search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahindra Marazzo"

    மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மராசோ எம்.பி.வி. காரின் சர்வதேச பாதுகாப்பு சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. #Mahindra #Marazzo4safety



    மஹிந்திரா மராசோ பாதுகாப்பு சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. சர்வதேச சந்தையில் வெளியாகும் புது கார்களில் நடத்தப்படும் பாதுகாப்பு சோதனையான NCAP முடிவுகள் மஹிந்திரா மராசோ காருக்கு வெளியாகியுள்ளது. பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்ட மஹிந்திரா மராசோ அதிக பாதுகாப்பு வசதி கொண்ட கார்களில் நான்கு புள்ளிகளை பெற்று இருக்கிறது.

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார் சர்வதேச பாதுகாப்பு சோதனையில் நான்கு புள்ளிகள் பெற்று இருப்பது இதுவே முதல் முறை ஆகும். மஹிந்திரா மராசோ கார் வயதானோர் பயணிக்க 17 புள்ளிகளுக்கு 12.85 புள்ளிகளை பெற்றுள்ளது. எனினும் குழந்தைகள் பயணிக்க 49 புள்ளிகளுக்கு 22.22 புள்ளிகளை மராசோ பெற்றுள்ளது. 



    அந்த வகையில் குழந்தைகள் பயணிக்க மராசோ இரண்டு நட்சத்திர புள்ளிகளை பெற்றுள்ளது. நவம்பர் 16, 2018 காலத்தில் தயாரிக்கப்பட்ட அனைத்து மஹிந்திரா மராசோ கார்களுக்கும் இந்த சோதனை முடிவுகள் பொருந்தும். மராசோ கார் பெற்று இருக்கும் பாதுகாப்பு புள்ளிகளை இதுவரை வெளியான எந்த மஹிந்திரா வாகனமும் பெற்றதில்லை.

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரெனால்ட் லாட்ஜி, செவர்லே என்ஜாய் மற்றும் மாருதி சுசுகி இகோ உள்ளிட்ட மாடல்கள் சர்வதேச பாதுகாப்பு சோதனையில் வெற்றி பெற்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் புதிய மராசோ மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்கி, டாப்-என்ட் மாடலின் விலை ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொன் பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. #Mahindra #Marazzo4safety
    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது மராசோ கார் விலையை மாற்றியமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. #Mahindra #Marazzo



    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது மராசோ கார் மாடலின் விலையை மாற்றியமைக்க இருக்கிறது. அதன்படி புதிய மராசோ விலை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை அதிகரிக்கப்படுகிறது. புதிய விலை மாற்றம் ஜனவரி 1, 2019 முதல் அமலாகும் என மஹிந்திரா அறிவித்துள்ளது.

    மராசோ கார் அறிமுகம் செய்யப்படும் போதே புதிய காரின் விலை அறிமுக சலுகை தான் என மஹிந்திரா & மஹிந்திரா அறிவித்து இருந்தது. விற்பனை துவங்கிய நான்கு மாதங்களில், மராசோ கார் விலை ஜனவரி 1, 2019 முதல் அதிகரிக்கப்பட இருக்கிறது.

    இந்தியாவில் மஹிந்திரா மராசோ கார் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பேஸ் வேரியன்ட் மாடலான M2 விலை ரூ.9.99 லட்சம் என்றும் டாப்-என்ட் M8 வேரியன்ட் ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் ஒரே மாதத்தில் 10,000 முன்பதிவுகளை பெற்று இருக்கிறது. சமீபத்தில் மராசோ மாடலில் ஆப்பிள் கார் பிளே சிஸ்டம் வழங்கப்படுகிறது. புதிய மராசோ மாடல் ஏழு மற்றும் எட்டு பேர் அமரக்கூடிய வேரியன்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் பின்புறம் ஏ.சி. வென்ட்கள் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா மராசோ மாடலில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு நான்கு-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 128 பி.ஹெச்.பி. பவர். 320 என்.எம். டார்கியூ, 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மராசோ காரின் பெட்ரோல் வெர்ஷன் மற்றும் AMT வேரியன்ட் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ கார் இந்திய விற்பனையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. #Marasso



    மஹிந்திரா நிறுவனத்தின் சமீபத்திய மராசோ காரின் இந்திய விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிய மராசோ விற்பனை மராது சுசுகி நிறுவனத்தின் எர்டிகாவை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. 

