என் மலர்
நீங்கள் தேடியது "meat shops"
- ஹலால் முறையில் செய்யப்படும் இறைச்சிகளை மட்டுமே முஸ்லிம் மக்கள் வாங்குவார்கள்.
- மல்ஹர் சான்றிதழ் இல்லாத கடைகளில் ஆட்டிறைச்சி வாங்க வேண்டாம் எனவும் அமைச்சர் வேண்டுகோள்.
மகாராஷ்டிராவில் 100% இந்துக்களால் நடத்தப்படும் இறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' என்ற சான்றிதழ் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மீன்வளத்துறை அமைச்சர் நிதேஷ் ரானே இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தினார். இதற்காக malharcertification.com என்ற வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது.
மல்ஹர் சான்றிதழ் இல்லாத கடைகளில் ஆட்டிறைச்சி வாங்க வேண்டாம் எனவும் அமைச்சர் நிதேஷ் ரானே இந்துக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஹலால் முறையில் செய்யப்படும் இறைச்சிகளை மட்டுமே முஸ்லிம் மக்கள் வாங்குவார்கள். இந்து மக்கள் ஹலால் மற்றும் ஹலால் இல்லாத கடைகளிலும் இறைச்சி வாங்குவார்கள். இந்நிலையில், ஹலால் இறைச்சி கடைகளுக்கு போட்டியாக இந்த புதிய நடைமுறையை பாஜக அரசு கொண்டு வந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ரம்ஜான் வருவதை ஒட்டி இந்து - முஸ்லிம் ஒற்றுமையை குலைக்கும் வகையில் இந்த நடவடிக்கையை பாஜக அரசு முன்னெடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
- நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்திக்கு புகார்கள் அதிக அளவில் வந்தன.
- நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் டவுன் பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநக ராட்சிக்குட்பட்ட பகுதி களில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அதிக மாக பயன்படுத்த ப்படுவ தாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்திக்கு புகார்கள் அதிக அளவில் வந்தன.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா மற்றும் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறுவுறுத்தலின்பேரில் இன்று நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் டவுன் பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொ ள்ளப் பட்டது. இதில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் மேஸ்திரி முருகன் மற்றும் தூய்மை பணியாளர்கள் 2 பேட்டரி வாகனங்கள் மூலம் குற்றாலம் ரோடு, சேரன்மகா தேவி ரோடு, வழுக்கோடை பகுதி, தொண்டர் சன்னதி பகுதிகளில் உள்ள சுமார் 36 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் 26 கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன் படுத்துவது கண்டறிய ப்பட்டது. அவற்றை பறிமு தல் செய்து கடை ஒன்றுக்கு ரூ. 100 வீதம் 26 கடைகளுக்கு ரூ. 2,600 அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது. மொத்தம் 27 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படவுள்ளன.
- இறைச்சி கடை வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவினை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
சென்னை:
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும் 15-ந்தேதி, சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படவுள்ளன. எனவே, இறைச்சி கடை வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவினை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டெல்லியின் புறநகரான குர்கானில் நேற்று நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி இந்துசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் பாலம் விகார், பாத்ஷாபூர் மற்றும் ஓம்விகார் ஆகிய பகுதிகளில் திடீர் பேரணி நடத்தினர். கைகளில் தடி, ஹாக்கி மட்டைகள், கத்திகள் மற்றும் இரும்பு கம்பிகளை வைத்திருந்தனர்.
பேரணி செல்லும் வழியில் 250-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் திறந்திருந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நவராத்திரி விழா அன்று இறைச்சி கடைகளை திறக்க கூடாது அவற்றை மூட வேண்டும் என மிரட்டல் விடுத்தனர்.
பல இறைச்சி கடைகளின் ‘ஷட்டர்’ கதவுகளை இழுத்து மூடினர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. வீதிகளில் இருந்து மக்கள் ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அமைதி ஏற்படுத்தினர். கண்காணிப்பு கேமரா வீடியோ மூலம் இந்துசேனா அமைப்பை சேர்ந்த ராஜேஷ், பிரமோத்சிங் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் 40 பேர் மீது மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #tamilnews