search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள்
    X

    விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்.

    மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள்

    • வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
    • இதில் 18 வயதிற்கு உட்பட்ட 52 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்தில் மாற்றுத்–திறன் கொண்ட குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில் 18 வயதிற்கு உட்பட்ட 52 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    பலவிதமான விளை–யாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டி–யில் கலந்து கொண்ட மாண–வர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் ரவி, மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயகுமாரி, புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன், நாமகிரிப்–பேட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் செண்பக வடிவு, வட்டார ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பா சிரியர்கள் அருள் ராஜா, சரவணன் மற்றும் இயன்முறை மருத்துவர் சுஷ்மிதா மற்றும் பகுதிநேர ஆயத்த மையப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×