search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Governor"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடியரசு தின விழாவில் கவர்னர் ஆரீப் முகமது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர்.
    • மாலையில் கவர்னர் ஆரீப் முகமது கான், தேநீர் விருந்து அளித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கும், கவர்னர் ஆரீப் முகமது கானுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் கவர்னர் ஆரீப் முகமது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் பேசிய கவர்னர், மத்திய அரசின் சாதனைகளை வலியுறுத்தி பேசினார். கருத்து வேறுபாடுகள் வன்முறையாக மாறுவது, ஜனநாயக துரோகம் என்றும் அவர் பேசினார்.

    தொடர்ந்து மாலையில் கவர்னர் ஆரீப் முகமது கான், தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தினை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் புறக்கணித்தனர்.

    கடந்த மாதம் புதிய மந்திரிகள் கணேஷ்குமார் மற்றும் ராமச்சந்திரன் கடனப்பள்ளி ஆகியோர் பதவி பிரமாணத்தின்போது கவர்னர் கொடுத்த தேநீர் விருந்தையும் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது.
    • 135 பக்க அறிக்கையை புறக்கணித்து விட்டு கடைசி பக்கத்தில் உள்ள கடைசி பத்தியை மட்டுமே படித்தார்.

    கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆரிப் முகமது கான் ஆளுநராக இருந்து வருகிறார். ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது.

    ஆண்டின் தொடக்க சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அரசு தயாரிக்கும் கொள்கை அறிவிப்பு அறிக்கையை ஆளுநர் படித்து முடிப்பார். பின்னர் சபாநாயகர் மாநில மொழியில் திரும்ப படிப்பார்.

    இன்று காலை சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. சரியாக 9 மணிக்கு சட்டமன்றத்திற்கு வந்தார் ஆரிப் முகமது கான். அவையில் உள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அறிக்கையின் கடைசி பக்கத்தில் உள்ள கடைசி பத்தியை மட்டும் படித்தார். பின்னர் அவையில் இருந்து சென்றுள்ளார்.

    நான் அறிக்கையின் கடைசி பத்தியை படிக்கப் போகிறேன் என்று தெரிவித்து படித்து முடித்தார். இதற்கு அவருக்கு 1.17 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.

    1.17 நிமிடங்களில் ஆளுநர் உரையை முடித்ததும் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் விருந்து அளிக்க இருக்கிறார். இதில் ஆளுங்கட்சி சார்பில் தலைவர்கள் பங்கேற்பார்களா? என்பது தெரியவில்லை.

    • பல்கலைக்கழகங்களில் சங்பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவதாக கூறி போராட்டம்.
    • கேரள மாநில அரசு தனக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கவில்லை- ஆளுநர் குற்றச்சாட்டு

    கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் திருவனந்தபுரத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எஸ்.எஃப்.ஐ. மாணவர்கள் அவரது காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

    இதனால் கோபம் அடைந்த ஆளுநர் ஆரிஃப் முகமது கான் காரில் இருந்து கீழே இறங்கி ஆவேசமாக பேசினார். அப்போது கேரள மாநில அரசு தனக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், "இது முதல்வரின் சதி. எனக்கு உடல் ரீதியாக காயம் ஏற்படுத்த முதல்வர் பினராயி விஜயன் ஆட்களை அனுப்புகிறார். அரசியலமைப்பு சீர்குலைவது போல் தெரிகிறது. அரசியலமைப்பு இயந்திரத்தின் சீர்குலைவை அனுமதிக்க முடியாது" என்றார்.

