என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ம.தி.மு.க. சார்பில் ரூ.35 லட்சம் நிதி-பொருள்கள் - வைகோ
Byமாலை மலர்5 Sep 2018 6:14 AM GMT (Updated: 5 Sep 2018 6:14 AM GMT)
கேரள வெள்ள நிவாரணத்துக்கு ம.தி.மு.க. சார்பில் ரூ.35 லட்சம் நிவாரண நிதி மற்றும் பொருள்கள் வழங்குவதாக வைகோ தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்:
கேரளாவில் வெள்ள நிவாரண பணிக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் நிதி உதவிகள் வழங்கி வருகிறார்கள். தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் கேரளாவுக்கு நிவாரண நிதியும், பொருள்களும் வழங்கி உள்ளனர்.
இதுபோல ம.தி.மு.க. சார்பிலும் கேரளாவுக்கு ரூ.35 லட்சம் நிவாரண நிதி மற்றும் பொருள்கள் வழங்கப்படுகிறது. இப்பொருள்களை ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ திருவனந்தபுரத்திற்கு நேரில் சென்று வழங்குகிறார். இதற்காக அவர் நிவாரண பொருட்களுடன் நெல்லையில் இருந்து புறப்பட்டார். இன்று காலை நாகர்கோவில் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரள மக்களின் துயரத்தில் ம.தி.மு.க.வும் பங்கெடுத்து கொள்கிறது. இதற்காக ம.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதியும், ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருள்களும் வழங்கப்படுகிறது.
இதனை நானும், ம.தி.மு.க. நிர்வாகிகளும் திருவனந்தபுரத்திற்கு நேரில் சென்று வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரளாவில் வெள்ள நிவாரண பணிக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் நிதி உதவிகள் வழங்கி வருகிறார்கள். தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் கேரளாவுக்கு நிவாரண நிதியும், பொருள்களும் வழங்கி உள்ளனர்.
இதுபோல ம.தி.மு.க. சார்பிலும் கேரளாவுக்கு ரூ.35 லட்சம் நிவாரண நிதி மற்றும் பொருள்கள் வழங்கப்படுகிறது. இப்பொருள்களை ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ திருவனந்தபுரத்திற்கு நேரில் சென்று வழங்குகிறார். இதற்காக அவர் நிவாரண பொருட்களுடன் நெல்லையில் இருந்து புறப்பட்டார். இன்று காலை நாகர்கோவில் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரள மக்களின் துயரத்தில் ம.தி.மு.க.வும் பங்கெடுத்து கொள்கிறது. இதற்காக ம.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதியும், ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருள்களும் வழங்கப்படுகிறது.
இதனை நானும், ம.தி.மு.க. நிர்வாகிகளும் திருவனந்தபுரத்திற்கு நேரில் சென்று வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X