    அக்டோபர் 2018ல் மராசோ கார் மொத்தம் 3,810 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதே மாதத்தில் எர்டிகா கார் வெறும் 1,387 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கிறது. இந்தியாவில் மஹிந்திரா மராசோ கார் சில மாதங்களுக்கு முன் தான் அறிமுகம் செய்யப்பட்டது. 

    அறிமுகமான முதல் மாதத்திலேயே மஹிந்திரா மராசோ சுமார் 10,000 அதிகமான முன்பதிவுகளை பெற்று இருந்தது. மஹிந்திரா மராசோ கார் சமீபத்தில் ஆப்பிள் கார் பிளே வசதியுடன் அப்டேட் செய்யப்பட்டது. முன்னதாக இந்த காரில் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. 



    தற்சமயம் ஆப்பிள் கார் பிளே வசதி கொண்ட முதல் மஹிந்திரா வாகனமாக மராசோ இருக்கிறது. இந்தியாவில் ஏழு மற்றும் எட்டு பேர் வரை பயணிக்கக்கூடிய வகையில இரண்டு வேரியன்ட்களில் மராசோ கிடைக்கிறது. மஹிந்திரா மராசோ பேஸ் வேரியன்ட் விலை ரூ.9.99 லட்சத்தில் துவங்குகிறது.

    புதிய மராசோ மாடலில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்திரா மராசோ லிட்டருக்கு 17.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மஹிந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொனஅ பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
    இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா மராசோ கார் இதுவரை சுமார் 10,000-க்கும் அதிகம் பேர் முன்பதிவு செய்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #Marazzo



    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மராசோ கார் செப்டம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், அறிமுகமான ஒரே மாதத்திற்குள் மஹிந்திரா மராசோ சுமார் 10,000-க்கும் அதிக முன்பதிவுகளை கடந்து இருப்பதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.

    இந்தியாவில் M2, M4, M6 மற்றும் M8 என நான்கு வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் மராசோவின் முழு வடிவமைப்பு சுறாவை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. 

    புதிய மராசோ காரில் ட்வின்-சேம்பர் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள், சுறா பற்களை போன்ற முன்பக்க கிரில், ஃபாக் லேம்ப்க்ள், அதரடியான பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஃபாக் லேம்ப் ஹவுசிங் பிளாஸ்டிக் அக்சென்ட் செய்யப்பட்டுள்ளது. 

    பக்கவாட்டில் 17 இன்ச் அலாய் வீல்கள், ORVM, இன்டகிரேட் செய்யப்பட்ட சிக்னல் இன்டிகேட்டர்கள், பின்புறம் ஷார்க் போன்ற எல்.இ.டி. டெயில் லைட்கள், ஹை ஸ்டாப் லேம்ப் மற்றும் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட பம்ப்பர் கொண்டுள்ளது. உள்புறம் சுத்தமான, அழகிய டேஷ்போர்டு வழங்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் அனைத்தும் கருப்பு நிறம் செய்யப்பட்டு, இருக்கைகள் மற்றும் டோர் ட்ரிம்களில் பெய்க் நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.



    இத்துடன் 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏசி வென்ட்கள், எம்.பி.வி. மாடல்களில் முதல் முறையாக சரவுன்ட் கூலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் கேபினில் டூயல்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 3-ஸ்போக் ஸ்டீரிங் வீல் மற்றும் விமானங்களில் உள்ளதை போன்ற ஹேன்ட்பிரேக் லீவர் வழங்கப்பட்டுள்ளது.

    ஏழு மற்றும் எட்டு பேர் அமரக்கூடிய வகையில் இருவிதங்களில் கிடைக்கும் மராசோ வீல்-மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. 

    புதிய மராசோ மாடலில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்திரா மராசோ லிட்டருக்கு 17.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மஹிந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொனஅ பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய மராசோ மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்கி, டாப்-என்ட் மாடலின் விலை ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ காரில் விரைவில் AMT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #MahindraMarazzo
    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ கார் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் கிடைக்கும் மராசோ காரில் பி.எஸ்.-VI எமிஷன் அமலானதும் பெட்ரோல் வேரியன்ட் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

    தற்சமயம் மஹிந்திரா மராசோ மாடலில் விரைவில் 6-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் மேக்னெட்டி மரெல்லியுடன் இணைந்து புதிய AMT கியர்பாக்ஸ் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் மஹிந்திரா நிறுவனம் பெட்ரோல் இன்ஜினுடன் AMT கியர்பாக்ஸ் வழங்கலாம் என கூறப்படுகிறது.