    பல்கலைக்கழகங்களில் சங்பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவதாக குற்றம்சாட்டி எஸ்.எஃப்.ஐ. மாணவர்கள் கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கேரள மாநில அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கேரளத்தில் உள்ள கண்ணூா் பல்கலைக்கழக துணைவேந்தராக கோபி நாத் ரவீந்திரனை மறுநியமனம் செய்ய மாநில அரசு பரிந்துரைத்தது.
    • தற்போது மாநிலத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பதவி நீண்ட காலமாக காலியாக உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் நிருபர்களிடம் திருவனந்தபுரத்தில் கூறியதாவது:-

    என்னிடம் ஊடகங்கள் வாயிலாக மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் பேச வேண்டாம். எந்தவொரு மசோதா அல்லது அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றால், ஏன் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கவர்னர் மாளிகைக்கு வந்து முதல்-மந்திரி விளக்கம் அளிக்க வேண்டும்.

    அவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டால், பாரபட்சம் இல்லாமல் எந்தவொரு மசோதா, அவசரச் சட்டம் அல்லது பரிந்துரையை தகுதி அடிப்படையில் பரிசீலிப்பேன் என உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்தாா்.

    கேரளத்தில் உள்ள கண்ணூா் பல்கலைக்கழக துணைவேந்தராக கோபி நாத் ரவீந்திரனை மறுநியமனம் செய்ய மாநில அரசு பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரைக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளித்தாா். இதற்கு எதிரான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 'பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை நியமிக்கவோ, மறு நியமனம் செய்யவோ கவர்னர் மட்டுமே தகுதியுடையவா். ஆனால், ரவீந்திரனின் மறுநியமனத்தில் மாநில அரசின் தலையீடு இருந்தது தெளிவாகத் தெரிகிறது' என்று கூறி, ரவீந்திரனின் மறுநியமனத்தை அண்மையில் ரத்து செய்தது.

    இது தொடா்பாக கவர்னர் ஆரிப்பிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, 'ரவீந்திரனின் மறுநியமன விவகாரத்தில் மாநில அரசின் தலைமை வக்கீலிடம் ஆலோசனை கோரினேன். அப்போது ரவீந்திரனை மறுநியமனம் செய்யலாம் என்று அரசுத் தலைமை வழக்குரைஞா் கூறினாா். அவா் சட்டரீதியாக அளித்த ஆலோசனையைத் தொடா்ந்து, அந்த விவகாரத்தில் மாநில அரசின் அழுத்தத்துக்கு அடி பணிந்தேன். எனினும் நான் செய்தது தவறு என்பதை ஊடகத்தின் முன்பாக ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.

    தற்போது மாநிலத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பதவி நீண்ட காலமாக காலியாக உள்ளது. அதற்கு மாநில அரசே காரணம். உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக துணைவேந்தா்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன். துணைவேந்தா்கள் நியமனத்தில் மாநில அரசின் அறிவுரைகளை ஏற்கத் தயாா். ஆனால், அரசின் அழுத்தத்துக்கு அடி பணியமாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 9 மசோதா குறித்து ஆளுநர் முடிவு எடுதுள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • முதலமைச்சர்கள், மந்திரிகளுடன் ஆளுநர் சந்தித்து சட்டம் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்.

    பா.ஜனதா அல்லாத கட்சிகள் ஆளும் பல்வேறு மாநிலங்களில், ஆளுநர்களுக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. மேற்கு வங்காளம், டெல்லி, பஞ்சாப், கேரளா மற்றும் தமிழகம் இதில் அடங்கும்.

    பஞ்சாப் மாநிலம் முதல்முதலாக உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. பின்னர் கேரளா மற்றும் தமிழ்நாடு அரசு சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

    பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கு விசாணையின்போது, "ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது விரைவாக முடிவு எடுக்க வேண்டும்.

    மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்படும் சட்டத்தை, ஆளுநர்களால் தடுத்து நிறுத்த முடியாது" என உச்சநீதிமன்றம் தனது கண்டனத்தை தெரிவித்தது. இது எல்லா மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும் என எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் கேரள மாநில அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநர் ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். 7 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்து இருப்பதாகவும், நிதி மசோதா உள்ளிட்ட 8 மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்து இருப்பதாகவும் கேரள மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

    அப்போது ஆளுநர் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரலும் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் "கேரள மாநில அரசு அனுப்பிய மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இரண்டு வருடங்களாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்" என கேள்வி எழுப்பியது.

