search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் - ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    ராஜா எம்.எல்.ஏ மாணவர் ஒருவருக்கு பரிசு வழங்கிய காட்சி.


    சங்கரன்கோவிலில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் - ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் சங்கரன்கோவில் ஒன்றியம் சார்பாக வட்டார வள மையத்தில் நடந்தது.
    • 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள 35 மாற்றுத்திறனாளி மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறை - மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ் விளையாட்டுப் போட்டிகள் சங்கரன்கோவில் ஒன்றியம் சார்பாக வட்டார வள மையத்தில் நடந்தது. போட்டிகளை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தனர். இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஓட்டப்பந்தயம், பந்தை வட்டத்திற்குள் வைத்தல், எறிபந்து விளையாட்டு முதலியவை நடைபெற்றன. 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள 35 மாற்றுத்திறனாளி மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். முடி வில் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்ப ட்டது.


    இதில் மாவட்ட துணை செயலாளர் புனிதா, மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரிய துரை, நகர செயலாளர் பிரகாஷ், இளைஞரணி சரவணன், மாவட்ட பிரதிநிதி டைட்டஸ் ஆதித்தன், முத்துக்கு மார், அவைத் தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் கேஎஸ்எஸ் மாரியப்பன், சுப்புத்தாய், முத்துக்குமார் பொருளாளர் லாசர் மற்றும் ரமேஷ், வைரவேல், கிளைச் செயலாளர் முருகராஜ், சதீஷ் செல்வராஜ் ஆதி மாவட்ட நெசவாளர் அணி சோம செல்வ பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி பத்மநாபன், மாணவர் அணி கார்த்தி, அப்பாஸ் அலி, உதயகுமார், அஜய் மகேஷ் குமார் வார்டு செயலாளர்கள் தடிகாரன், விக்னேஷ், வீரமணி சுரேஷ், சரவணன் மற்றும் கார்த்தி, குட்டி, செல்வம், அன்சாரி, ஜான்சன், மாவட்ட சிறுபான்மை பிரிவு யோசேப்பு, முருகன், ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் முத்துச் செல்வி, வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் சண்முகவடிவு மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×