என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "nellai zonal"
- தமிழகத்தில் திருக்குறள் பேச்சு போட்டிகள் மொத்தம் 12 மண்டலங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
- நெல்லையில் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேச்சு போட்டியில், மொத்தம் 110 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
தமிழகத்தில் திருக்குறள் பேச்சு போட்டிகள் மொத்தம் 12 மண்டலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லையில் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேச்சு போட்டியில், மொத்தம் 110 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் இடைநிலைப் பிரிவில் (6, 7, 8 ஆம் வகுப்புகள்) 76 மாணவர்களும், மேல்நிலைப் பிரிவில் (9, 10, 11, 12 ஆம் வகுப்புகள்) 32 மாணவர்களும், கல்லூரிப் பிரிவில் 2 மாணவர்களும் கலந்து கொண்ட நிலையில் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான இறுதிச் சுற்றில் பங்கேற்க 3 பேர் தேர்வாகி உள்ளனர்.
பேச்சுப் போட்டி தவிர மண்டல அளவிலான கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளும் நடத்தப்பட்டன. கட்டுரைப் போட்டியில் மொத்தம் 110 மாணவர்களும், ஓவியப் போட்டியில் மொத்தம் 111 மாணவர்களும் கலந்து கொண்டனர். ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் சாப்டர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் தாஸ் ஜெபக்குமார் தலைமை தாங்கினார். ராணி அண்ணா கலைக் கல்லூரியின் முதல்வர் மைதிலி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
- நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்திக்கு புகார்கள் அதிக அளவில் வந்தன.
- நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் டவுன் பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநக ராட்சிக்குட்பட்ட பகுதி களில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அதிக மாக பயன்படுத்த ப்படுவ தாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்திக்கு புகார்கள் அதிக அளவில் வந்தன.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா மற்றும் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறுவுறுத்தலின்பேரில் இன்று நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் டவுன் பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொ ள்ளப் பட்டது. இதில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் மேஸ்திரி முருகன் மற்றும் தூய்மை பணியாளர்கள் 2 பேட்டரி வாகனங்கள் மூலம் குற்றாலம் ரோடு, சேரன்மகா தேவி ரோடு, வழுக்கோடை பகுதி, தொண்டர் சன்னதி பகுதிகளில் உள்ள சுமார் 36 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் 26 கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன் படுத்துவது கண்டறிய ப்பட்டது. அவற்றை பறிமு தல் செய்து கடை ஒன்றுக்கு ரூ. 100 வீதம் 26 கடைகளுக்கு ரூ. 2,600 அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது. மொத்தம் 27 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்