என் மலர்

    நீங்கள் தேடியது "sports competitions"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புறா மற்றும் கலர் வண்ண பலூன்களை பறக்க விட்டனர்
    • மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது

    போளூர்:

    போளூர் ஸ்ரீ ராமஜெயம் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடந்தன. போளூர் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஒலிம்பிக் தீபச்சுடரை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

    போளூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி முக்கிய வீதி வழியாக சென்றது சாரண சாரணியர் மற்றும் பல மாணவ மாணவிகளின் அணி வகுப்போடு போளூர் ஸ்ரீ ராம ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலை அடைந்த தீபச்சுடரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீ ராம ஜெயம் கல்வி நிறுவனத்தின் சேர்மன் ஏழுமலையிடம் கொடுத்தனர்.

    பின்பு சிறப்பு விருந்தினர் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து மாணவ, மாணவி களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். தேசிய கொடி மற்றும் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையுணர்வு சமத்துவத்தை பின்பற்ற வேண்டும் என்று புறா மற்றும் கலர் வண்ண பலூன்களை வானத்தை நோக்கி பறக்க விட்டார்.

    மேலும் அவர் பேசுகையில்:-

    மாணவர்கள் படிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டிலும் கலந்து கொள்ள வேண்டும் மாணவர்களாகிய நீங்கள் விளையாடுவதன் மூலம் நல்ல ஆரோக்கியமான உடல் நலத்தை பின்பற்றலாம் எனக் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாணவ மாணவர்களின் கலை நிகழ்ச்சி பிரமிடுகள் போன்றவை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மெட்ரிக் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பி.ஆர்த்தி மற்றும் சிபிஎஸ்இ பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சரவணகுமார் மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜேஷ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் ஆண்டனி தாமஸ் நன்றி கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தென்மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடந்தது.
    • போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை ஆசிரியர்களும், மற்ற ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை யொட்டி காளீஸ்வரி கல்லூரியின் உடற்கல்விதுறை சார்பில் தென்மா வட்டத்தை சேர்ந்த 19 வயதிற்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கான கைப்பந்து, கூடைப்பந்து, கபடி மற்றும் கோ-கோ போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை காளீஸ்வரி குழுமத்தின் இயக்குநர் ராஜேஷ் தொடங்கி வைத்தார்.

    மொத்தம் 38 அணிகளை சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்றனர். கைப்பந்து மற்றும் கூடைப்பந்தில் நெல்லை எம்.என்.எம். அப்துல் ரகுமான் மேல்நிலைப்பள்ளியும், கபடி போட்டியில் ராஜபா ளையம்,ஆர்.சி.மீ னாட்சிபுரம் மேல்நிலைப்பள்ளியும், கோ-கோ போட்டியில் திருத்தங்கல் எஸ்.என்.ஜி. பெண்கள் மேல்நி லைப்பள்ளி அணியும் முதலிடத்தை பெற்றன.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு காளீஸ்வரி குழுமத்தின் இயக்குநர் ராஜேஷ் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி துறை ஆசிரியர்களும், மற்ற ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாவட்ட கலெக்டர் அம்ரித், பலூன்க ளை பறக்கவிட்டு தொடங்கி வைத்தார்.
    • பல்வேறு போட்டிகள் வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித், பலூன்க ளை பறக்க விட்டு தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் பதவியேற்ற நாள் முதல் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அதேபோன்று விளையாட்டுத் துறைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

    அதன் அடிப்படையில் இன்றைய தினம் பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்ற கால்பந்து போட்டி தொடங்கி வைக்கப்பட்டது.

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ-

    மாணவிகள், மாற்றுத்திற னாளிகள், அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவினர் என அனைவரும் பங்கேற்கும் வகையில் கால்பந்து போட்டி, தடகள போட்டி, இறகுபந்து போட்டி, கபடி போட்டி, சிலம்பம், நீச்சல் போட்டி, கிரிக்கெட் போட்டி, ஆக்கிப் போட்டி, கையுந்து போட்டி என பல்வேறு போட்டிகள் வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது.

