search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "malappuram"

    கேரளாவின் கொழிஞ்சாம்பாறையில் கோழிக்குஞ்சுக்களை காப்பற்ற முயன்ற போது வீட்டின் மீது மலை சரிந்து விழுந்த விபத்தில் 7 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரளாவில் கடந்த 8-ந்தேதி தொடங்கிய கனமழை தீவிரம் குறையாமல் தொடர்ந்து பெய்து வருகிறது. தமிழக- கேரள எல்லையில் உள்ள வாளையாறு அணை நிரம்பியது. இதனையடுத்து 450 கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் கல்பாத்தி புழா, சித்தூர் புழா வழியாக பாரதப்புழா ஆற்றில் கலக்கிறது. இதனால் பாரதபுழா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் 34 பேர் மழைக்கு பலியானார்கள்.

    இந்நிலையில் மலப்புரம் மாவட்டம் பெரிங்கிளாவ் என்ற இடத்தில் உள்ள மலை அடிவாரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இருந்தனர். அப்பகுதி மக்கள் மலைசரிந்து விழ வாய்ப்புள்ளது. பாதுகாப்பான பகுதிக்கு வரும்படி அழைத்தனர். அதன்படி 4 பேரும் பாதுகாப்பான பகுதிக்கு சென்றனர்.

    அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து கோழிக்குஞ்சுகளுக்கு ஆபத்து நேரிடும் என்று நினைத்த 4 பேரும் மீண்டும் வீட்டிற்கு சென்றனர். அங்கு கோழிக்குஞ்சுகளை மீட்டபோது மலைசரிந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் சிக்கினர்.

    அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஓடிச்சென்று அவர்களை காப்பாற்ற முயன்றனர். அப்போது பொதுமக்களில் 3 பேரும் மற்றொரு மலைசரிவில் சிக்கினர்.

    இது குறித்து பேரிடர்மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக மீட்க முடியாததால் மலைசரிவில் சிக்கிய 8 பேரும் இறந்து விட்டதாக அறிவித்தனர். அவர்களின் பெயர் விபரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    தொடர் மழையால் கொச்சி விமான நிலையம் தண்ணீரில் மூழ்கியது. விமான சேவை ரத்து செய்யப்பட்டது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் வெள்ளம் புகுந்ததால் ரெயில்கள் நிறுத்தப்பட்டன. தொடர் கனமழையால் கேரள மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. #KeralaFloods2018
    கேரள மாநிலம் மலப்புரத்தில் பெண் தபால் அதிகாரியிடம் ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையடித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூரில் உள்ளது தலைமை தபால் அலுவலகம். நேற்று மதியம் பெண் அதிகாரி பார்கவி மற்றும் உதவி அதிகாரி சுரேந்திரன் ஆகியோர் டெபாசிட்தாரர் ஒருவருக்கு கொடுக்க ரூ.4 லட்சத்தை எண்ணி மேஜை அருகே வைத்தனர். டெபாசிட் தாரர் அவசரம் என்று கேட்டதால் சாப்பிட கூட செல்லாமல்அவருக்காக காத்திருந்தனர்.

    அப்போது தொப்பி அணிந்த ஒரு வாலிபர் தபால் அலுவலகத்திற்கு வந்தார். அங்கிருந்த ஊழியர்கள் உள்ளே செல்லக்கூடாது என்று தடுத்தனர். அதையும் மீறி அந்த வாலிபர் உள்ளே சென்றார்.

    பெண் அதிகாரி பார்கவியிடம் தனக்கு பசிக்கிறது. சாப்பிட ஏதாவது தாருங்கள் என்று கேட்டார். மனம் இரங்கிய அதிகாரி தனது பேக்கில் இருந்து ரூ.20 எடுத்தார். உதவி அதிகாரி சுரேந்திரன் ஒரு தபாலை எடுக்க முயன்றார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வாலிபர் மேஜையில் இருந்த ரூ.4 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் சத்தம் போட்டனர். உஷாரான ஊழியர்கள் வாலிபரை மடக்கிப்பிடிக்க தயாரானார்கள். ஆனால் அவர்களால் வாலிபரை பிடிக்க முடியவில்லை. அங்கிருந்து மின்னல் வேகத்தில் வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து திரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தபால் அலுவலகம் எதிரே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் தொப்பி அணிந்த வாலிபர் உள்ளே நுழைவதும், சிறிது நேரத்தில் அவர் வெளியே தப்பி ஓடுவதும் பதிவாகி உள்ளது. கேமிரா பதிவுகளை வைத்து போலீசார் கொள்ளையனை தேடி வருகிறார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் மஞ்சேரி தபால் துறை சூப்பிரண்டு அனில்குமார் திரூர் தலைமை தபால் நிலையத்திற்கு வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். #tamilnews
    நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் வருகிற 1-ந்தேதிக்கு பதில் ஜூன் 5-ந்தேதி பள்ளிகளை திறக்கும்படி கேரள பள்ளி கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் உள்பட சில மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. இதன் காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    மேலும் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக அந்த மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கோழிக்கோடு, மலப்புரம் அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிபா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவும் தன்மை கொண்டதாக இருப்பதால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும் முக கவசம் மற்றும் விஷேச பாதுகாப்பு ஆடை அணிந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


    இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 1-ந்தேதி கேரளாவில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளது. ஆனால் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நிபா வைரஸ் காய்ச்சல் பீதி காரணமாக அந்த மாவட்டங்களை காலி செய்துவிட்டு வெளியூர்களில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.

    இதனால் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் வருகிற 1-ந்தேதிக்கு பதில் ஜூன் 5-ந்தேதி பள்ளிகளை திறக்கும்படி கேரள பள்ளி கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். மற்ற மாவட்டங்களில் வருகிற 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Nipahvirus
    ×