search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "should"

    • அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும் என்று வேளாண் அதிகாரி கூறினார்.
    • அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்க உள்ளன. எனவே விவசாயி களுக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்வதோடு மட்டுமன்றி போதிய அளவு இருப்பும் உள்ளது. மாவட்டத்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதையின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட் டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள விவசாயிகள் அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நல்ல லாபகர மான வேளாணமைக்கு நல்ல விதை ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, ஒருங்கி ணைந்த பயிர் பாதுகாப்பு ஆகியன இன்றியமையாதது. இதில் முக்கியமானது ஆதார நல் விதையாகும்.

    நல்ல விதை அல்லது தரமான விதை எனப்படு வது பாரம்பரிய குணங்க ளையும் அதிக பட்ச முளைப்புத்திறனையும் பெற்றிருக்கும். பிற ரகங்கள் மற்றும் களை செடிகளின் விதை இல்லாமலும் பூச்சி நோய் தாக்கம் இல்லாமலும் மண் மற்றும் செடிகளின் பாகங்கள் இல்லாமல் விதை சான்றுத் துறையால் சான்று செய்யப்படும் விதைகளாக இருக்க வேண்டும்.

    வல்லுநர் விதை (மஞ்சள் அட்டை பொருத்தப்பட்டது) மற்றும் ஆதார நல் விதை (வெள்ளை அட்டை பொருத்தப்பட்டது) உபயோகித்து விவசாயியின் வயலின் உற்பத்தியாளரால் சாகுபடி செய்யப்படுகிறது. பயிர் பூக்கும் தருணத்தில் 15 நாட்கள் முன்னதாக விதை சான்றளிப்புத் துறை யால் விதைப்பண்ணையாக பதிவு செய்யப்படுகிறது.

    விதைப்பண்ணை பூக்கும் தருணத்திலும், முதிர்ச்சி பருவத்திலும் விதைச்சான்று அலுவ லரால் வயலில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வின்போது வயல் தரம் மற்றும் விதைத்தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டுமே விதைப் பண்ணைகளில் இருந்து விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கு கழிவுகள் நீக்கப்பட்டு சுத்த மான ஒரே மாதிரியான விதைகள் பிரிக்கப்படு கின்றன.

    இது தவிர சுத்திகரிக்கப் பட்ட விதைக் குவியல்களில் விதை மாதிரி எடுக்கப்பட்டு விதை பரிசோதனை நிலை யத்திற்கு அனுப்பப் படுகிறது. பகுப்பாய்வில் தேறிய விதைக் குவியலுக்கு சான்றட்டை பொருத்தப் பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. எனவே விவசாயிகள் இதை முழுமையாக தெரிந்து கொண்டு சான்று பெற்ற விதைகளை மட்டுமே பயன் படுத்தி பலன் அடைய லாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரி வித்துள்ளார்.

    • விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. கூறினார்.
    • விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் நெல், சிறுதானியங்கள், தென்னை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 70 சதவீத நெற்பயிர்கள் வடகிழக்கு பருவ மழையையே நம்பி சாகுபடி செய்யப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது.

    2022-ம் ஆண்டில் வட கிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத காரணத்தால் ஏறத்தாழ 1 லட்சம் ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையின்றி கருகி வீணாகி உள்ளன. இதனால் விவசாயிகள் நஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திங்களூர், கேர்மாளம் பகுதியில் இருந்து மட்டும் 80 முதல் 100 பேர் கோட்டமாளம் பள்ளியில் மேல்நிலை கல்வி படிக்கின்றனர். தற்போது 20 கி.மீ. தூரத்தில் உள்ள கோட்டமாளம் பள்ளிக்கு செல்ல பள்ளி நேரத்தில் உரிய பஸ் வசதி இல்லை.
    • இப்பகுதி புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட அடர்ந்த காடு என்ற காரணத்தால் பல நேரம் காட்டுப்பாதையில் செல்ல இயலாது. மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் சென்று வந்தாலும், ஆபத்தானது.

    ஈரோடு:

    ஈரோடு டி.ஆர்.ஓ. சந்தோஷினி சந்திராவிடம், கேர்மாளம், திங்களூர் பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் மனு வழங்கினார்கள்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    தாளவாடி யூனியன் திங்களூர், கேர்மாளம் பஞ்சாயத்துகளில் காடட்டி, சுஜ்ஜல்கரை, கேர்மாளம் என்ற ஊரில் 3 அரசு உயர்நிலை பள்ளிகள் இயங்கி வருகிறது.

    கோட்டமாளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியாக கடந்த கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்டது.

    திங்களூர், கேர்மாளம் பகுதியில் இருந்து மட்டும் 80 முதல் 100 பேர் கோட்டமாளம் பள்ளியில் மேல்நிலை கல்வி படிக்கின்றனர். இதற்கு முன் 60 கி.மீ. தூரத்தில் உள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வந்தனர்.

    தற்போது 20 கி.மீ. தூரத்தில் உள்ள கோட்டமாளம் பள்ளிக்கு செல்ல பள்ளி நேரத்தில் உரிய பஸ் வசதி இல்லை.

