என் மலர்
நீங்கள் தேடியது "Maharashtra polls"
- முதல் மந்திரி பட்னாவிஸ் போட்டியிட்ட தொகுதியில் முறைகேடு நடந்துள்ளது.
- இந்த தேர்தலில் நடந்த முறைகேட்டுக்கு தேர்தல் கமிஷனும் உடந்தையா என்றார்.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தொகுதியில் 6 மாதத்தில் 29,219 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர் என செய்தி வெளியாகி இருந்தது.
இதுதொடர்பாக, மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் போது முதல் மந்திரி பட்னாவிஸ் போட்டியிட்ட தொகுதியில் முறைகேடு நடந்துள்ளது.
ஐந்தே மாதங்களில் பட்னாவிஸ் போட்டியிட்ட நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை 8 சதவீதம் அதிகரித்தது எப்படி? 6 மாதத்தில் 29,219 வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
முன்பின் அறிமுகம் இல்லாத பலர் ஓட்டளித்தனர் என வாக்குச்சாவடி முகவர்கள் கூறி இருக்கின்றனர். ஒரு தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை 4 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தாலே அது பற்றி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் நடந்த முறைகேட்டுக்கு தேர்தல் ஆணையமும் உடந்தையா? தேர்தல் ஆணையம் மவுனம் காப்பது ஏன்?
டிஜிட்டல் வடிவ வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்ட சி.சி.டி.வி., காட்சிகளை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
ஆலோசனைக்கு ராகுலை அழைத்தோம். ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. ராகுலைச் சந்தித்து விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம். அவர் குறிப்பிடும் எந்த நாளிலும் சட்டசபை தேர்தல் நடைமுறைகள் குறித்து விளக்க தயாராக உள்ளோம்.
அனைத்து தேர்தல்களும் சட்டவிதிகளின்படியே நடக்கிறது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதனை தீர்த்து வைக்கிறோம்.
தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர்கள் நீதிமன்றத்தை நாடி உள்ளனர் என தெரிவித்துள்ளது.
- சிவசேனா தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டேதான் முதல்வராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தல்.
- அதிக இடங்களை பிடித்ததால் முதல்வர் பதவியை பெற வேண்டும் என பா.ஜ.க. தலைவர் பிடிவாதம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 288 தொகுதிகளில் சுமார் 230 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தேர்தலுக்கு முன்னதாக சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தார். பா.ஜ.க.-வின் தேவேந்திர பட்நாவிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக இருந்தனர்.
தற்போது பா.ஜ.க. தனித்து 130 இடங்களுக்கு மேல் வென்றுள்ளது. இதனால் தேவேந்திர பட்நாவிஸ்தான் முதல்வராக வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தினர். அதேவேளையில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். இதுதான் வெற்றிக்கு காரணம். இதனால் அவர்தான் முதல்வரான நீடிக்க வேண்டும் என சிவசேனா காட்சி தலைவர்கள் தெரிவித்தனர். மேலும் பீகார் மாடலில் (பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையிலும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்) ஆட்சியமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனால் முதல்வர் யார் என்பதில் இழுபறி ஏற்பட்டது. இது தொடர்பாக பா.ஜ.க. மேலிடம் பட்நாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
அதன்பின் பா.ஜ.க. தேர்வு செய்யும் முதல்வருக்கு ஆதரவு தெரிவிப்பதாக அஜித் பவார் தெரிவித்தார். அதேபோல் பா.ஜ.க. யாரை முதல்வராக அறிவித்தாலும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம் என ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.
இருந்தபோதிலும் அதிகாரப்பூர்வமாக முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் தொடர் பேச்சுவார்த்தையின் முடிவில் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் துணை முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று அல்லது நாளை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.
5-ந்தேதி பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது. மகாராஷ்டிராவில் ஒருவர் முதல்வராகவும், இருவர் துணை முதல்வராகவும் பதவி ஏற்க இருக்கிறார்கள். தற்போது துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மீண்டும் துணை முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போது அங்கு தீவிர பிரசாரம் நடந்த வருகிறது. இந்த நிலையில் சிரூர் மாவட்டத்தில் உள்ள ராமலிங்க கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான வித்தல் கண்பத் கவடி என்பவர் பரபரப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். பிரபல கிரிக்கெட் வீரர் விராட்கோலி தன்னை ஆதரித்து 25-ந்தேதி தேர்தல் பிரசாரம் செய்ய கிராமத்துக்கு வருகிறார் என்று அறிவித்தார்.
அதோடு விராட் கோலியும் அவரும் நிற்பது போன்ற நோட்டீசுகளை அச்சடித்து கிராமம் முழுக்க ஒட்டினார். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 25-ந்தேதி அந்த கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மக்கள் கூடினார்கள். கிரிக்கெட் வீரர் கோலியைப் பார்க்க பக்கத்து ஊர்களில் இருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டனர்.
அப்போது ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அதில் இருந்து வேட்பாளர் கண்பத் இறங்கினார்.
அவரை தொடர்ந்து விராட் கோலி போலவே அச்சு அசலாக இருந்தவர் இறங்கினார். அவரை பார்க்க கிரிக்கெட் ரசிகர்களும் பொதுமக்களும் முண்டியடித்தனர்.
சிறிது நேரம் கழித்துதான் அவர் விராட் கோலி அல்ல. அவர் போல இருக்கும் போலி நபர் என்று தெரிய வந்தது. வேட்பாளரின் தில்லுமுல்லு அம்பலமானதும் கிராம மக்கள் ஏமாற்றத்துடன் கலைந்தனர்.
இந்த புதுமையான பிரசாரத்தால் தனக்கு வெற்றி கிடைக்கும் என்று வேட்பாளர் கண்பத் நம்பிக்கையுடன் உள்ளார். #ViratKohli






