என் மலர்
நீங்கள் தேடியது "tag 165678"
சேலத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள், கடனுதவியை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
சேலம்:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த விழாவில் தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை” தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டத்தில் 86 கிராம பஞ்சாயத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது. இந்த ஊராட்சிகளில் முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி காணொலி மூலமாக ஓளிபரப்பப்பட்டது.
அயோத்தியாபட்டணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் கலந்துகொண்டார்.விழாவில் வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை - மலைப் பயிர்கள் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.9,770 மதிப்பிலான மானியத்துடன் கூடிய இடுபொருட்களும், ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 3 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செல்வம், வேளாண் இணை இயக்குநர் கணேசன், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி செந்தில்குமார் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.36½ லட்சம் கடனுதவிகளை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.
திருவண்ணாமலை:
ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தின் வளர்ச்சிக்கான மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் 2018-19-ம் ஆண்டிற்கான செயல் திட்டம் தயாரிப்பது குறித்து ஜமுனா மரத்தூரில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடை பெற்றது. கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மைத்துறை, பள்ளிக் கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, வனத்துறை, மகளிர் திட்டம், மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகு, ஆதிதிராவிடர் நலத்துறை, தாட்கோ, மாவட்ட முன்னோடி வங்கி, நபார்டு என பல்வேறு துறைகளின் மூலமாக ஜவ்வாது மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்கு தேவை யான விரிவான செயல் திட்டங்கள் குறித்து எடுத் துரைக்கப்பட்டது.
மேலும் கலெக்டர், பள்ளிக் கல்வித்துறை, வனத்துறை பள்ளிகள், பழங்குடியினர் நலன் மற்றும் ஆதிதிராவிடர் உண்டு உறைவிடப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப் பட வேண்டிய அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து ஜவ்வாது மலையில் தொழில் வளர்ச்சி கொண்டு வருவதற்கான திட்டங்கள், தேன் பதப்படுத் தும் அலகு, விவசாயத்தின் வளர்ச்சி, மினி விளையாட்டு அரங்கம், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கூட்டுறவுத்துறை மூலமாக ரூ.22 லட்சத்து 39 ஆயிரத்திற்கான கடனுதவியும், மகளிர் திட்டம் மூலமாக 15 குழுக்களுக்கு ரூ.14 லட்சத்து 20 ஆயிரத்திற்கான கடனுதவி யும் கலெக்டர் வழங்கினார்.
இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், ஆரணி உதவி கலெக்டர் (பொறுப்பு) உமாமகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தின் வளர்ச்சிக்கான மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் 2018-19-ம் ஆண்டிற்கான செயல் திட்டம் தயாரிப்பது குறித்து ஜமுனா மரத்தூரில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடை பெற்றது. கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மைத்துறை, பள்ளிக் கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, வனத்துறை, மகளிர் திட்டம், மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகு, ஆதிதிராவிடர் நலத்துறை, தாட்கோ, மாவட்ட முன்னோடி வங்கி, நபார்டு என பல்வேறு துறைகளின் மூலமாக ஜவ்வாது மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்கு தேவை யான விரிவான செயல் திட்டங்கள் குறித்து எடுத் துரைக்கப்பட்டது.
மேலும் கலெக்டர், பள்ளிக் கல்வித்துறை, வனத்துறை பள்ளிகள், பழங்குடியினர் நலன் மற்றும் ஆதிதிராவிடர் உண்டு உறைவிடப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப் பட வேண்டிய அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து ஜவ்வாது மலையில் தொழில் வளர்ச்சி கொண்டு வருவதற்கான திட்டங்கள், தேன் பதப்படுத் தும் அலகு, விவசாயத்தின் வளர்ச்சி, மினி விளையாட்டு அரங்கம், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கூட்டுறவுத்துறை மூலமாக ரூ.22 லட்சத்து 39 ஆயிரத்திற்கான கடனுதவியும், மகளிர் திட்டம் மூலமாக 15 குழுக்களுக்கு ரூ.14 லட்சத்து 20 ஆயிரத்திற்கான கடனுதவி யும் கலெக்டர் வழங்கினார்.
இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், ஆரணி உதவி கலெக்டர் (பொறுப்பு) உமாமகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் கட்டுமானங்களுக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.3,500 கோடி) கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. #ADB #AsianDevelopmentBank #TamilNadu
புதுடெல்லி:
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆசிய வளர்ச்சி வங்கியின் நகர்ப்புற மேம்பாட்டு தனி அதிகாரி ரோன் சிலாங்ஜென் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதி மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருகிறார்கள். இதனால் இந்திய மாநிலங்களில் நகர்ப்புறத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
மாநிலத்தில் நகர்ப்புற பகுதிகள் அதிகமாகி வருவதை கருத்தில் கொண்டு அவற்றின் குடிநீர் வினியோகம், கழிவு நீரகற்றல், வடிகால் வசதி ஆகிய கட்டுமானங்களுக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.3,500 கோடி) கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் குறைந்த பட்சம் 10 நகரங்கள் பயன் அடையும்.
பருவநிலை மாற்றம் காரணமாக தமிழ்நாடு வறட்சி, மழை, வெள்ளம் ஆகியவற்றை சந்திப்பதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் நகர்ப்புறங்கள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே ஆசிய வளர்ச்சி வங்கி வழங்கும் இந்த கடனுதவி தமிழ்நாட்டுக்கு பெரும் உதவியாக அமையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #ADB #AsianDevelopmentBank #TamilNadu
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆசிய வளர்ச்சி வங்கியின் நகர்ப்புற மேம்பாட்டு தனி அதிகாரி ரோன் சிலாங்ஜென் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதி மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருகிறார்கள். இதனால் இந்திய மாநிலங்களில் நகர்ப்புறத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
மாநிலத்தில் நகர்ப்புற பகுதிகள் அதிகமாகி வருவதை கருத்தில் கொண்டு அவற்றின் குடிநீர் வினியோகம், கழிவு நீரகற்றல், வடிகால் வசதி ஆகிய கட்டுமானங்களுக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.3,500 கோடி) கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் குறைந்த பட்சம் 10 நகரங்கள் பயன் அடையும்.
பருவநிலை மாற்றம் காரணமாக தமிழ்நாடு வறட்சி, மழை, வெள்ளம் ஆகியவற்றை சந்திப்பதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் நகர்ப்புறங்கள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே ஆசிய வளர்ச்சி வங்கி வழங்கும் இந்த கடனுதவி தமிழ்நாட்டுக்கு பெரும் உதவியாக அமையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #ADB #AsianDevelopmentBank #TamilNadu






