என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்திரிக்கையாளர்"

    • பனிக்கட்டி தொழிற்சாலை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.
    • வங்கதேசத்தில் பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

    வங்கதேசத்தில் ராணா பிரதாப் பைராகி என்ற 45 வயதுடைய இந்து பத்திரிக்கையாளர், இன்று (ஜன.5) மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல், ராணா பிரதாப்பின் தலையில் பலமுறை சுட்டுவிட்டுத் தப்பியோடியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து 7 காலித் தோட்டாக்களைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    ஜெசோர் மாவட்டத்தின் மணிரம்பூர் பகுதியில் உள்ள கோபாலியா சந்தையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராணா பிரதாப் நரைல் மாவட்டத்தை மையமாகக் கொண்ட 'பிடி கோபோர்' (BD Khobor) என்ற நாளிதழின் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். மேலும், அப்பகுதியில் பனிக்கட்டி தொழிற்சாலை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.

    ஜஷோரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பிரதாப் மீது பல வழக்குகள் இருப்பதாகவும், தீவிரவாதக் குழுவுடனும் தொடர்பு இருப்பதாகவும், இந்தக் கொலைக்கு என்ன காரணம் என்று சொல்ல முடியாது என்றும் அந்தப் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் அபுல் காஷேம் கூறியுள்ளார். 

    டிசம்பர் மாதம் முதல் இதுவரை வங்கதேசத்தில் ஐந்து இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிறுபான்மையினருக்கு எதிரான இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 


    • கராச்சியில் பத்திரிகையாளர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • அர்ஷாத் ஷெரீப் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது தன்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்தி இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் பத்திரிகையாளர் அர்ஷாத் ஷெரீப் (வயது 49). இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை தீவிரமாக ஆதரித்தும், ராணுவத்தை கடுமையாக விமர்சித்தும் வந்தார்.

    இவர் இங்கிலாந்து மற்றும் துபாய்க்கு சென்றுவிட்டு கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்கு சென்றிருந்தார். இந்தநிலையில் அவர் கென்யாவில் தலைநகர் நைரோபி அருகில் உள்ள கஜியாடோ என்ற இடத்தில் ஒரு சாலைத்தடுப்பில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இந்த சம்பவத்துக்காக வருத்தப்படுவதாக போலீஸ் தரப்பில் அங்கு ஒரு அறிக்கை வெளியானது.

    ஆனால் இந்த சம்பவம் பாகிஸ்தானில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. கராச்சியில் பத்திரிகையாளர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே சம்பவ இடத்தில் திருட்டுப்போன ஒரு காரைப் பிடிப்பதற்காக போலீசார் சாலைத்தடுப்பு ஏற்படுத்தி இருந்ததாகவும், அர்ஷாத் ஷெரீப் வாகனம் தடுப்பை மீறி சென்றபோது சுட்டுவிட்டதாகவும் போலீஸ் தரப்பில் வெளியான அறிக்கை கூறுகிறது.

    அர்ஷாத் ஷெரீப் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது தன்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்தி இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    அர்ஷாத் ஷெரீப்பின் மனைவி ஜாவேரியா சித்திக் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், " நான் ஒரு அன்பான நண்பரை, கணவரை, எனக்கு பிடித்த பத்திரிகையாளரை இழந்து விட்டேன்" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    பத்திரிகை துறையில் சிறப்பாக செயலாற்றி, கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக வாஷிங்டனின் பாராட்டு விழா நடத்தப்பட்டது. #Newseum
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் புகழ்பெற்ற நியூசியம் உள்ளது. இந்த அருங்காட்சியகமானது பத்திரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. பத்திரிக்கை துறைக்காக உயிரை விட்ட சில பத்திரிக்கையாளர்களை மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்படுவர்.

    இந்நிலையில், இந்த ஆண்டிற்கான பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட 18 பத்திரிகையாளர்களில் 2 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கவுரி லங்கேஷ் தனது வீட்டு வாசலில் வைத்து மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இவர் ஜாதி போன்ற அமைப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர். திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சுதிப் டத்தா பவுமிக் போலீஸ் அதிகாரி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் ஊழலுக்கு எதிராக போராடி வந்தார்.


    18 பத்திரிக்கையாளர்களில் 8 பேர் பெண்கள் ஆவர். மேலும், பத்திரிகையாளர்கள், எடிட்டர், போட்டோகிராபர் மற்றும் பிராட்காஸ்டர்ஸ் போன்ற பிரிவுகளில் பணிபுரிந்து உயிரை விட்ட 2,323 பேருக்கு நினைவு கண்ணாடி பேனல் வைக்கப்பட்டது. அதில் 80 பேர் இந்திய பத்திரிகையாளர் ஆவர். #Newseum

    ×