    மஹிந்திரா மராசோ மாடலில் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் மராசோ பெட்ரோல் வேரியன்ட் மாடல் அறிமுகம் செய்வதை மஹிந்திரா உறுதி செய்துள்ளது.



    புதிய மராசோ காரில் ட்வின்-சேம்பர் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள், சுறா பற்களை போன்ற முன்பக்க கிரில், ஃபாக் லேம்ப்க்ள், அதரடியான பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஃபாக் லேம்ப் ஹவுசிங் பிளாஸ்டிக் அக்சென்ட் செய்யப்பட்டுள்ளது.

    பக்கவாட்டில் 17 இன்ச் அலாய் வீல்கள், ORVM, இன்டகிரேட் செய்யப்பட்ட சிக்னல் இன்டிகேட்டர்கள், பின்புறம் ஷார்க் போன்ற எல்.இ.டி. டெயில் லைட்கள், ஹை ஸ்டாப் லேம்ப் மற்றும் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட பம்ப்பர் கொண்டுள்ளது. உள்புறம் சுத்தமான, அழகிய டேஷ்போர்டு வழங்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் அனைத்தும் கருப்பு நிறம் செய்யப்பட்டு, இருக்கைகள் மற்றும் டோர் ட்ரிம்களில் பெய்க் நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    இத்துடன் 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏசி வென்ட்கள், எம்.பி.வி. மாடல்களில் முதல் முறையாக சரவுன்ட் கூலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் கேபினில் டூயல்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 3-ஸ்போக் ஸ்டீரிங் வீல் மற்றும் விமானங்களில் உள்ளதை போன்ற ஹேன்ட்பிரேக் லீவர் வழங்கப்பட்டுள்ளது.



    ஏழு மற்றும் எட்டு பேர் அமரக்கூடிய வகையில் இருவிதங்களில் கிடைக்கும் மராசோ வீல்-மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

    பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் டூயல் ஏர்பேக்ஸ், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்கள், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ISOFIX உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதன் டாப்-என்ட் மாடல்களில் பின்புறம் பார்க்கிங் சென்சார்கள் மற்று் கேமரா, கார்னரிங் லேம்ப்கள் மற்றும் எமெர்ஜென்சி கால் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய மராசோ மாடலில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்திரா மராசோ லிட்டருக்கு 17.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #MahindraMarazzo
    கேரளா வெள்ள பாதிப்பின் போது பொது மக்களுக்கு உதவிய மீனவருக்கு மஹிந்திரா நிறுவனம் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. #Marazzo



    இந்தியாவின் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்ட கேரளா வெள்ள பாதிப்பு அம்மாநிலத்தில் பல உயிர்களை காவு வாங்கியதோடு, பொருட் சேதங்களையும் ஏற்படுத்தியது.

    இயற்கை சீற்றத்தால் மாநிலமே சீரழிந்த போதும், மனம் தளராமல் களத்தில் இறங்கி பொது மக்களுக்கு உதவி செய்ய பலர் முன்வந்தனர். அவ்வாறு உதவ வந்தவர்களில் ஒருவர் தான் ஜெய்சல் கே.பி. இதேபோன்று ஏராளமான மீனவர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களை காப்பாற்றினர்.



    இவர்கள் சேவையை பாராட்டி மாநில அரசு சார்பில் பாராட்டுச் சான்றிதழ்களை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வழங்கினார்.

    மீனவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்ட போது மழை வெள்ளத்தில் சிக்கிய சில பெண்களை காப்பாற்றி படகில் ஏற்றினார்கள். அப்போது சில பெண்கள் படகில் ஏற சிரமப்பட்டனர். 

    இதை பார்த்த ஜெய்சால் என்ற மீனவர் வெள்ள நீரில் படுத்து தனது முதுகையே படியாக்கி பெண்கள் படகில் ஏற உதவினார். மனிதாபிமானமிக்க இவரது இந்த செயலை சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதைப்பார்த்ததும் அந்த மீனவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது.



