என் மலர்
நீங்கள் தேடியது "திருக்குறள் பேச்சுப் போட்டி"
- 3 பேரை தேர்வு செய்தனர்
- கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கினர்
வேலூர்:
ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் திருக்குறள் பேச்சுப் போட்டி, மற்றும் ஓவியப்போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு சென்னையில் நடத்தப்பட்டது.
இப்போட்டியினை நடுவர்கள் திருப்பூர் கிருஷ்ணன் கிருங்கை சேதுபதி, தமிழ் மகன் ஆகியோர் நடத்தினர்.
போட்டியின் இறுதியில் 3 பிரிவுகளிலும் தலா 3 பேரை தேர்வு செய்தனர்.
வெற்றி பெற்றவர்கள் இத்திருக்குறள் பேச்சுப் போட்டியில் 3 பிரிவுகளின் கீழ், தலா மூன்று பேர் வெற்றி பெற்றனர். இடைநிலை பிரிவில் முதல் இடத்தை ஈரோடு மண்டலத்தை சார்ந்த வி.நா.தமிழ்க் கணி, 2-ம் இடத்தை, கோவை மண்டலத்தை சார்ந்த பா.ஹரிஷினி, வேலூர் மண்டலத்தை சார்ந்த ஆதிரை, 3-ம் இடத்தை சென்னை மண்டலத்தை சார்ந்த ஸ்ரீ பத்மப்ரியா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இவர்களுக்கு ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பாக, முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.10,000, 2-ம் இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.7,500, 3-ம் இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.5000 வழங்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கினர்.






