search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kondatthu Kaliamman Temple"

    • மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் மற்றும் அமரபணீஸ்வரர் கோவிலில் கடந்த சில மாதங்களாக புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து 22-ந் தேதி கலசாபிஷேகமும், வாஸ்து சாந்தியும் நடைபெற்றன. 23-ந் தேதி யாக சாலையில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், முதற்கால யாகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

    24-ந் தேதி 2-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணி அளவில் 3-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று 4-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணி அளவில் 5-ம் காலயாக பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர்.

    முன்னதாக காலை 8 மணி அளவில் கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து ெகாண்டு சிறப்பித்தார்.

    மேலும் கோபி, பாரியூர், நாயக்கன் காடு, வெள்ளாளபாளையம், கூகலூர், அழுக்குளி, குருமந்தூர், சவன்டபூர், வலையபாளையம், காசிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து மதியம் 1 மணிக்கு கோமாதா பூஜையும், தசதானம், தச தரிசனம், மகா அபிஷேகம், மகா அலங்கார பூஜை நடைபெற உள்ளது. மாலை 6 மணி அளவில் அம்மன் மற்றும் பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பந்தலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு டிரோன் மூலம் புனித கலச நீர் தெளிக்கப்பட்டது.

    • விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொட ங்கியது.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்ட த்து காளியம்மன் கோவில் மற்றும் அமரபணீஸ்வரர் கோவிலில் கடந்த சில மாதங்களாக புணர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொட ங்கியது. அதைத்தொடர்ந்து 22-ந் தேதி கலசாபிஷே கமும், வாஸ்து சாந்தியும் நடைபெ ற்றன.

    23-ந் தேதி யாக சாலையில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், முதற்கால யாகமும் மகா தீபாரா தனையும் நடைபெற்றன. நேற்று 2-ம் கால யாக பூஜையும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று 4-ம் காலயாக பூஜையும், மகா தீபாராதனையும் நடை பெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் நாளை காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.

    முன்னதாக காலை 8 மணி அளவில் கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளன. பகல் 1 மணிக்கு கோமாதா பூஜையும், தசதானம், தச தரிசனம், மகா அபிஷேகம், மகா அலங்கார பூஜை நடைபெற உள்ளது.

    மாலை 6 மணி அளவில் அம்மன் மற்றும் பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி கோவில் அருகில் அமைக்கப்ப ட்டுள்ள பிரம்மாண்டமான பந்தலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

    • பக்தர்கள் ஆண்டுதோறும் பாதயாத்திரையாக வந்து குண்டம் இறங்குவது வழக்கமாக நடக்கிறது.
    • 90 சதவீதம் பக்தர்கள் பூக்குழிக்குள் இறங்க அனுமதிக்கப்படவில்லை.

    பெருமாநல்லூர் :

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றது. திருப்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்ர்கள் ஆண்டுதோறும் பாதயாத்திரையாக வந்து குண்டம் இறங்குவது வழக்கமாக நடக்கிறது. இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையினரின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தாலும், அலட்சியத்தாலும் குண்டம் திருவிழாவில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. குண்டம் இறங்குவதில் ஏராளமான பக்தர்கள் தீக்காயம் அடைந்தனர். இதன்காரணமாக 90 சதவீதம் பக்தர்கள் பூக்குழிக்குள் இறங்க அனுமதிக்கப்படவில்லை.

    விரதம் இருந்து குண்டம் இறங்க வந்த ஏராளமான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இது ஒருபுறம் இருக்க கோவிலுக்கு வெளியே தற்காலிக கடைகள் அமைக்க டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தன. இந்தநிலையில் கடைகள் அமைக்கப்பட்டு இருந்த ஒட்டுமொத்த இரும்பு கொட்டகையும் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு விஷயத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் இவ்வளவு அலட்சியம் காட்டியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இந்து அல்லாதவர்களுக்கு டெண்டர் கொடுக்கக்கூடாது. குண்டத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி காலை 11 மணிக்கு பெருமாநல்லூர் நால்ரோட்டில் இந்து முன்னணி சார்பில் பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்துவது என இந்து முன்னணி முடிவு செய்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • கோவில் குண்டம் தேர்த்திருவிழா நேற்று 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர்பெருமா நல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா நேற்று 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கோவில் செயல் அலுவலர் காளிமுத்து, மிராசுதாரர்கள், பூசாரிகள், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் இவ்வி ழாவை முன்னிட்டு கோடை வெயிலின் தாகம் தணிக்க கோவில் உட்புறம் முழுவதும் பந்தல் அமைக்கப்ப ட்டுள்ளது. மேலும் கோவில் முன்புறம் பக்தர்களின் தாகம் தணிக்க நீர்மோர் பந்தல் உள்ளது. இதேபோல் பக்தர்கள், கோவிலுக்கு எந்தவித சிரமமும் இன்றி வந்து செல்ல சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் திருப்பூர் ரோடு, கோவை ரோடு, ஈரோடு ரோடு, குன்னத்தூர் ரோடு ஆகிய பகுதிகளில் பெருமாநல்லூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முருகன் தலை மையில் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    விழாவில் கோவில் செயல் அலுவலர் காளிமுத்து, மிராசுதாரர்கள், பூசாரிகள், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா வருகிற 4-ந் தேதி நடைபெ றுகிறது.
    • இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.