    எனவே அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்று நீலகிரி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பள்ளி அளவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை வாழ்த்தி, அணி தலைவர்களிடம் கால்பந்தினை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி தாசில்தார் ராஜசேகர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழக முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டுப் போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.
    • பள்ளி மாணவியருக்கான 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டப்பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில், மாவட்டம் முழுவதும் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழக முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டுப் போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    பள்ளி மாணவியருக்கான 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டப்பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில், மாவட்டம் முழுவதும் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இறகுப் பந்து போட்டியில் 120 பேரும், வாலிபால் போட்டியில் 9 அணிகளைச் சேர்ந்த 108 பேரும் என மொத்தம் 628 மாணவியர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    போட்டியில், முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு முறையே, ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். இன்று முதல் 10-ந் தேதி வரை, பள்ளி மாணவ, மாணவியருக்கு வாலிபால், கால்பந்து, சிலம்பம், மேசைப்பந்து, கபடி, கூடைப்பந்து, நீச்சல், மட்டைப்பந்து , ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.

    அதேபோல், வருகிற 6-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி வரை, கல்லூரி மாணவ, மாணவியருக்கு, நீச்சல், இறகுப் பந்து, தடகளம், கையுந்து பந்து, கபடி, கூடைப்பந்து, கால்பந்து, மேசைப்பந்து, மட்டைப்பந்து, சிலம்பம், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

    மேலும், வருகிற 13 மற்றும் 15-ந் தேதிகளில் அரசு ஊழியர்களுக்கு, கபடி, தடகளம், வாலிபால், இறகு பந்து போட்டிகளும், வரும் 14-ந் தேதி, பொது பிரிவினருக்கு, கபடி, தடகளம், சிலம்பம், வாலி பால், இறகு பந்து, மட்டைபந்து ஆகிய போட்டிகளும், வரும் 15-ந் தேதி, மாற்றுத்திறனாளிகளுக்கு, கபடி, தடகளம், சிறப்பு கையுந்துபந்து, இறகுப்பந்து, எறிபந்து போட்டிகளும் நடைபெற உள்ளது.

    அனைத்து போட்டி களிலும், வெற்றி பெறுப

    வர்களுக்கு, மொத்தம் ரூ.41.58 லட்சம் மதிப்பி லான பரிசுத்தொகை வழங்கப்ப டும் என கலெக்டர் தெரி வித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
    • இதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:-

    விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    அத்தகைய போட்டிகள் நடைபெறும்போது விளை யாட்டு வீரர்கள் அதிக ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைக்கு ஏற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டியிலும் மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்று சிறந்த வீரர்களாக திகழ்ந்திட வேண்டும்.

    அந்த வகையில் தற்போது இறகுப்பந்து, மேசைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, கபாடி, ஆக்கி, கூடைப்பந்து, நீச்சல் போட்டி, டென்னிஸ், கிரிக்கெட் ஆகிய போட்டிகள் வருகிற 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இப்போட்டியில் அதிகளவு ஆர்வமுடன் பங்கேற்று பயன் பெற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதன் பிறகு 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொங்கலை முன்னிட்டு பாவூர்சத்திரம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் 16-ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் உள்ள வெண்ணியுடையார் சாஸ்தா கோவில் திடலில் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    தென்காசி:

    பொங்கலை முன்னிட்டு பாவூர்சத்திரம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் 16-ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் உள்ள வெண்ணியுடையார் சாஸ்தா கோவில் திடலில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    விழாவிற்கு நெல்லை தெட்சணமாற நாடார் சங்க தலைவரும், பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் காய்கறி மார்க்கெட் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் சங்க தலைவரும், வணிகர் சங்க மாவட்ட தலைவருமான ஆர்.கே.காளிதாசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

    விழாவில் கே.என்.எஸ். குழுமம் நாராயண சிங்கம், சேவியர் டிம்பர்ஸ் உரிமையாளர் சேவியர் ராஜன், எஸ். பி.கே.டிரேடர்ஸ் கண்ணன் ஆகியோரும், குலசேகரபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மதி ெசல்வன், அருணோதயம், வெள்ளப்பாண்டியன், சந்தை மட்டன் ஹோட்டல் லிங்கதுரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மன்ற பொருளாளர் மாயாண்டி பாரதி வரவேற்புரை ஆற்றினார்.

