search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "has been"

    • கோபிசெட்டிபாளையம் பகுதியில் தோட்டக்கலைத் துறையின் மூலமாக காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டு வருகிறது.
    • லக்கம்பட்டி பேரூராட்சி செங்கலரை பகுதியில் ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த நிரந்தர காய்கறி பந்தலை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் வட்டம் லக்கம்பட்டி பேரூராட்சியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் கொடி வகை காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் நிரந்தர காய்கறி பந்தல் அமைக்கப்பட்டிருந்ததை ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வி ன்போது கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தோட்டக்கலைத் துறையின் மூலமாக காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டு வருகிறது.

    இதில் குறிப்பாக கொடி வகை காய்கறிகளான பீர்க்கன்காய், புடலை, அவரை மற்றும் சுரைகாய் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்ய நிரந்தர கல்தூண் பந்தல் அமைக்க 50 சதவீதமானியமாக ஒரு எக்டருக்கு ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இது வரை 309 பயனாளிகளுக்கு 133 எக்டர் பரப்பில் அமைத்ததற்கு ரூ.2.66 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகை பந்தல் மூலம் கொடி வகை காய்கறிகளை சாகுபடி செய்வதால் நல்ல மகசூலும், அன்றாட வருமானமும் கிடைப்பதால் இத்திட்டத்திற்கு விவசாயிகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    விவசாயிகள் அரசால் வழங்கப்படும் பல்வேறு திட்டங்களை அறிந்து கொண்டு, நல்ல முறையில் சாகுபடி செய்து தங்களது வாழ்வாதாரத்தினை பெருக்கி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து லக்கம்பட்டி பேரூராட்சி செங்கலரை பகுதியில் ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த நிரந்தர காய்கறி பந்தலை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக கோபி செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம் அளுக்குளி ஊராட்சி பிள்ளையார் கோவில் துறை பகுதியில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலகத்தினையும், கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் பள்ளியில் செயல்பட்டு வரும் ஆய்வகம் ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    ஈரோடு மாவட்டத்தில் 20,000 ஏக்கருக்கு அதிகமான பரப்பில் வாழையானது கோபி செட்டிபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள வட்டாரங்களில் விளைவிக்கப்பட்டு அறுவடை பின்செய் நேர்த்தி செய்வதற்காக கோபி செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், அளுக்குளி குளிர்ப்ப தனக்கிடங்கு வளாகத்தில் ரூ.6.67 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம் கீழ் முதன்மை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒழுங்குமுறை விற்பனை கூடம்

    அதனைத் தொடர்ந்து கலெக்டர் வாழைக்கான முதன்மை பதப்படுத்தும் நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து ஈரோடு விற்பனை குழு சார்பில் கோபி செட்டிபாளையத்தில் செயல்படும் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மஞ்சள், பயறு வகைகள், புளி மற்றும் பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், கோபி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரவடிவேல், மைதிலி, கோபி தாசில்தார் ஆயிஷா ஆகியோர் உடனிருந்தனர்.

    ×