என் மலர்tooltip icon

    இந்தியா

    உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பு மீறல்.. தமிழக ஆளுநருக்கு எதிரான தீர்ப்பை விமர்சித்து கேரள ஆளுநர் சர்ச்சை
    X

    உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பு மீறல்.. தமிழக ஆளுநருக்கு எதிரான தீர்ப்பை விமர்சித்து கேரள ஆளுநர் சர்ச்சை

    • 2 நீதிபதிகள் அமர்ந்து கொண்டு அரசமைப்பின் விதியை தீர்மானிப்பது ஏற்புடையதல்ல.
    • பிரதமர் நரேந்திர மோடி ஆளுநர்களைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை பின் கதவு வழியாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்.

    மசோதாக்கள், துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையில் கடந்த 8 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆளுநரின் செயல்கள் சட்டவிரோதம் என்று கண்டித்ததுடன் நிலுவையில் இருந்த தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தின்மூலம் தாங்களே ஒப்புதல் வழங்குவதாக தெரிவித்தனர்.

    மேலும் அரசு அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தனர். அதுமட்டுமின்றி வரலாற்றில் முதல் முறையாக, ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க நாட்டின் ஜனாதிபதிக்கு 3 மாதம் காலக்கெடு விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை விமர்சித்து கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லெக்கர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்தும் அவர் கூறியதாவது, "மசோதாக்கள் மீது ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு அரசியல் சாசனம் எந்த காலக் கெடுவும் விதிக்கவில்லை.

    உச்ச நீதிமன்றம் அதற்கான காலத்தை நிர்ணயிப்பது அரசமைப்புச் சட்டத் திருத்தமாக கருதப்படும், இதை நீதிமன்றம் செய்யும் பட்சத்தில், பிறகு சட்டமன்றமும், நாடாளுமன்றமும் எதற்கு?.

    அரசமைப்பில் திருத்தங்கள் செய்ய, நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பெற வேண்டும், ஆனால் 2 நீதிபதிகள் அமர்ந்து கொண்டு அரசமைப்பின் விதியை தீர்மானிப்பது ஏற்புடையதல்ல. இது உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு மீறல்" என விமர்சித்துள்ளார்.

    கேரள ஆளுநர் உச்சநீதிமன்றத்தை விமர்சித்ததற்கு குறித்து சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து வருகிறது.

    டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் பேபி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனாதிபதி உட்பட அனைவருக்கும் பொருந்தும். பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஜனாதிபதி கூட தாமதப்படுத்துவது இல்லை. அப்படியானால், ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் ஆளுநர்களுக்கு எப்படி இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும் காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் இதுகுறித்து பேசுகையில், "பாராளுமன்றத்தின் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை ஆளுநர் அர்லேகர் மகிமைப்படுத்துகிறார், ஆனால் சட்டமன்றத்தின் அதிகாரத்தை மதிக்கவில்லை.

    பிரதமர் நரேந்திர மோடி ஆளுநர்களைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை பின் கதவு வழியாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு சங் பரிவாரங்களுக்கு எதிரான "சில்வர் லைன்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×