    விழாவிற்கான ஒருங்கிணைப்பு பணிகளை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற பொருளாளர் மாயாண்டி பாரதி, மன்ற செயலாளர் பரமசிவம், துணைத் தலைவர் ஈஸ்வர பாண்டியன், துணைச்செயலாளர் பால் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கபாடி குழு, சிவந்தி ஆதித்தனார் கால்பந்து கழகம், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற உறுப்பினர்கள் மற்றும் காமராஜ் நகர் பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தைப்பொங்கலை முன்னிட்டு பல வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • குறிப்பாக நந்தவனத் தெரு பகுதியில் கண்களை கட்டிக்கொண்டு கோழிகள் பிடிக்கும் விளையாட்டில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதிகளில் தைப்பொங்கலை முன்னிட்டு பல வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருச்செங்கோடு நகர பகுதிகளான நந்தவனத் தெரு, பாவடி தெரு, நெசவாளர் காலனி சட்டையம்புதூர், சூரியம்பாளையம் கூட்டப்பள்ளி, நாமக்கல் ரோடு எட்டிமடைப்புதூர் அம்பேத்கர் நகர், பக்தவச்சலம் நகர், கீழேரிப்பட்டி, கொல்லப்பட்டி என பல்வேறு பகுதிகளில் சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்களுக்கான பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    குறிப்பாக நந்தவனத் தெரு பகுதியில் கண்களை கட்டிக்கொண்டு கோழிகள் பிடிக்கும் விளையாட்டில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். நெசவாளர் காலனி பகுதியில் இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் இளைஞர்கள் தங்களது உடல் வலிமையை வெளிப்படுத்தினர். சூரியம்பாளையம் பகுதியில் பல்வேறு பிரிவுகளில் கபடி போட்டிகள் ஆண்களுக்கு நடத்தப்பட்டது.

    சட்டையம்புதூர் பகுதியில் இட்லி சாப்பிடும் போட்டி, வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் வெகுவாக பார்வையாளர்களை ரசிக்க வைத்தது . பாவடித்தெருவில் திருக்குறள் ஒப்புவித்தல், எழுதுதல் போட்டிகள் நடத்தியதில் மாணவர்கள் ஆர்வமுடன்

    பங்கேற்றனர்.

    தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்ற இப் போட்டிகளில் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், பெண்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் ஆண்டு தோறும் தைப்பொங்கலையொட்டி பொங்கல் திருவிழா, சித்தர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
    • இன்று 2-வது நாளாக பாரம்பரிய போட்டிகளான கபடி, கோ-கோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    நெல்லை:

    இந்தாண்டுக்கான சமத்துவ பொங்கலுக்கான விழா நேற்று தொடங்கியது. கல்லூரி முதல்வர் சாந்தமரியா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நேற்று பல்லாங்குழி, கேரம்போர்டு, இறகுபந்து போட்டி, கைப்பந்து போட்டி, மெகந்தி போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    தொடர்ந்து மாறுவேட போட்டி, ஓவியம் வரைதல் போட்டிகள் உள்ளிட்ட போட்டிகளில் மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இன்று 2-வது நாளாக பாரம்பரிய போட்டிகளான கபடி, கோ-கோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நாளை கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கலிடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் கல்லூரியில் உள்ள அனைத்து துறை மாணவ-மாணவிகள் புதுப்பானை யில் பொங்கலிட்டு சமத்துவ பொங்கலை கொண்டாடுகின்றனர். இதையொட்டி கல்லூரி வளாகத்தில் வண்ணமிகு கோலங் களும், தோரணங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்

    வேலூர்:

    முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் காட்பாடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

    விளையாட்டு போட்டி

    கூட்டத்தில் கலெக்டர் குமரவேல் பாண்டியன் பேசியதாவது;

    44 -ஆவது சதுரங்க ஒலிம்பியாட் நிறைவு விழாவின்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின், ஒலிம்பிக் விளையாட்டுகள், கபடி, சிலம்பாட்டம் ஆகிய பாரம்பரிய விளையாட்டு களுக்காக மாநிலம், மாவட்ட அளவில் முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என அறிவித்தாா்.

