என் மலர்
நீங்கள் தேடியது "Erode bypoll"
- ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனைப் போட்டி நிலவுகிறது.
- ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உயிரிழந்ததை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நாளை மறுநாள் ( பிப்ரவரி 5-ம் தேதி) இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 7-ம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
தி.மு.க. சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முக்கிய எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனைப் போட்டி நிலவுகிறது.
கடந்த 20-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதன் படி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதில் இருந்து தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் வாக்கு வேட்டையை துவங்கின.
கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல் போன்று எந்த ஒரு ஆர்ப்பாட்டம் இன்றியும், பரபரப்பு இன்றியும் தற்போதைய தேர்தல் களம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஒரு பக்கம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் தி.மு.க.-வினரும், சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 2 நாட்களாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இரு தரப்பினரும் தீவிர இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று மாலை 6 மணிக்கு பிறகு தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை. ஈரோட்டில் தங்கி இருக்கும் வெளியூர் கட்சி நிர்வாகிகள் இன்று மாலைக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (பிப்ரவரி 5-ம் தேதி) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 8-ம் தேதி சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மதியம் முடிவுகள் தெரிந்து விடும்.
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அங்கு தேர்தல் திருவிழா களைகட்டியது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
இந்நிலையில், தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடித்திட ஒரு பொது பார்வையாளர், ஒரு காவல் பார்வையாளர் என 2 தேர்தல் பார்வையாளர்களை இந்திய தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
பொது பார்வையாளராக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் வரும் 7-ம் தேதி முதல் மார்ச் மாதம் 2-ம் தேதி வரை அங்கு பணியில் இருப்பார்.
காவல் பார்வையாளராக ஆந்திராவைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி சுரேஷ்குமார் சாதிவ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் வரும் 7-ம் தேதி முதல் தேர்தல் நடைபெறும் நாளான 27-ம் தேதி வரை தேர்தல் காவல்பணியில் இருப்பார்.
இதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் ஜெயராமன் அருணாசல பிரதேச இடைத்தேர்தலுக்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரி இ.ரவீந்திரன் மேற்குவங்காள இடைத்தேர்தலுக்கும் பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.
- பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காயத்ரி ரகுராமை அக்கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கினார்.
- ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என அண்ணாமலைக்கு சவால் விட்டுள்ளார்.
சென்னை:
ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன். நான் உங்களை எதிர்த்து நிற்பேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடா என்று பார்ப்போம் என பதிவிட்டுள்ளார்.