என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி முதல்வர் சஸ்பெண்டு"

    • கல்லூரி முதல்வர் மாணவர்கள் அமர்ந்திருந்த அறையை வெளியே பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
    • முதல்வர் அறையில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மாணவ-மாணவிகள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் அரசு கலைக்கல்லூரி உள்ளது.

    இக்கல்லூரியின் முதல்வராக ரெமா உள்ளார். இக்கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கல்லூரி மாணவ பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.

    அப்போது முதல்வர் அறைக்கு சென்ற மாணவ-மாணவிகள் தங்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் அறையில் இருந்து வெளியேற மாட்டோம் எனவும் கூறினர்.

    இதனால் கல்லூரி முதல்வர் மாணவர்கள் அமர்ந்திருந்த அறையை வெளியே பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இதையடுத்து முதல்வர் அறையில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மாணவ-மாணவிகள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    இது வைரலாகி கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவல் கேரள உயர் கல்வித்துறை மந்திரி கவனத்திற்கும் சென்றது.

    கேரள உயர் கல்வித்துறை மந்திரி பிந்து இச்சம்பவம் குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கல்லூரி முதல்வர் ரெமாவையும் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்தார்.

    இதுபற்றிய தகவலை அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். மாணவர் போராட்டம் காரணமாக கல்லூரி முதல்வர் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராகிங் செய்த மாணவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • விடுதியில் தங்கியிருந்த மாணவன் கடந்த 3 மாதங்களாக சித்ரவதைகளை அனுபவித்தபடி இருந்திருக்கிறான்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தில் அரசு நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் முதலாமாண்டு மாணவரை, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 5 பேர் கொடூரமாக சித்ரவதை செய்து ராகிங் செய்தனர்.

    அதாவது அந்த மாணவரை கட்டிலில் கட்டி வைத்தும், ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கியும், அந்தரங்க உறுப்பின் மேல் எடை தூக்கும் கருவியை வைத்தும், கூர்மையான திசைகாட்டியால் உடலில் பல இடங்களில் குத்தி காயப்படுத்தியும் சித்ரவதை செய்தார்கள்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலாமாண்டு மாணவரை கொடூர சித்ரவதைக்கு உள்ளாக்கி ராகிங் செய்த மாணவர்கள் சாமுவேல் ஜான்சன், ராகுல்ராஜ், ஜீவ், ரிஜில் ஜித், விவேக் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் மீது ராகிங் தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    மாணவர்கள் 5 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டும் செய்தது. இந்தநிலையில் முதலாமாண்டு மாணவனை, பிற மாணவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கி ராகிங் செய்த வீடியோ காட்சி வெளியானது. மாணவன் கதறும் நிலையில், இவ்வளவு கொடூரமாக சித்ரவதை செய்ய முடியுமா? என்ற கேள்வி எழும்பும் வகையில் அந்த வீடியோ மிகவும் பயங்கரமாக இருந்தது.

    விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவன் கடந்த 3 மாதங்களாக சித்ரவதைகளை அனுபவித்தபடி இருந்திருக்கிறான். அரசு நர்சிங் கல்லூரியில் நடந்திருக்கும் இந்த ராகிங் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதால், அந்த சம்பவம் குறித்து மருத்துவக்கல்வி இயக்குனர் நேரடியாக விசாரணை நடத்தினார்.

    இந்தநிலையில் மாணவன் சித்ரவதைக்குள்ளான நர்சிங் கல்லூரியின் முதல்வர் சுலேகா, விடுதியின் உதவி வார்டனாக இருந்த உதவி பேராசிரியர் அஜீஷ் மணி ஆகிய இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மருத்துவக்கல்வி இயக்குனர் விசாரணையை தொடர்ந்து மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலர் ராஜன் கோப்ரகடே இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

    ×