    அதன்படி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    42 போட்டிகள் மாவட்ட அளவிலும், 8 போட்டிகள் மண்டல அளவிலும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும். இந்த 50 போட்டிகளுக்கும் மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் மே மாதம் நடத்தப்பட உள்ளன.

    பள்ளிகளில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள், வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்தப் போட்டிகள் மூலம் சிறந்த வீரா்கள் தோ்வு செய்யப்பட்டு, மாவட்டத்தின் அணி உருவாக்கப்படும்.

    மாவட்ட அணிகள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும். மாநில போட்டிகளுக்காக ஒவ்வொரு மாவட்ட அணிக்கும் தனியாக சீருடை, பயணச் செலவு, தங்குமிடம், உணவு ஆகியன வழங்கப்படும்.

    மாநிலப் போட்டிகளின் நிறைவு விழா முதல் அமைச்சர் தலைமையில் நடைபெறும்.முதல் 3 இடங்கள் பெரும் மாவட்டங்களுக்கு முதல்அமைச்சா் கோப்பை வழங்கப்படும்.

    விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலா் நொய்லின்ஜான், கல்லூரி கல்வி இணை இயக்குநா் காவேரியம்மாள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2022-2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் சேலம் மாவட்டத்தில் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் மாவட்ட, மண்டல அளவில் நடத்தப்பட உள்ளது.
    • போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் நடக்கின்றன.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் சேலம் மாவட்டத்தில் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் மாவட்ட, மண்டல அளவில் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் நடக்கின்றன. ஆண்-பெண் இருபாலருக்கும் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையானப் போட்டிகளும் என 50 வகையான போட்டிகளும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    15 வயது முதல் 35 வயது வரையிலான பொதுப் பிரிவினர் கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து மற்றும் கையுந்துப்பந்து உள்ளிட்ட போட்டிகளிலும், 12 வயது முதல் 19 வயது வரையிலான பள்ளி மாணவ-மாணவியர்கள் மாவட்ட அளவிலான கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைக்கோல்பந்து, நீச்சல், கையுந்துப்பந்து, மேசைப் பநந்து போட்டிகளிலும், மண்டல அளவிலான டென்னிஸ், பளுத்தூக்குதல், கடற்கரை கையுந்துப்பந்து உள்ளிட்ட போட்டிகளிலும் கலந்துகொள்ளலாம்.

    மேலும், 17 வயது முதல் 25 வயது வரையிலான கல்லூரி மாணவ-மாணவியர்கள் மாவட்ட அளவிலான கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைக்கோல்பந்து, கையுந்துப்பந்து, மேசைப்பந்து போட்டிகளி லும், மண்டல அளவிலான டென்னிஸ், பளுத்தூக்குதல், கடற்கரை கையுந்துப்பந்து உள்ளிட்ட போட்டிகளிலும் கலந்துகொள்ளலாம்.

    மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அளவிலான இறகுப்பந்து, தடகளம், கையுந்துப்பந்து, கபடி, எறிப்பந்து போட்டிகளிலும், மண்டல அளவிலான இறகுப்பந்து, தடகளம், கையுந்துப்பந்து, கபடி, எறிப்பந்து உள்ளிட்ட போட்டிகளிலும், அரசு ஊழியர்கள் மாவட்ட அளவிலான கபடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்துப்பந்து, செஸ் போட்டிகளிலும் கலந்துகொள்ளலாம்.

    மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பு இல்லை. இப்போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள பயணப்படி, சிறப்பு சீருடை, தங்கும் வசதி ஆகியவை வழங்கப்படும்.

    மாவட்ட அளவிலானப் போட்டிகளில் தனிநபர்

    பிரிவில் வெற்றிப்பெறு பவர்களுக்கு ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.1,000 - எனவும், இரட்டையர் பிரிவிற்கு ரூ.6 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.2 ஆயிரம் எனவும், குழுப்போட்டிகளுக்கு குழு எண்ணிக்கையிற்கேற்ப ஒவ்வொருவருக்கும் தலாரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.1,000 எனவும் வழங்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பப்படும் விளையாட்டு வீரர் வீராங்க னைகள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வீரர்களின் தனிநபர் மற்றும் குழு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இணையதளம் மூலம் பதிவு செய்யாதவர்கள் போட்டியில் கலந்துகொள்ள இயலாது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin