என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirukkural speech competition"

    • 3 பேரை தேர்வு செய்தனர்
    • கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கினர்

    வேலூர்:

    ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் திருக்குறள் பேச்சுப் போட்டி, மற்றும் ஓவியப்போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு சென்னையில் நடத்தப்பட்டது.

    இப்போட்டியினை நடுவர்கள் திருப்பூர் கிருஷ்ணன் கிருங்கை சேதுபதி, தமிழ் மகன் ஆகியோர் நடத்தினர்.

    போட்டியின் இறுதியில் 3 பிரிவுகளிலும் தலா 3 பேரை தேர்வு செய்தனர்.

    வெற்றி பெற்றவர்கள் இத்திருக்குறள் பேச்சுப் போட்டியில் 3 பிரிவுகளின் கீழ், தலா மூன்று பேர் வெற்றி பெற்றனர். இடைநிலை பிரிவில் முதல் இடத்தை ஈரோடு மண்டலத்தை சார்ந்த வி.நா.தமிழ்க் கணி, 2-ம் இடத்தை, கோவை மண்டலத்தை சார்ந்த பா.ஹரிஷினி, வேலூர் மண்டலத்தை சார்ந்த ஆதிரை, 3-ம் இடத்தை சென்னை மண்டலத்தை சார்ந்த ஸ்ரீ பத்மப்ரியா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    இவர்களுக்கு ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பாக, முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.10,000, 2-ம் இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.7,500, 3-ம் இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.5000 வழங்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கினர்.

    • தமிழகத்தில் திருக்குறள் பேச்சு போட்டிகள் மொத்தம் 12 மண்டலங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
    • நெல்லையில் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேச்சு போட்டியில், மொத்தம் 110 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் திருக்குறள் பேச்சு போட்டிகள் மொத்தம் 12 மண்டலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லையில் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேச்சு போட்டியில், மொத்தம் 110 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் இடைநிலைப் பிரிவில் (6, 7, 8 ஆம் வகுப்புகள்) 76 மாணவர்களும், மேல்நிலைப் பிரிவில் (9, 10, 11, 12 ஆம் வகுப்புகள்) 32 மாணவர்களும், கல்லூரிப் பிரிவில் 2 மாணவர்களும் கலந்து கொண்ட நிலையில் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான இறுதிச் சுற்றில் பங்கேற்க 3 பேர் தேர்வாகி உள்ளனர்.

    பேச்சுப் போட்டி தவிர மண்டல அளவிலான கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளும் நடத்தப்பட்டன. கட்டுரைப் போட்டியில் மொத்தம் 110 மாணவர்களும், ஓவியப் போட்டியில் மொத்தம் 111 மாணவர்களும் கலந்து கொண்டனர். ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் சாப்டர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் தாஸ் ஜெபக்குமார் தலைமை தாங்கினார். ராணி அண்ணா கலைக் கல்லூரியின் முதல்வர் மைதிலி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    ×