    அதற்கு நான் இங்கு விரிவாக செல்ல விரும்பவில்லை. அது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்துவதாக இருக்கும் என அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். அதற்கு "நாங்கள் அதில் ஈடுபடுவோம், அது அரசியலமைப்பிற்கு எங்களுடைய பொறுப்பு பற்றியது. மேலும், மக்கள் இதுகுறித்து எங்களிடம் கேட்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மற்றும் பொறுப்பு அமைச்சர் இருவரிடமும் ஆளுநர் விவாதிப்பார் என்பதை பதிவு செய்வோம். சில அரசியல் சாமர்த்தியத்தால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம், இல்லையெனில், நாங்கள் சட்டத்தை வகுத்து, அரசியலமைப்பின் கீழ் எங்கள் கடமையைச் செய்வோம்" என பெஞ்ச் பதில் அளித்தது.

    மேலும், கூடுதல் கோரிக்கைகளுடன் மனுத்தாக்கல் செய்ய கேரள அரசு அனுமதி கோரியது. இதற்கு அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். இதை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேரள அரசு திருத்திய மனுவை தாக்கல் செய்ய அனுமதி அளித்தனர்.

    மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதன் மூலம், ஆளுநர் மசோதா மீது முடிவு எடுப்பது தொடர்பான விசயத்தில் எங்களுக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பதி வைத்ததன் மூலம் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடிவு செய்தோம். இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில் வழிகாட்டுதல்களை வகுப்பதை கருத்தில் கொண்டு, நிலுவையில் வைப்பதாக பின்னர் முடிவு செய்தோம்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வந்ததாக அரசு புகார் கூறியது.
    • கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நிலுவையில் வைத்திருந்த 8 மசோதாக்களில், ஒன்றுக்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆளும் இடது சாரி ஆட்சிக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வந்ததாக அரசு புகார் கூறியது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பஞ்சாப் கவர்னருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், எந்த நடவடிக்கையும் இல்லாமல் அரசு அனுப்பி உள்ள மசோதாக்களை காலவரையின்றி நிலுவையில் வைத்திருக்க ஆளுநர்களுக்கு சுதந்திரம் அளிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. கேரள அரசின் கூடுதல் தலைமை செயலாளரிடம் இதனை குறிப்பிடும்படியும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்த சூழலில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நிலுவையில் வைத்திருந்த 8 மசோதாக்களில், ஒன்றுக்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ளார். சர்ச்சைக்குரிய பல்கலைக்கழக திருத்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்களை, ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளதாக கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களில் 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக கவர்னர் நிலுவையில் வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    • பஞ்சாப் மாநில அரசும், அம்மாநில கவர்னருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவனந்தபுரம்:

    கேரள கவர்னர் ஆரிப் முகம்மதுகானுக்கும், கேரள மாநில அரசுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதனால் சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட சில மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

    இந்நிலையில் கவர்னர் ஆரிப் முகம்மதுகானுக்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களில் 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக கவர்னர் நிலுவையில் வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளதாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதேபோல் பஞ்சாப் மாநில அரசும், அம்மாநில கவர்னருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நான் கேரள ஸ்டோரி திரைப்படத்தை பார்க்கவில்லை.
    • படத்தின் கருப்பொருள் உண்மை சம்பவங்களுடன் தொடர்புடையதாக இருந்தால் அது குறித்து விசாரிக்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் நேற்று முன்தினம் குருவாயூர் சென்றார். அங்கு மாடம்பு ஸ்மிருதி வர்ஷம் 23 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் குருவாயூர் கோவிலில் வழிபாடு நடத்த விரும்புவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் கூறினார்.