    இப்பகுதி புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட அடர்ந்த காடு என்ற காரணத்தால் பல நேரம் காட்டுப்பாதையில் செல்ல இயலாது. மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் சென்று வந்தாலும், ஆபத்தானது.

    திங்களூர், கேர்மாளம் பகுதியில் உள்ள கிராமங்களில் 6000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வங்கி, மருத்துவமனை, யூனியன் ஆபீஸ், வேளாண் அலுவலகம் என அனைத்தும், இப்பகுதியினர் திங்களூர், கேர்மாளம் பஞ்சாயத்தை சார்ந்துள்ளனர்.

    திங்களூர், கேர்மாளம், கோட்டமாளத்தை இணைத்து கடந்த 10 ஆண்டுக்கு முன் பஸ் இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. தாளவாடி டெப்போவில் இருந்து இயக்கப்பட்ட பஸ்சை, தாளவாடியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட செய்து ஆசனூருக்கு 6:45 மணிக்கும், கேர்மாள த்துக்கு, 7:30 மணிக்கும் வந்து, கோட்ட மாளத்துக்கு 8:30 மணிக்கு செல்லும்படி இயக்க வேண்டும்.

    மறு மார்க்கமாக காலை கோட்டமாளத்தில் 8:45 மணிக்கு புறப்பட்டு, தாளவாடிக்கு 11:30 மணிக்கு வந்து சேரும். தாளவாடியில் மதியம் 2 மணிக்கு பஸ் புறப்பட்டால் ஆசனூருக்கு 2:45 மணி, கேர்மாளம் 3:30 மணி, கோட்டமாளம் மாலை 4:30 மணிக்கு வந்து சேரும்.

    பள்ளி விட்டதும், மாலை 4:45 மணிக்கு அந்த பஸ் புறப்பட செய்தால் இரவு, 7:30 மணிக்கு தாளவாடிக்கு சென்றடையும். இதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், 6,000 -க்கும் மேற்பட்ட மக்களும் பயன் பெறுவர்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவகாமி மகேஸ்வரன் நிர்வாகிகளுடன் வந்து மனு கொடுத்தார்.
    • கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும், அவரின் மறுவாழ்வுக்கு உதவ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவகாமி மகேஸ்வரன் நிர்வாகிகளுடன் வந்து மனு கொடுத்தார்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்தது தொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர், போலி ஆதார் ஆவணங்களை தயாரித்தவர் என 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாங்கள் வலியுறுத்தி இருந்தோம்.

    இந்நிலையில் பாதிக்க ப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி மேற்கொண்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற செய்தியை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்து ள்ளோம். எனவே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும், அவரின் மறுவாழ்வுக்கு உதவ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது போன்ற சம்பவங்கள் வேறு எங்கும் நடக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த கருமுட்டை தொடர்பாக போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் கருமுட்டை தான செயல்முறைக்கு என புதிய விதிமுறைகளை இயற்ற வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளை தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    அப்போது கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியம், பொதுச்செயலாளர்கள் எஸ். எம்.செந்தில், ஈஸ்வரமூர்த்தி, வேதா னந்தம், வக்கீல் அணி ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட தலைவர்கள் சின்னத்துரை, குணசேகரன், பட்டியல் அணி மாநில செயலாளர் அய்யாசாமி,

    தொழில் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக், செயலாளர் பாலமுரளி, சக்தி சுப்பிரமணி, செல்வமணி, இந்திரகுமார், ஊடகப்பிரிவு தலைவர் அண்ணாதுரை, அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவு தலைவர் ஏ.ஜே.சரவணன், துணைத் தலைவர் ரவீந்திரன் உள்பட பா.ஜனதா கட்சி பிரிவு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கீழ்பவானி அணை நீர்ப்பாசன சபையின் கூட்டம் ரங்கம்பாளைத்தில் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.

    ஈரோடு:

    கீழ்பவானி அணை நீர்ப்பாசன சபையின் கூட்டம் ரங்கம்பாளைத்தில் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் சபையின் 2021 -2022-ம் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவுகள் நிதிஅறிக்கை ஏற்றுக்கொள்ள பட்டுள்ளது.

    கீழ்பவானி சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது ஆனால் தொடர்ந்து நடைபெற வில்லை. இதனால் கீழ்பவானி ஊஞ்சலூர் பகிர்மான கால்வாயில் பாசனம் பெறும் எம் 8 ஏ பாசன சபையிலுள்ள ஆயக்கட்டு நிலங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.

    எனவே சீரமைப்பு வேலைகளை தொடர்ந்து செய்ய வேண்டும். கீழ்பவானி ஆயக்கட்டு விவசாயிகளின் பாசன உரிமையையே பாதுகாக்கும் வகையில் வருகிற ஜூலை மாதம் 10-ந் தேதி சிவகிரியில் கீழ்பவானி ஆயக்கட்டு உரிமை பாதுகாப்பு நடைபெறும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×