    இந்த நிலையில் மீனவர் ஜெய்சாலின் சேவையை பாராட்டி மஹிந்திரா நிறுவனம் ஜெய்சலுக்கு புதிய காரை பரிசாக வழங்கி உள்ளது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள மந்திரி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு காரை மீனவரிடம் வழங்கினார்.

    இதுபற்றி மீனவர் ஜெய்சால் கூறும்போது நான், எதையும் எதிர்பார்க்காமல் மனிதாபிமான அடிப்படையில்தான் வெள்ளத்தின் போது மீட்புப்பணியில் ஈடுபட்டேன். எனக்கு இது போன்ற பரிசு, பாராட்டுக்கள் கிடைக்கும் என்று நினைக்க வில்லை. இந்த காரையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கு பயன்படுத்துவேன் என்றார்.

    மஹிந்திரா சார்பில் வழங்கப்பட்டு இருக்கும் மராசோ கார் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரூ.9.99 லட்சம் எனும் துவக்க விலையில் கிடைக்கும் மராசோ தற்சமயம் டீசல் வேரியன்ட் மட்டுமே கிடைக்கிறது. மஹிந்திரா மராசோ மாடலில் 1.5 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 



    இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. மஹிந்திரா மராசோ லிட்டருக்கு 17.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மஹிந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொன் பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

    இந்தியாவில் புதிய மராசோ மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்கி, டாப்-என்ட் மாடலின் விலை ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    மஹேந்திரா மராசோ எம்.பி.வி. காரின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MahindraMarazzo



    மஹேந்திரா நிறுவனத்தின் மராசோ எம்.பி.வி. மாடல் செப்டம்பர் 3-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அறிமுகம் செய்வதற்கு முன்பாகவே பலமுறை இந்த கார் சோதனை செய்யப்பட்ட படங்கள் வெளியாகின. இந்நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின்படி சில விற்பனையாளர்கள் புதிய மொராசோ மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியா முழுக்க பல்வேறு விற்பனையாளர்களுக்கு புதிய எம்.பி.வி. மாடல் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மஹேந்திரா விற்பனையாளர்கள் மொராசோ மாடலுக்கான முன்பதிவு கட்டணமாக ரூ.10,000 வசூலிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் புதிய மராசோவின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. முன்னதாக காரின் எல்இடி டெயில் லைட் டீஸ் செய்யப்பட்டு இருந்தது.

    இந்தியாவில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வரும் மராசோ காரின் ஹெட்லேம்ப் வடிவமைப்பு சார்ந்த டீசரை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய காரில் ட்வின்-சேம்பர் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. 
     
    கூர்மையான முன்புறம் கொண்ட மராசோ மாடலில் க்ரோம் க்ரில் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஷார்க் போன்ற எல்இடி டெயில் லைட் கிளஸ்டர், பக்கவாட்டில் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட அலாய் வீல்கள் ஷார்க்கை தழவி உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மொராசோ மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டுள்ளது.



    மஹேந்திரா மராசோ கார் ஏழு அல்லது எட்டு பேர் அமரக்கூடிய வெர்ஷன்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மராசோ என்ற வார்த்தைக்கு ஸ்பெயின் மொழியில் ஷார்க் என அர்த்தமாகும். இந்த ஷார்க் உருவத்தை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. 

    புதிய கார் தற்போதைய மஹிந்திரா மாடல்களுக்கு மாற்றாக அமையாமல், புதிய காராக வெளியாகிறது. மராசோ தோற்றம் சார்ந்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், டேஷ்போர்டு புகைப்படங்கள் வெளியானது. அதன் படி மஹிந்திரா மராசோ மாடலில் டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

    இதன் உள்புறங்களில் XUV மாடலை போன்ற அம்சங்கள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிட்ஸம், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், பியானோ பிளாக் பேனலிங் மற்றும் புதிய ஸ்டீரிங் வீல் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா மராசோ மாடலின் இருக்கைகளில் பிரீமியம் லெதர் டிராப்களால் செய்யப்படுகிறது. இன்னோவா க்ரிஸ்டாவுக்கு போட்டியாகும் என்பதால், மிகவும் சவுகரியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மற்ற மஹிந்திரா வாகனங்களை விட அதிகளவு இடவசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய மராசோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படும் என்றும் இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் எக்ஸ்.யு.வி.500 மாடலில் வழங்கப்பட்டதை போன்ற ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    மஹேந்திரா நிறுவனத்தின் புதிய மராசோ விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கும் நிலையில், மராசோ காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. #marazzo


    மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனம் இந்தியாவில் புதிய மராசோ எம்.பி.வி. காரினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் புதிய மராசோவின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே காரின் எல்இடி டெயில் லைட் டீஸ் செய்யப்பட்டு இருந்தது.

