search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "given"

    • மாநில அபிவிருத்தி திட்டத்தில் காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
    • இந்த தகவலை ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    பெருந்துறையில் உழவர் சந்தை செயல்படுகிறது. அதனை ஒட்டிய, பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், நிமிட்டிபாளையம், சின்னமல்லான்பாளையம் போன்ற வருவாய் கிராமங்களில் தக்காளி, கத்தரி, அவரை, வெண்டை, கீரை, பீர்க்கன், புடலை, பாகல் போன்ற காய்கறி பயிர்களும், மா, வாழை, கொய்யா, நெல்லி போன்ற பழ வகைகளும், 1,200 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர்.

    பெருந்துறை உழவர் சந்தையிலும், அதனை ஒட்டிய வருவாய் கிராமங்களிலும் தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்செல்வி ஆய்வு செய்து, விவசாயிகளை சந்தித்து, 'இப்பகுதி விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை, உழவர் சந்தைக்கு கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம்.

    பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகப்படுத்தவும், காய்கறி வரத்தை அதிகரிக்க மாநில அபிவிருத்தி திட்டத்தில் காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    இந்த தகவலை ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

    • கோபிசெட்டிபாளையம் பகுதியில் தோட்டக்கலைத் துறையின் மூலமாக காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டு வருகிறது.
    • லக்கம்பட்டி பேரூராட்சி செங்கலரை பகுதியில் ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த நிரந்தர காய்கறி பந்தலை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் வட்டம் லக்கம்பட்டி பேரூராட்சியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் கொடி வகை காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் நிரந்தர காய்கறி பந்தல் அமைக்கப்பட்டிருந்ததை ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வி ன்போது கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தோட்டக்கலைத் துறையின் மூலமாக காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டு வருகிறது.

    இதில் குறிப்பாக கொடி வகை காய்கறிகளான பீர்க்கன்காய், புடலை, அவரை மற்றும் சுரைகாய் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்ய நிரந்தர கல்தூண் பந்தல் அமைக்க 50 சதவீதமானியமாக ஒரு எக்டருக்கு ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இது வரை 309 பயனாளிகளுக்கு 133 எக்டர் பரப்பில் அமைத்ததற்கு ரூ.2.66 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகை பந்தல் மூலம் கொடி வகை காய்கறிகளை சாகுபடி செய்வதால் நல்ல மகசூலும், அன்றாட வருமானமும் கிடைப்பதால் இத்திட்டத்திற்கு விவசாயிகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    விவசாயிகள் அரசால் வழங்கப்படும் பல்வேறு திட்டங்களை அறிந்து கொண்டு, நல்ல முறையில் சாகுபடி செய்து தங்களது வாழ்வாதாரத்தினை பெருக்கி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து லக்கம்பட்டி பேரூராட்சி செங்கலரை பகுதியில் ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த நிரந்தர காய்கறி பந்தலை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக கோபி செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம் அளுக்குளி ஊராட்சி பிள்ளையார் கோவில் துறை பகுதியில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலகத்தினையும், கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் பள்ளியில் செயல்பட்டு வரும் ஆய்வகம் ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    ஈரோடு மாவட்டத்தில் 20,000 ஏக்கருக்கு அதிகமான பரப்பில் வாழையானது கோபி செட்டிபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள வட்டாரங்களில் விளைவிக்கப்பட்டு அறுவடை பின்செய் நேர்த்தி செய்வதற்காக கோபி செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், அளுக்குளி குளிர்ப்ப தனக்கிடங்கு வளாகத்தில் ரூ.6.67 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம் கீழ் முதன்மை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒழுங்குமுறை விற்பனை கூடம்

    அதனைத் தொடர்ந்து கலெக்டர் வாழைக்கான முதன்மை பதப்படுத்தும் நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து ஈரோடு விற்பனை குழு சார்பில் கோபி செட்டிபாளையத்தில் செயல்படும் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மஞ்சள், பயறு வகைகள், புளி மற்றும் பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், கோபி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரவடிவேல், மைதிலி, கோபி தாசில்தார் ஆயிஷா ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவகாமி மகேஸ்வரன் நிர்வாகிகளுடன் வந்து மனு கொடுத்தார்.
    • கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும், அவரின் மறுவாழ்வுக்கு உதவ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவகாமி மகேஸ்வரன் நிர்வாகிகளுடன் வந்து மனு கொடுத்தார்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்தது தொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர், போலி ஆதார் ஆவணங்களை தயாரித்தவர் என 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாங்கள் வலியுறுத்தி இருந்தோம்.

    இந்நிலையில் பாதிக்க ப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி மேற்கொண்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற செய்தியை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்து ள்ளோம். எனவே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும், அவரின் மறுவாழ்வுக்கு உதவ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது போன்ற சம்பவங்கள் வேறு எங்கும் நடக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த கருமுட்டை தொடர்பாக போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் கருமுட்டை தான செயல்முறைக்கு என புதிய விதிமுறைகளை இயற்ற வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளை தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    அப்போது கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியம், பொதுச்செயலாளர்கள் எஸ். எம்.செந்தில், ஈஸ்வரமூர்த்தி, வேதா னந்தம், வக்கீல் அணி ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட தலைவர்கள் சின்னத்துரை, குணசேகரன், பட்டியல் அணி மாநில செயலாளர் அய்யாசாமி,

    தொழில் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக், செயலாளர் பாலமுரளி, சக்தி சுப்பிரமணி, செல்வமணி, இந்திரகுமார், ஊடகப்பிரிவு தலைவர் அண்ணாதுரை, அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவு தலைவர் ஏ.ஜே.சரவணன், துணைத் தலைவர் ரவீந்திரன் உள்பட பா.ஜனதா கட்சி பிரிவு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×