search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகளுக்கு"

    சேலம் மாவட்டத்தில் 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 82 விவசாயிகள் பிரதம மந்திரியின் கவுரவ நிதித் திட்டத்தின்  (பி.எம்.கிசான் திட்டம்)  மூலம் 4 மாதங்களுக்கு ஒரு முறை  தலா ரூ.2 ஆயிரம்  என ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய்  பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில்  விவசாயிகளுக்கான நிதியுதவித் திடடத்தின் கீழ் 10 கோடி விவசாயிகளுக்கு 11-வது தவணையாக ரூ.21,000 கோடியை பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார். இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக  தலா ரூ.2000 செலுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதேபோல் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும்  அதிகமான விவசாயிகளுடைய  வங்கி கணக்கில் தலா ரூ.2000 செலுத்தப்பட்டது. 10-வது தவணை பணம் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி புத்தாண்டு தினத்தில்  பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தினார்.

    சேலம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 57 ஆயிரத்து 475 விவசாயிகள் பொதுத்துறை வங்கிகளின் மூலம் உழவர் கடன் அட்டை (கிசான் கார்டு) பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    சேலத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள், கடனுதவியை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
    சேலம்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த விழாவில் தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில்  “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை” தொடங்கி வைத்தார். 

    சேலம் மாவட்டத்தில் 86 கிராம பஞ்சாயத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது. இந்த ஊராட்சிகளில் முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி காணொலி மூலமாக ஓளிபரப்பப்பட்டது.

    அயோத்தியாபட்டணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் கலந்துகொண்டார்.விழாவில் வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை - மலைப் பயிர்கள் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.9,770  மதிப்பிலான மானியத்துடன் கூடிய இடுபொருட்களும், ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 3 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும்  கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செல்வம், வேளாண் இணை இயக்குநர் கணேசன், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக்குழு  தலைவர்  புவனேஸ்வரி செந்தில்குமார் மற்றும் விவசாயிகள்  கலந்துகொண்டனர்.
    ×