search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "equipment for farmers"

    • விவசாயிகளுக்கு பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கருவிகள் மானியத்தில் வழங்க ஒது க்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • தாளவாடி வட்டாரத்தில் இக்கலூர், தாளவாடி ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது.

    ஈரோடு:

    வேளாண்மை எந்திர மயமாக்குதலின் உப இயக்கத் திட்டத்தின் கீழ் 2023-24-ம் நடப்பு நிதி யாண்டில் ஈரோடு மாவட்ட த்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கருவிகள் மானியத்தில் வழங்க ஒது க்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் சிறு, குறு பெண் விவசாயிகள், ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர பிரிவின ருக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படவுள்ளது. இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் சிறு, குறு விவசாயிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது.

    ஈரோடு மாவட்டத்திற்கு 2023-2024-ம் ஆண்டில் 42 கிராம ஊராட்சியில் இத்திட்டம் செயல்படுத்த ப்பட உள்ளது. அதன்படி அம்மாபேட்டை வட்டா ரத்தில் சிங்கம்பேட்டை, ஓடப்பாளையம், பூதப்பாடி, படவல்கால்வாய், அந்தியூர் வட்டாரத்தில், கெட்டி சமுத்திரம், மூங்கில்பட்டி, பவானி வட்டாரத்தில் பருவாச்சி, வைரமங்கலம், ஆலத்தூர், பவானி சாகர் வட்டாரத்தில் மாதம் பாளையம், நொச்சிகுட்டை, புங்கார்.

    கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் நாகதேவம் பாளையம், பெருந்தலையூர், குள்ளம்பாளையம், பாரியூர், நம்பியூர் வட்டாரத்தில் பொலவபாளையம், கடத்தூர், தாழ்குனி, சத்திய மங்கலம் வட்டாரத்தில் குமாராபாளையம், இக்கரை நகமம், புதுப்பீர்கடவூர். டி.என்.பாளையம் வட்டா ரத்தில் கொங்கர்பாளையம், புள்ளப்ப நாயக்கன் பாளை யம், தாளவாடி வட்டாரத்தில் இக்கலூர், தாளவாடி ஆகிய பகுதிகளில் செயல்படுத்த ப்படுகிறது.

    ஈரோடு வட்டாரத்தில் பிச்சாண்டாம்பாளையம், சென்னிமலை வட்டாரத்தில் ஈங்கூர், குப்பிச்சிபாளையம், முகாசிபுலவன்பாளையம், குட்டப்பாளையம், கொடு முடி வட்டாரத்தில் அஞ்சூர், நஞ்சை கொளாநல்லி. மொ டக்குறிச்சி வட்டாரத்தில் குலவிளக்கு, குளூர், விள க்கேத்தி, பெருந்துரை வட்டாரத்தில் சிங்காநல்லூர், கருக்குபாளையம், பாப்ப ம்பாளையம், பெரிய வில்லாமலை, பொலவ நாயக்கன்பாளையம், பெரிய வீரசங்கிலி ஆகிய கிராம ஊராட்சிகள் தேர்வாகி உள்ளது.

    இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மானி யத்தில் பவர்டில்லர் அல்லது களைஎடுக்கும் கருவி பெற உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல விப ரங்களுக்கு உதவி செயற் பொறியாளர், வேளா ண்மை ப்பொறியியல்துறை, ஈரோடு மற்றும் கோபி செட்டிபாளையம் ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு விண்ணப்ப ங்களை உடனடியாக அலு வலகத்தில் பதிவு செய்து பயனடையலாம் என கலெ க்டர் ராஜகோபால் சுங்கார கேட்டு க்கொண்டுள்ளார்.

    • ஆத்மா திட்டத்தின் கீழ் பயனடைந்தனர்
    • விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆத்மா திட்டத்தின் கீழ் சயனபுரம் கிராமத்தில் நெல் வயல் விழா நடத்தப்பட்டது.

    ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வடமலை தலைமை தாங்கினார். ஒன்றிய குழு பெருந்தலைவர் வடிவேல் முன்னிலை வகித்தார்.

    நெமிலி வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி அருணா குமாரி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேல் சிறப்புரை ஆற்றினார். பின்னர் பள்ளி குழந்தைகள் மற்றும் விவசாயிகளுடன் தொழில்நுட்ப பதாகைகளை ஏந்தி தொழில்நுட்ப விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    விழாவில் 50 விவசாயிகளுக்கு மானியத்தில் உளுந்து 30 விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் 10 விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான் 20 விவசாயிகளுக்கு இயற்கை உரம் மானியத்தில் வழங்கப்பட்டது. விழாவில் ஒன்றிய கவுன்சிலர் சுகந்தி சிவராஜ் கலந்து கொண்டார்.

    முடிவில் வேளாண்மை துணை அலுவலர் ராமமூர்த்தி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் புண்ணியராஜ், செந்தில், ஆத்மா திட்ட அலுவலர்கள் நிர்மலா தேவி ராஜேந்திரன் ராமதாஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் விழாவில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2022-23-ன் தார்பாய்கள், மின்கல தெளிப்பான்கள் (பேட்டரி ஸ்பிரேயர்), வேளாண் உபகரணங்களின் தொகுப்பு (மண்வெட்டி, களை கொத்து, கதிர் அரிவாள்-2, கடப்பாரை, காறைசட்டி), ஜிப்சம், ஜிங் சல்பேட் உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
    • உழவர் நலத்துறை உதவி வேளாண்மை அலுவலர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2022-23-ன் கீழ் கபிலர்மலை ஒன்றியம் வடகரையாத்தூர் கிராமத்திற்கு தார்பாய்கள், மின்கல தெளிப்பான்கள் (பேட்டரி ஸ்பிரேயர்), வேளாண் உபகரணங்களின் தொகுப்பு (மண்வெட்டி, களை கொத்து, கதிர் அரிவாள்-2, கடப்பாரை, காறைசட்டி), ஜிப்சம், ஜிங் சல்பேட் உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

    எனவே விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல், கணினி சிட்டா, ரேசன் அட்டை நகலை கபிலர்மலை உதவி வேளாண்மை அலுவல கத்திற்கு கொண்டுவந்து பெற்றுக் கொள்ளலாம்.

    வேளாண்மை உபகர ணங்களின் தொகுப்பு பெறுவதற்கு சிறு, குறு விவ சாயிகளுக்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் என கபிலர்மலை உழவர் நலத்துறை உதவி

    வேளாண்மை அலுவலர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

    ×