என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Public health workers"
- 100 மீட்டர் ஓட்ட போட்டியில் நெல்லை மாவட்ட சுகாார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் பங்கேற்று ஓடினார்.
- நெல்லை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தாய் கேர் திட்டத்தை முதல்-அமைச்சர் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.
நெல்லை:
தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் கொண் டாடப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் இதற்கான விழா நடைபெற்று வருகிறது.
இத்துறையின் பணியா ளர்களை ஊக்குவிக்கும் விதமாக பாளை அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று அவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பொது சுகாதாரம்- நோய் தடுப்பு துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.
அவர்களுக்கு ஓட்டப் பந்தம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டி களை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
100 மீட்டர் ஓட்ட போட்டியில் நெல்லை மாவட்ட சுகாார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் பங்கேற்று ஓடினார். விழாவில் கலெக்டர் பேசியதாவது:-
அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. கொரோனா காலத்தில் பொது சுகாதாரத் துறையினர் மிக சிறப்பாக பணியாற்றினார்கள். நெல்லை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தாய் கேர் திட்டத்தை முதல்-அமைச்சர் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.இவை அனைத்தும் உங்களால் சாத்தியமானது. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராஜேந்திரன் கூறும்போது, பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை யொட்டி விழிப்புணர்வு ஜோதி பல்வேறு மாவட்டங் களுக்கு எடுத்து செல்லப்ப டுகிறது. இதுவரை 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு சென்றுள்ளது.
விழிப்புணர்வு ஜோதி வருகிற 10-ந் தேதி தென்காசியில் இருந்து நெல்லை கொண்டு வரப்படுகிறது. அதற்கு கலெக்டர் விஷ்ணு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்