search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயுதப்படை வளாகத்தில் போலீசாருக்கு நவீன உடற்பயிற்சி கூடம்
    X

    கோப்புபடம்.

    ஆயுதப்படை வளாகத்தில் போலீசாருக்கு நவீன உடற்பயிற்சி கூடம்

    • மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
    • தினசரி உடற்பயிற்சி செய்யும் வகையில் இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் காவலர்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வசதியாக திருப்பூரில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் உடற்பயிற்சி கூடம் புதிதாக நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உடனிருந்தார்.காவலர்கள் பணியில் சிறந்து விளங்கவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும், நாள் முழுவதும் சுறு, சுறுப்பாக இயங்கவும் தினசரி உடற்பயிற்சி செய்யும் வகையில் இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×