search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    1.7 நிமிடத்தில் உரையை முடித்த கேரள மாநில ஆளுநர்: சட்டமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி
    X

    1.7 நிமிடத்தில் உரையை முடித்த கேரள மாநில ஆளுநர்: சட்டமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி

    • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது.
    • 135 பக்க அறிக்கையை புறக்கணித்து விட்டு கடைசி பக்கத்தில் உள்ள கடைசி பத்தியை மட்டுமே படித்தார்.

    கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆரிப் முகமது கான் ஆளுநராக இருந்து வருகிறார். ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது.

    ஆண்டின் தொடக்க சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அரசு தயாரிக்கும் கொள்கை அறிவிப்பு அறிக்கையை ஆளுநர் படித்து முடிப்பார். பின்னர் சபாநாயகர் மாநில மொழியில் திரும்ப படிப்பார்.

    இன்று காலை சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. சரியாக 9 மணிக்கு சட்டமன்றத்திற்கு வந்தார் ஆரிப் முகமது கான். அவையில் உள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அறிக்கையின் கடைசி பக்கத்தில் உள்ள கடைசி பத்தியை மட்டும் படித்தார். பின்னர் அவையில் இருந்து சென்றுள்ளார்.

    நான் அறிக்கையின் கடைசி பத்தியை படிக்கப் போகிறேன் என்று தெரிவித்து படித்து முடித்தார். இதற்கு அவருக்கு 1.17 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.

    1.17 நிமிடங்களில் ஆளுநர் உரையை முடித்ததும் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் விருந்து அளிக்க இருக்கிறார். இதில் ஆளுங்கட்சி சார்பில் தலைவர்கள் பங்கேற்பார்களா? என்பது தெரியவில்லை.

    Next Story
    ×