ஈரோடு இடைத்தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட தயாரா? - அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால்

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காயத்ரி ரகுராமை அக்கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கினார்.ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என அண்ணாமலைக்கு சவால் விட்டுள்ளார்.
அண்ணாமலை, காயத்ரி ரகுராம்
அண்ணாமலை, காயத்ரி ரகுராம்
Published on

சென்னை:

ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன். நான் உங்களை எதிர்த்து நிற்பேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடா என்று பார்ப்போம் என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com