என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    3-வது நாளாக நர்சுகள் போராட்டம் நீடிப்பு : மண்டபத்தை பூட்டி வெளியேற்றியதால் பரபரப்பு
    X

    3-வது நாளாக நர்சுகள் போராட்டம் நீடிப்பு : மண்டபத்தை பூட்டி வெளியேற்றியதால் பரபரப்பு

    • கூடுவாஞ்சேரியை அடுத்த நந்தியம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று அதிகாலையில் நர்சுகள் தஞ்சம் அடைந்தனர்.
    • இன்று 3-வது நாளாக ஆரம்ப சுகாதார நிலையம் முன் அமர்ந்து போராட்டம் நடத்த தொடங்கினார்கள்.

    சென்னை:

    அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 8 ஆயிரம் நர்சுகள் பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னையில் கைது செய்யப்பட்ட நர்சுகளை வெளியேற்றி ஊரப்பாக்கத் தில் உள்ள திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்தனர். கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    நேற்று இரவு மண்டபத்தை விட்டு வெளியேற்றப்பட்ட நர்சுகள் நடந்தே மீண்டும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை அடைந்து அங்கு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் அங்கிருந்து போலீசார் வெளியேற்றினர்.

    அதையடுத்து கூடுவாஞ்சேரியை அடுத்த நந்தியம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று அதிகாலையில் நர்சுகள் தஞ்சம் அடைந்தனர். இன்று 3-வது நாளாக ஆரம்ப சுகாதார நிலையம் முன் அமர்ந்து போராட்டம் நடத்த தொடங்கினார்கள்.

    இது குறித்து சங்க பொதுச்செயலாளர் சுபின் கூறும்போது, போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசு எங்களை மிரட்டுகிறது. பணி நிரந்தரம் செய்ய பணமில்லை என்று அமைச்சர் கூறுகிறார். ஆனால் நாங்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

    Next Story
    ×