என் மலர்
நீங்கள் தேடியது "executive meeting decided"
மதுரை:
மதுரை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூடடம் மதுரை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் பேரவை மாவட்ட செயலாளர் சரவணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் மாரிச்சாமி, முத்துஇருளாண்டி முன்னிலை வகித்தனர். மாநில பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. அமர்நாத், நிர்வாகிகள் முருகேசன், அபுதாகீர், சீனிவாசன், டாஸ்மாக் போஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மதுரை மாநகர் முழுவதும் ஜெயலலிதா பேரவை சார்பில் 1 லட்சம் புதிய உறுப்பினர்களை அ.தி.மு.க.வில் சேர்க்க பாடுபடுவது என்றும், வருகிற 2019-ம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மா பிறந்த தினத்தில் மதுரை மாநகரில் ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதாவுக்கு முழுஉருவ சிலை நிறுவி திறக்க வேண்டும் என்று பேரவை மாநில செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை வேண்டிக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