    அதைத்தொடர்ந்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கோவிலுக்கு வெளியே நடத்தப்படும் துலாபாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கோவிலின் கிழக்கு நடைபந்தலில் அவருடைய எடைக்கு எடை (83 கிலோ) கதலிப்பழம் துலாபாரமாக வழங்கினார். அதற்கான தொகை ரூ.4 ஆயிரத்து 250-ஐ கவர்னர் ஆரிப் முகமது கான் கோவிலுக்கு செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டார்.

    முன்னதாக கிழக்கு கோபுரத்தின் வெளி நடையில் இருந்து குருவாயூரப்பனை நோக்கி வழிபாடு செய்தார்.

    பின்னர் கவர்னர் ஆரிப் முகம்மது கான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவில் தரிசனம் மூலம் கிடைத்த ஆன்மிக அனுபவம் குறித்து வார்த்தைகள் மூலம் விவரிக்க முடியாது.

    நான் கேரள ஸ்டோரி திரைப்படத்தை பார்க்கவில்லை. ஆதலால் அந்த சினிமா குறித்தான எந்த விவாதத்திலும் எனக்கு உடன்பாடு இல்லை. அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

    பிரதமர் நரேந்திர மோடி தி கேரள ஸ்டோரி திரைப்படத்தை பார்த்து இருக்கலாம். ஆதலால் அவர் கருத்து தெரிவித்து இருப்பார். இப்படம் குறித்து பல்வேறு கருத்துகள் வெளி வந்துள்ள நிலையில், படத்தின் கருப்பொருள் உண்மை சம்பவங்களுடன் தொடர்புடையதாக இருந்தால் அது குறித்து விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை கிறிஸ்துமஸ் விழா மற்றும் விருந்து நிகழ்ச்சிக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் ஏற்பாடு செய்தார்.
    • கவர்னர் நடத்த இருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து நிகழ்ச்சியில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் யாரும் பங்கேற்க போவதில்லை என்று தெரிகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் அரசுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை கிறிஸ்துமஸ் விழா மற்றும் விருந்து நிகழ்ச்சிக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் ஏற்பாடு செய்தார்.

    கடந்த ஆண்டு நடந்த கிறிஸ்துஸ் விழாவில் மத தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு இவ்விழாவில் பங்கேற்க முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள், எதிர்கட்சி தலைவர்களுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் அழைப்பு அனுப்பி இருந்தார்.

    கவர்னர் நடத்த இருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து நிகழ்ச்சியில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் யாரும் பங்கேற்க போவதில்லை என்று தெரிகிறது. இதுபோல கேரள எதிர்கட்சி தலைவர் சதீசனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. அன்றைய தினம் அவர் வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. கவர்னரின் அழைப்பை கேரள மந்திரிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் புறக்கணித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை.
    • பல்கலைக்கழகங்களின் மீதான தனி அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது.

    மும்பை:

    மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்னிந்திய கல்வி சங்கம் சார்பில் கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்ட பின் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியுள்ளதாவது

    சங்கராச்சாரியார், ரிஷிகள் போன்ற துறவிகளின் போதனைகளால் இந்தியா தற்போதும் உயிர்ப்புடன் நிலைத்து நிற்கிறது. இந்திய நாகரிகம் பழமையானது மட்டுமல்ல, சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டது, அது தொடர்ச்சியாக உறுதி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதனிடையே, பல்கலைக்கழக நியமன விவகாரத்தில் கேரள அரசின் தலையீடு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆரிப் முகமதுகான் கூறியுள்ளதாவது: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை என உச்சநீதிமன்றமே சமீபத்தில் தெரிவித்து உள்ளது.

