என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கூட்டத்தில் வலியுறுத்தல்
- டாஸ்மாக் கிடங்கில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 10 சதவீதம் வழங்க வேண்டும்.
- சுமைப்பணி தொழிலாளர்களுக்கு நலநிதி உள்ளிட்ட நிதி பயன்களை வழங்க வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டக் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் முருகேசன் தலைமை வைத்தார்.
கூட்டத்தில் சுமப்பணி சம்மேளன மாநிலத் தலைவர் குணசேகரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகையன், சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் கஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜானகிராமன், சிஐடியு நிர்வாகிகள் மாலதி, வைத்தியநாதன், லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேரளம் ரயில்வே குட்செட் தலைவர் வீரபாண்டியன் வரவேற்றார். இறுதியில் டாஸ்மார்க் கிளைத் தலைவர் துரைராஜ் நன்றி கூறினார்.
கூட்டத்தில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும்.
அரசு நுகர்வோர் வாணிபக் கழக நிர்வாகத்தில் பணி புரியும் சுமை பணி தொழிலாளர்களை அவுட்சோர்சிங் செய்யும் முறையில் தனியார் மயமாக்கும் உத்தரவினை வாபஸ் பெற வேண்டும்.
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக சுவைப்பணி தொழிலா ளர்கள் மற்றும் டாஸ்மாக் கிடங்கில் பணிபு ரியும் தொழிலா ளர்களுக்கு தீபாவளி போனஸ் 10 சதவீதம் வழங்க வேண்டும்.
சுமைப்பணி தொழிலாள ர்க ளுக்கு நல நிதிஉள்ளிட்ட நிதி பயன்களை வழங்க வேண்டும்.
பணிநேர த்தில் சுமை பணி தொழி லாளர்களுக்கு ஏற்படும் விபத்துகளுக்கு விபத்து காப்பீடு வழங்க வேண்டும்.
தொழிலாளர் நல வாரிய த்தில் வீடு கட்டும் திட்டத்தை தொழிலா ளர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவே ற்றப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்