    பெருமாநல்லூர் :

    பெருமாநல்லூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கொண்ட த்துக்காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்தி ருவிழா வருகிற 4-ந் தேதி நடைபெ றுகிறது. இவ்விழாவை முன்னிட்டு தற்போது தமிழக அரசின் இந்து சமய அறநிலைய த்துறை சார்பில் கோவில் முன்புறம் கூடாரம் அமைத்தல் உள்பட பல முன்னேற்பாடு வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது.இன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. இன்று இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து 10 மணிக்கு கிராம சாந்தியும், இரவு 11 மணிக்கு குண்டம் விழாவின் கொடியேற்றம் அதைத் தொடர்ந்து காப்பு கட்டுதல், அஷ்டதிக் பாலகர் வழிபாடு, அம்மன் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    நாளை 30ந் தேதி காலை 7.30 மணிக்கு அம்மன் திருவீதி உலா, இரவு 7 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, காமதேனு வாகனத்தில் அம்மன் புற ப்பாடு, மண்டபக்கட்டளை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தொடர்ந்து வருகிற 8-ந்தேதி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள். விழாவை யொட்டி போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பெருமாநல்லூர் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் செய்யப்பட்டு வருகிறது.

    • கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா வருகிற 29ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • 8-ந் தேதி மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா வருகிற 29ந் தேதி கிராம சாந்தி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.விழாவில் ஏப்ரல் 2-ந் தேதி பொங்கல் வைத்தல், 3ந் தேதி காலை 11 மணிக்கு குண்டம் திறந்து பூ போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 4ந்தேதி அதிகாலை4 மணிக்கு குண்டம் பூ மிதித்தல், மாலை 3:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், 8-ந் தேதி மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.குண்டம் திருவிழாவில் திருப்பூர், அவிநாசி, குன்னத்தூர், நம்பியூர், கோபி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல பஸ் வசதி மற்றும் கோவில் வளாகத்தில், குடிநீர், மொபைல் டாய்லெட், பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்ய தடுப்பு அமைத்தல் போன்ற நடவடிக்கையில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.குண்டம் மற்றும் தேர்த்தி ருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் காளிமுத்து, தக்கார் பெரிய மருது பாண்டியன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • கடைகளின் டெண்டர் மார்ச் 10ஆம் தேதி விடப்படும் என அறிவிக்கபட்டிருந்தது.
    • டெண்டர் எடுத்தவரிடம் வியாபாரிகள் பழைய முறையிலேயே வாடகை களை வசூலிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர் திருவிழா வருகின்ற வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி குண்டம் மற்றும் தேர் திருவிழா நடைபெற உள்ளது.திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடைகளின் டெண்டர் மார்ச் 10ஆம் தேதி விடப்படும் என அறிவிக்கபட்டிருந்தது.குறிப்பிட்ட தொகை வராத காரணத்தினால் 10ம் தேதி நடக்க இருந்த டெண்டரை மீண்டும் 20 ஆம் தேதி மாற்றி வைத்தனர்.

    இந்த நிலையில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோவில் நிர்வாகமே கடைகளை வாடகைக்கு விட வேண்டும் .டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று மனு அளித்திருந்தனர்.நேற்றுகாலை 10 மணி அளவில் டெண்டர் நடைபெறும் என்று அறிவிக்க ப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மாலை 4 மணிக்கு மாற்றி வைக்கப்பட்டது. வியாபாரிகள் டெண்டர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து செயல் அலுவலக அலுவலர் அலுவலகம் முன்பு கூடியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கோவில் தக்கார் பெரிய மருதுபாண்டி ஆய்வாளர் ஆதிரைகோவில் செயல் அலுவலர் காளிமுத்து ஆகியவர்கள் முன்னிலையில் டெண்டர் நடைபெற்றது. இந்த டெண்டரை ஈட்டு வீராம்பாளையம் ஊராட்சி சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் ரூ 7லட்சத்து பத்தாயிரத்திற்கு டென்டரை எடுத்தார்.மேலும் டெண்டர் எடுத்தவரிடம் வியாபாரிகள் பழைய முறையிலேயே வாடகை களை வசூலிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.

    • பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலானது பல நூறு ஆண்டுகள் பழமையான கோவிலாகும்.
    • இந்த ஆணடு அதிகளவு பக்தர்கள் வருவர்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கோபி:

    கோபிசெட்டி பாளையத்தில் புகழ்பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலானது பல நூறு ஆண்டுகள் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக குண்டம் திருவிழாவில் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்த அனுமதிக்கப்படவில்லை.

    பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்கிய நிலையில் இந்த ஆண்டு குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவிற்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.

    இந்த ஆண்டு குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த டிசம்பர் மாதம் 29-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 9-ந் தேதி சந்தனகாப்பு அலங்காரமும், 11 ம் தேதி இரவு குண்டம் திறப்பு நிகழ்ச்சியும், 12-ந் தேதி அதிகாலை திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்துதல் நடைபெற உள்ளது.

    இந்த ஆணடு அதிகளவு பக்தர்கள் வருவர்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு, பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ், 24 மணி நேரம் மருத்துவ குழுவினர், திருவிழா நடைபெறும் ஒரு வார காலத்திற்கு 24 மணி நேரமும் அரசு பஸ் போக்குவரத்து வசதி, அடிப்படை வசதிகளான குடிநீர், தற்காலிக கழிப்பறை உள்ளிட்டவை குறித்த ஆலோசனை கூட்டம் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை, பொது சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறையினர், நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும், கோவில் விழாக்குழுவினர், பரம்பரை அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×