search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "political gain"

    • திரவுபதி அம்மன் கோவிலில் இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சினை என அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    • சிலர் சமூக அமைதியை கெடுக்க பிரச்சினையை உருவாக்குகின்றனர்.

     திருப்பூர் :

    கோவில் விவகாரத்தில் சமூக நல்லிணக்கம் மேற்கொள்வது போல் கபட நாடகம் நடத்தப்பட்டுள்ளது என்று இந்து முன்னணி சாடியுள்ளது. இது குறித்து அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சினை என அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் மேல்பதி வீரணம்பட்டி காளி கோவிலிலும் இதே காரணத்தால் பூட்டி சீல் வைத்தனர்.சிலர் சமூக அமைதியை கெடுக்க பிரச்சினையை உருவாக்குகின்றனர். இந்து சமுதாயம் அனுமதிக்கக்கூடாது. இந்து சமுதாய ஒற்றுமை அவசியம். சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவோரிடம் இந்துக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இரு சமூகங்களிடையே பிரச்னை என்றால் அதிகாரிகள் பேச்சு நடத்தி, சமூக பெரியவர்களை அழைத்து சுமூக முடிவு எடுத்திருக்க வேண்டும்.

    வேற்று மதத்தினரை அழைத்து சமூக நல்லிணக்கம் மேற்கொள்வதென்பது கபட நாடகம். வேற்று மதத்தினர் வழிபாட்டு இடங்களிலும் பிரச்னை எழும் போது அதிகாரிகள் வழிபாட்டு இடங்களுக்கு உடனடியாக சீல் வைத்துள்ளனரா? அமைதி கூட்டத்துக்கு இந்து அமைப்புகளை, இந்து சமுதாய பெரியவர்களை அழைத்துள்ளனரா?இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், இந்து சமூகத்தில் ஒற்றுமை உணர்வு, சகோதரத்துவம் ஏற்படவும் இந்து முன்னணி விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது. தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பிரிவினை பேசி அரசியல் லாபம் பெற்றவர் என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார். #TamilisaiSoundararajan #Vaiko
    கோவை:

    கோவை விமான நிலையத்தில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    5 மாநில தேர்தலில் நல்ல நிர்வாகம், ஊழலற்ற ஆட்சியை கொடுத்துவிட்டு தான் வாக்கு சேகரித்து உள்ளோம். கருத்துக்கணிப்புகள் எப்படி இருந்தாலும் தெலுங்கானா தவிர்த்து மற்ற மாநிலங்களில் தேர்தலில் வெற்றிப் பெறுவோம். பிரதமர் மோடிக்கு ஆதரவு பெருகி வருகிறது . பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் பிரதமர் மோடிக்கு பங்கு உள்ளது.



    ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பிரிவினை பேசி அரசியல் லாபம் பெற்றவர். அவர் ஆக்கப்பூர்வமற்ற வகையில் நிலை தடுமாறி பேசி வருகிறார்.

    மத்திய நீர்வளத்துறை ஆணையரே தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது.

    தலைகீழாக நடந்தாலும் தாமரை மலராது என்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியதற்கு தமிழிசை கூறியதாவது:

    தாமரை மலர தலைகீழாக நடக்க தேவையில்லை. நேர்மையாக நடந்தால் போதும். இடதுசாரிகள் ஒரு மாநிலத்தில் தான் ஆட்சியில் உள்ளனர். ஆனால் பா.ஜனதா 19 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. காவியை பற்றி சிவப்புகள் கவலைப்பட வேண்டாம். மக்கள் வாழ்விற்காக தான் தாமரை மலர வேண்டும் என்கிறோம். தி.மு.க. கூட்டணி பலவீனமான கூட்டணி, எங்கள் கூட்டணியை பற்றி முத்தரசன் கவலைப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #Vaiko
    ×