search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nurses protest"

    • போராட்டம் காரணமாக இன்று காலை காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
    • ஓ.பி. சீட்டு பெற வரிசையில் ஏராளமானோர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மேலும் ஏராளமானோர் உள் நோயாளிகளாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது காய்ச்சல் பரவி வருவதால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வழக்கத்தை விட சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர்கள் இன்று காலை திடீரென பணிகளை புறக்கணித்து ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாதந்தோறும் 7-ந்தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். ஊதியத்தில் பிடித்தம் செய்யும் தொழிலாளர் வைப்புத் தொகை முறையாக கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். 5 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் செவிலியர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் காரணமாக இன்று காலை காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    ஓ.பி. சீட்டு பெற வரிசையில் ஏராளமானோர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. செவிலியர்கள் இல்லாததால் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களின் உதவியுடன் சிகிச்சை அளித்தனர்.

    வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிடக்கோரி நாகையில் சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுனந்தா தேவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநில தலைவர் நாகை செல்வன் கலந்து கொண்டு பேசினார்.

    பணிச் சுமையை குறைக்கும் வகையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி போடும் பணியின் நேரத்தை மாற்ற வேண்டும். தடுப்பூசி போடும் பணிகளுக்கு வாகன வசதி ஏற்பாடு செய்துதர வேண்டும்.

    தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, காழ்ப்புணர்ச்சியோடு சமூக விரோதிகளின் தாக்குதல் நடைபெறுவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிட வேண்டும். கொரோனா தடுப்பூசி முகாம்களை ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்துவதை மாற்றி, சனிக்கிழமைகளில் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சாந்தி நன்றி கூறினார்.
    தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் பெரம்பலூர் ஆட்சியரகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் பெரம்பலூர் ஆட்சியரகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் சகுந்தலா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நீதிமன்ற உத்தரவின்படி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இடமாறுதல் ஆணை பெற்று 8 மாதங்களாகியும் விடுவிக்கப்படாத செவிலியர்களை உடனே விடுவிக்க வேண்டும். அனைவருக்கும் ஏற்புடைய ஒரே மாதிரியான சீருடை வழங்கிட வேண்டும். சங்க மாநில நிர்வாகிகள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி பட்டய, பட்டப்படிப்பு முடித்த செவிலியர்களை பணியமர்த்த வேண்டும்.

    பாகுபாட்டை களைந்து அனைத்து மகளிருக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு கிடைக்க வழிவகை செய்திட வேண்டும். பணியில் சேர்ந்த நாள் முதல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    மாவட்டச்செயலாளர் ஆனந்த், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் குமரிஅனந்தன், முன்னாள் மாவட்ட தலைவர் ஆளவந்தார், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில், சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ராஜ்மோகன், சுகாதார ஆய்வாளர் சங்க மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், நெடுஞ்சாலை பணியாளர் சங்க மாவட்டத்தலைவர் சுப்ரமணியன் உள்பட செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் பலர் பங்கேற்றனர். மாவட்டத் துணைத் தலைவர் ஜெயசித்ரா வரவேற்றார். சங்க நிர்வாகி சரண்யா நன்றி கூறினார்.
    ×