிரிக்கெட் ஆகிய போட்டிகள் வருகிற 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இப்போட்டியில் அதிகளவு ஆர்வமுடன் பங்கேற்று பயன் பெற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதன் பிறகு 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொங்கலை முன்னிட்டு பாவூர்சத்திரம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் 16-ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் உள்ள வெண்ணியுடையார் சாஸ்தா கோவில் திடலில் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    தென்காசி:

    பொங்கலை முன்னிட்டு பாவூர்சத்திரம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் 16-ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் உள்ள வெண்ணியுடையார் சாஸ்தா கோவில் திடலில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    விழாவிற்கு நெல்லை தெட்சணமாற நாடார் சங்க தலைவரும், பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் காய்கறி மார்க்கெட் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் சங்க தலைவரும், வணிகர் சங்க மாவட்ட தலைவருமான ஆர்.கே.காளிதாசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

    விழாவில் கே.என்.எஸ். குழுமம் நாராயண சிங்கம், சேவியர் டிம்பர்ஸ் உரிமையாளர் சேவியர் ராஜன், எஸ். பி.கே.டிரேடர்ஸ் கண்ணன் ஆகியோரும், குலசேகரபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மதி ெசல்வன், அருணோதயம், வெள்ளப்பாண்டியன், சந்தை மட்டன் ஹோட்டல் லிங்கதுரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மன்ற பொருளாளர் மாயாண்டி பாரதி வரவேற்புரை ஆற்றினார்.

    விழாவிற்கான ஒருங்கிணைப்பு பணிகளை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற பொருளாளர் மாயாண்டி பாரதி, மன்ற செயலாளர் பரமசிவம், துணைத் தலைவர் ஈஸ்வர பாண்டியன், துணைச்செயலாளர் பால் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கபாடி குழு, சிவந்தி ஆதித்தனார் கால்பந்து கழகம், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற உறுப்பினர்கள் மற்றும் காமராஜ் நகர் பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.


    • தைப்பொங்கலை முன்னிட்டு பல வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • குறிப்பாக நந்தவனத் தெரு பகுதியில் கண்களை கட்டிக்கொண்டு கோழிகள் பிடிக்கும் விளையாட்டில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதிகளில் தைப்பொங்கலை முன்னிட்டு பல வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருச்செங்கோடு நகர பகுதிகளான நந்தவனத் தெரு, பாவடி தெரு, நெசவாளர் காலனி சட்டையம்புதூர், சூரியம்பாளையம் கூட்டப்பள்ளி, நாமக்கல் ரோடு எட்டிமடைப்புதூர் அம்பேத்கர் நகர், பக்தவச்சலம் நகர், கீழேரிப்பட்டி, கொல்லப்பட்டி என பல்வேறு பகுதிகளில் சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்களுக்கான பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    குறிப்பாக நந்தவனத் தெரு பகுதியில் கண்களை கட்டிக்கொண்டு கோழிகள் பிடிக்கும் விளையாட்டில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். நெசவாளர் காலனி பகுதியில் இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் இளைஞர்கள் தங்களது உடல் வலிமையை வெளிப்படுத்தினர். சூரியம்பாளையம் பகுதியில் பல்வேறு பிரிவுகளில் கபடி போட்டிகள் ஆண்களுக்கு நடத்தப்பட்டது.

    சட்டையம்புதூர் பகுதியில் இட்லி சாப்பிடும் போட்டி, வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் வெகுவாக பார்வையாளர்களை ரசிக்க வைத்தது . பாவடித்தெருவில் திருக்குறள் ஒப்புவித்தல், எழுதுதல் போட்டிகள் நடத்தியதில் மாணவர்கள் ஆர்வமுடன்

    பங்கேற்றனர்.

    தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்ற இப் போட்டிகளில் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், பெண்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ×