search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொண்டத்து காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு நடத்தினர்.

    கொண்டத்து காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் மற்றும் அமரபணீஸ்வரர் கோவிலில் கடந்த சில மாதங்களாக புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து 22-ந் தேதி கலசாபிஷேகமும், வாஸ்து சாந்தியும் நடைபெற்றன. 23-ந் தேதி யாக சாலையில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், முதற்கால யாகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

    24-ந் தேதி 2-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணி அளவில் 3-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று 4-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணி அளவில் 5-ம் காலயாக பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர்.

    முன்னதாக காலை 8 மணி அளவில் கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து ெகாண்டு சிறப்பித்தார்.

    மேலும் கோபி, பாரியூர், நாயக்கன் காடு, வெள்ளாளபாளையம், கூகலூர், அழுக்குளி, குருமந்தூர், சவன்டபூர், வலையபாளையம், காசிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து மதியம் 1 மணிக்கு கோமாதா பூஜையும், தசதானம், தச தரிசனம், மகா அபிஷேகம், மகா அலங்கார பூஜை நடைபெற உள்ளது. மாலை 6 மணி அளவில் அம்மன் மற்றும் பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பந்தலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு டிரோன் மூலம் புனித கலச நீர் தெளிக்கப்பட்டது.

    Next Story
    ×