    அப்படியிருக்க இந்த பிரச்சினையில் கேரள அரசு எப்படி தலையிட முடியும்? தங்களால் முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். பல்கலைக்கழகம் பொது பட்டியலில் உள்ளது. பல்கலைக்கழகங்களின் மீதான தனி அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. அப்படியிருக்கும் போது மாநில அரசு எப்படி ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்க முடியும்? இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கும் கவர்னருக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது.
    • 15-ந் தேதி கவர்னர் மாளிகை நோக்கி ஆர்ப்பாட்டம் நடத்த இடது முன்னணி அழைப்பு விடுத்து உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசுக்கும், மாநில கவர்னருக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. பல்கலைக்கழக நியமனங்கள் தொடங்கி பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வரும் நிலையில், பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவியை நீக்குவது தொடர்பாக சட்டசபையில் மசோதா நிறைவேற்ற அரசு முனைப்புகாட்டி வருகிறது.

    இந்த நிலையில் கவர்னரை கண்டித்து வருகிற 15-ந் தேதி கவர்னர் மாளிகை நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த இடது முன்னணி அழைப்பு விடுத்து உள்ளது.

    இந்தநிலையில், கேரளாவில் அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் செயல்படுவதாக கவர்னர் ஆரிப் முகம்மது கான் கூறியிருந்தார். மேலும் பொது விவாதம் நடத்த தயார் என்றும், கவர்னர் மாளிகைக்கு வந்து பாருங்கள் எனவும் சவால் விடும் வகையில் கருத்துகளை கூறி இருந்தார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கேரளாவில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முடியாததால், அவர்களது குதிரை பேரம் நடக்காததால், அரசியல் சாசனத்திற்கு எதிராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க கவர்னர் மூலம் சதி நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    • கேரள அரசையும், பினராயி விஜயனையும் கவர்னர் ஆரிப் முகமது கான் கடுமையாக தாக்கி பேசினார்.
    • முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் சில மந்திரிகளும் கவர்னரை கடுமையாக விமர்சித்தனர்.

    திருவனந்தபுரம் :

    கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமதுகானுக்கும், கேரள அரசுக்கும் இடையே சமீப காலமாக கடும் பனிப்போர் நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி கேரள அரசையும், முதல்-மந்திரி பினராயி விஜயனையும் கவர்னர் ஆரிப் முகமது கான் கடுமையாக தாக்கி பேசினார்.

    அதற்கு பதிலடியாக முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் சில மந்திரிகளும் கவர்னரை கடுமையாக விமர்சித்தனர். அதைத்தொடர்ந்து தன்னை தரக்குறைவாக விமர்சிக்கும் அமைச்சர்களை பணிநீக்கம் செய்து விடுவேன் என்று கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கேரள பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நடந்த ஒரு விழாவில் கடந்த 18-ந்தேதி நிதி மந்திரி கே.என்.பாலகோபால் மற்றும் உயர்கல்வி மந்திரி ஆர்.பிந்து ஆகியோர் பேசிய போது தெரிவித்த கருத்துகள் கவர்னர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் கண்ணியத்தை குறைக்கும் வகையிலும் இருக்கிறது. எனவே, நிதி மந்திரியின் கருத்துகள் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை குலைக்கும் வகையில் உள்ளது.

    அவரின் இந்த கருத்து கேரளாவிற்கும், பிற மாநிலங்களுக்கும் இடையே பிளவை உருவாக்கும் வகையில் உள்ளது. மேலும் அவரின் அறிக்கையில் அவர் என்னிடம் எடுத்த சத்திய பிரமாணத்தை மீறுவதற்கு சற்றும் குறைவானது இல்லை. இந்த விவகாரத்தை முதல்-மந்திரி கவனமுடன் பரிசீலித்து அரசியல் அமைப்பு சட்டத்துக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

    அதேநேரம் முதல்-மந்திரி பினராயி விஜயன் கவர்னரின் கோரிக்கையை நிராகரித்து விட்டதாக முதல்-மந்திரி அலுவலக அதிகாரப்பூர்வ வட்டாரம் மூலம் தெரியவந்துள்ளது.

    மேலும், பாலகோபால் மீதான நம்பிக்கை இன்னும் குறையாமல் அப்படியே இருப்பதாகவும் முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயன் உடனடியாக கவர்னருக்கு கடிதம் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

    ×