search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ம.தி.மு.க. சார்பில் ரூ.35 லட்சம் நிதி-பொருள்கள் - வைகோ
    X

    கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ம.தி.மு.க. சார்பில் ரூ.35 லட்சம் நிதி-பொருள்கள் - வைகோ

    கேரள வெள்ள நிவாரணத்துக்கு ம.தி.மு.க. சார்பில் ரூ.35 லட்சம் நிவாரண நிதி மற்றும் பொருள்கள் வழங்குவதாக வைகோ தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    கேரளாவில் வெள்ள நிவாரண பணிக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் நிதி உதவிகள் வழங்கி வருகிறார்கள். தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் கேரளாவுக்கு நிவாரண நிதியும், பொருள்களும் வழங்கி உள்ளனர்.

    இதுபோல ம.தி.மு.க. சார்பிலும் கேரளாவுக்கு ரூ.35 லட்சம் நிவாரண நிதி மற்றும் பொருள்கள் வழங்கப்படுகிறது. இப்பொருள்களை ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ திருவனந்தபுரத்திற்கு நேரில் சென்று வழங்குகிறார். இதற்காக அவர் நிவாரண பொருட்களுடன் நெல்லையில் இருந்து புறப்பட்டார். இன்று காலை நாகர்கோவில் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரள மக்களின் துயரத்தில் ம.தி.மு.க.வும் பங்கெடுத்து கொள்கிறது. இதற்காக ம.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதியும், ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருள்களும் வழங்கப்படுகிறது.

    இதனை நானும், ம.தி.மு.க. நிர்வாகிகளும் திருவனந்தபுரத்திற்கு நேரில் சென்று வழங்குகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×