    இந்தியாவில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வரும் மராசோ காரின் ஹெட்லேம்ப் வடிவமைப்பு சார்ந்த டீசரை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய காரில் ட்வின்-சேம்பர் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. 
     
    கூர்மையான முன்புறம் கொண்ட மராசோ மாடலில் க்ரோம் க்ரில் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஷார்க் போன்ற எல்இடி டெயில் லைட் கிளஸ்டர், பக்கவாட்டில் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட அலாய் வீல்கள் ஷார்க்கை தழவி உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மொராசோ மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டுள்ளது.

    மஹேந்திரா மராசோ கார் ஏழு அல்லது எட்டு பேர் அமரக்கூடிய வெர்ஷன்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மராசோ என்ற வார்த்தைக்கு ஸ்பெயின் மொழியில் ஷார்க் என அர்த்தமாகும். இந்த ஷார்க் உருவத்தை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. 



    புதிய கார் தற்போதைய மஹிந்திரா மாடல்களுக்கு மாற்றாக அமையாமல், புதிய காராக வெளியாகிறது. மராசோ தோற்றம் சார்ந்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், டேஷ்போர்டு புகைப்படங்கள் வெளியானது. அதன் படி மஹிந்திரா மராசோ மாடலில் டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

    இதன் உள்புறங்களில் XUV மாடலை போன்ற அம்சங்கள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிட்ஸம், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், பியானோ பிளாக் பேனலிங் மற்றும் புதிய ஸ்டீரிங் வீல் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா மராசோ மாடலின் இருக்கைகளில் பிரீமியம் லெதர் டிராப்களால் செய்யப்படுகிறது. இன்னோவா க்ரிஸ்டாவுக்கு போட்டியாகும் என்பதால், மிகவும் சவுகரியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மற்ற மஹிந்திரா வாகனங்களை விட அதிகளவு இடவசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய மராசோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படும் என்றும் இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் எக்ஸ்.யு.வி.500 மாடலில் வழங்கப்பட்டதை போன்ற ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனம் மராசோ காரின் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #mahindrau321


    மஹேந்திரா நிறுவனத்தின் மராசோ எம்.பி.வி. காரை சமீபத்தில் அறிமுகம் செய்த நிலையில், செப்டம்பர் 3-ம் தேதி இந்தியாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பண்டிகை காலத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மராசோ கார் சற்று முன்னதாகவே அறிமுகம் செய்யப்படுகிறது.

    மஹேந்திரா மராசோ கார் ஏழு அல்லது எட்டு பேர் அமரக்கூடிய வெர்ஷன்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மராசோ என்ற வார்த்தைக்கு ஸ்பெயின் மொழியில் ஷார்க் என அர்த்தமாகும். இந்த ஷார்க் உருவத்தை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. 

    புதிய கார் தற்போதைய மஹிந்திரா மாடல்களுக்கு மாற்றாக அமையாமல், புதிய காராக வெளியாகிறது. மராசோ தோற்றம் சார்ந்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், டேஷ்போர்டு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தற்சமயம் கிடைத்திருக்கும் புகைப்படங்களின் படி மஹிந்திரா மராசோ மாடலில் டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்படுகிறது.



    இதன் உள்புறங்களில் XUV மாடலை போன்ற அம்சங்கள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிட்ஸம், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், பியானோ பிளாக் பேனலிங் மற்றும் புதிய ஸ்டீரிங் வீல் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா மராசோ மாடலின் இருக்கைகளில் பிரீமியம் லெதர் டிராப்களால் செய்யப்படுகிறது. இன்னோவா க்ரிஸ்டாவுக்கு போட்டியாகும் என்பதால், மிகவும் சவுகரியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மற்ற மஹிந்திரா வாகனங்களை விட அதிகளவு இடவசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. #mahindrau321
    ×