search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100 percent subsidy"

    • மண்ணை உறுதிப்படுத்தி வளப்படுத்தும் மரமாக பனை விளங்குகிறது.
    • விவசாயிக்கும் அதிகப்பட்சம் 50 விதைகள், 15 நாற்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குனர் மரகத மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தின் மாநில மரமும், தமிழர்களின் வாழ்வோடு இணைந்தது பனை மரம். நிலத்தடி நீரை அதிகரித்தும், மண் அரிப்பை தடுத்தும், மண்ணை உறுதிப்படுத்தி வளப்படுத்தும் மரமாக பனை விளங்குகிறது.

    மண்ணுக்கு உகந்த மரமாக விளங்குவதுடன் அடி முதல் நுனி வரை பயனளித்து வாழ்வாதாரம் தருகிறது.

    எனவே பனை சாகுபடியை ஊக்குவிக்க, ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை சார்பில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை விதைகள் 30 ஆயிரம் மற்றும் நாற்றுகள் 250 வினியோகம் செய்யப்பட உள்ளது.

    ஒவ்வொரு விவசாயிக்கும் அதிகப்பட்சம் 50 விதைகள், 15 நாற்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

    விருப்பம் உள்ள விவசாயிகள் http://tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது அருகே உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவல கத்தை தொடர்பு கொண்டும் பயன் பெறலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • வேளாண்மை பொறியியல் துறை மூலம் ஆதி திராவிட விவசாயிகளுக்கு மட்டும் ஆழ்துளை கிணறு அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
    • ஆகையால் விருப் பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் வீரணம்பாளையம், சுங்ககாரன்பட்டி, கூடச்சேரி, பிராந்தகம் ஆகிய கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச் சித்திட்ட கிராமங்களில், வேளாண்மை பொறியியல் துறை மூலம் ஆதி திராவிட விவசாயிகளுக்கு மட்டும் ஆழ்துளை கிணறு அமைக்க 100 சதவீதம் மானியத்திலும், பண்ணைக்குட்டை மற்றும் பவர்டில்லர், அனைத்து விவசாயிகளுக்கும் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஆகையால் விருப் பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங் களுக்கு உதவி வேளாண்மை இயக்குநர் பரமத்தி அலுவ லகத்தை தொடர்பு கொள்ளு மாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்

    ×