search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "family card"

    • நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
    • இன்று முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 850 ரேஷன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    திருவள்ளூர்:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்த தொகை அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இன்று முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 850 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 62 ஆயிரத்து 893 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    • முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்.
    • ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.

    நாகப்பட்டினம்:

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, வேலை வாய்ப்பு பிரிவு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகப்பட்டினத்தில் ஒவ்வொரு மாதமும் 2-ம் வெள்ளிக்கிழமை அல்லது 3-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்கள் மாதம் ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில் இந்த மாதம் 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ள சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெ றலாம்.

    மேலும் இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பங்குபெற்று வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    எனவே, இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களுடைய அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகிய அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இத்தகவலை நாகை மாவட்ட கலெக்டர்ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • குடும்ப அட்டையில் உள்ள குறைகளை திருத்தம் செய்யும் பொருட்டு குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 18 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் குடும்ப அட்டை திருத்த சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

    பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் பொது வினியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், முகவரி திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், செல் போன் எண் பதிவு, செல்போன் எண் மாற்றம் மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் படி மேற்கொள்ள பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை திருத்தம் செய்யும் பொருட்டு குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு பரமத்திவேலூர் வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா தலைமை வகித்தார். சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 18 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    முகாமில் தனி வருவாய் ஆய்வாளர் பூபாலன் மற்றும் முதல் நிலை வருவாய் ஆய்வாளர் சசிகலா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • புதிய கடை வேண்டும் என பல ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
    • அப்பகுதியில் உள்ள 175 குடும்ப அட்டைதாரர்களுக்கு அங்கு புதிதாக பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பேரூராட்சியின் ஓ.எம்.ஆர் எல்கையான 12வது வார்டு, பவளக்கா சத்திரம் பகுதியில் ரேஷன் கடை இல்லாததால், அப்பகுதி மக்கள் அங்கிருந்து 3கி.மீ தூரத்தில் உள்ள பூஞ்சேரிக்கு வந்து பொருட்கள் வாங்கும் நிலை இருந்து வந்தது. புதிய கடை வேண்டும் என பல ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 175 குடும்ப அட்டைதாரர்களுக்கு அங்கு புதிதாக பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கவுன்சிலர்கள் மோகன்குமார், சரிதா கோவிந்தராஜ், சீனிவாசன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

    • திருவாரூரில் நாளை பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடை பெற உள்ளது.
    • இதில் பொது மக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன்பெறலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொது வினியோகத் திட்ட பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

    திருவாரூர் தாலுகா தீபங்குடி கிராமத்தில் திருவாரூர் வருவாய்கோட்ட அலுவலர் தலைமையிலும், நன்னிலம் தாலுகா வேலங்குடி கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், குடவாசல் தாலுகா கூந்தலூர் கிராமத்தில் திருவாரூர் சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், வலங்கைமான் தாலுகா புலவர் நத்தம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் தலைமையில் நடக்கிறது.

    மேலும் நீடாமங்கலம் தாலுகா பத்தூர் கிராமத்தில் மன்னார்குடி சரக துணைபதிவாளர் தலைமையிலும், மன்னார்குடி நல்லூர் கிராமத்தில் மன்னார்குடி வருவாய்கோட்ட அலுவலர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி தாலுகா பழையங்குடி கிராமத்தில் திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலும், கூத்தாநல்லூர் தாலுகா பாலகுறிச்சி கிராமத்தில் திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குனர் தலைமையிலும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் நடக்கிறது.

    எனவே, அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன்பெறலாம்.

    அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் போன்றவை குறித்த கோரிக்கை மனுக்களை அலுவலர்களிடம் மனு அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என முதல்வருக்கு பசும்பொன் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • கரும்புகளை விவசாயிடமே நேரில் அரசு கொள்முதல் செய்து பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திராவிடப் பெருநாள், உழவர் திருநாள், தமிழர் திருநாளான நம்முடைய வருடப்பிறப்பு, பொங்கல் விழா சீரும் சிறப்புமாக வருடந்தோறும் தமிழ் பெருங்குடி மக்களால் தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு விழாவாகவும், உலகிற்கு அறநெறி வகுத்த வள்ளுவர் பெருமகனார் பிறந்தநாள் விழாவாகவும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம். வரலாற்று பிரிவினைவாதிகள் தமிழர் திருநாள் பெருமையை திருடும் நோக்கத்தோடு சங்கராந்தி என்று தமிழனுக்கு சம்பந்தமில்லாத விழாவாக அன்றைய தினம் சனாதனக் கூட்டம் கொண்டாட எத்தனிக்கிறது.

    தமிழத்தில் வாழுகிற அனைத்து மதத்தினரும், அனைத்து சாதியினரும் சாதி மதமற்ற திராவிட திருநாளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ வேண்டுவதோடு, தமிழகத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் சனாதன கூட்டத்திற்கு வழி வகுத்திடாமல் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை ரம்ஜான் போல் கிறிஸ்துமஸ் போல் நம்முடைய உழவர் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் உழவர் திருநாளாக அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டுகிறேன்.

    திராவிட மாடல் அரசு நடத்தும் முதல்வர் திராவிடத் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டை தாரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட ரூ.2 ஆயிரம் வழங்க அ.தி.ம.மு.க. சார்பில் வேண்டுவதோடு வேட்டி, சேலை, செங்கரும்பும் வழங்க வேண்டுகிறேன். கரும்புகளை விவசாயிடமே நேரில் அரசு கொள்முதல் செய்து பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லை மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை நடத்தப்படுகிறது.
    • முகாமிற்கு வரும் பயனாளிகள் ஆதார் அட்டை, பிறப்பு, இறப்பு சான்று, குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றினை எடுத்து செல்ல வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுவிநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில் நெல்லை மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம், ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை நடத்தப்படுகிறது.

    டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை (10-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்டங்களிலுள்ள தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது.

    புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்கம், புைகப்படம் மாற்றம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

    புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    முகாமிற்கு வரும் பயனாளிகள் ஆதார் அட்டை, பிறப்பு, இறப்பு சான்று, குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றினை எடுத்து செல்ல வேண்டும்.

    இந்த முகாம் மற்றும் பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு கலெக்டர் அலுவலக பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறை 93424-71314 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பலவேறு கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்கள் பெறப்பட்டது.
    • மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்க–ப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் நடைபெற்ற மக்கள் குறை தீரக்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்க–ப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ள–ப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கருணை அடிப்படையில் சமையலராக ஒரு பயனாளிக்கு பணி நியமன ஆணையினையும், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளினை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப் திட்டம்) தவவளவன், நேர்முக உதவியாளர் சத்துணவு அன்பரசு மற்று அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 425 மனுக்கள் பெறப்பட்டது.
    • மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீ ர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 425 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.இக்கூ ட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா ,கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 341 மனுக்கள் பெறப்பட்டது.
    • ‘பசுமை முதன்மையாளர் விருது” மற்றும் தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 3 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 341 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்டஅலுவல ர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.பின்னர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் மூலம் பல்வேறு ஆக்க பணிகளை மேற்கொண்டு விழிப்புணர்வினை ஏற்படுத்திய லிட்டில் ஸ்காலர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி யாழினி, கவின்மிகு தஞ்சை இயக்கம் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு 'பசுமை முதன்மையாளர் விருது" மற்றும் தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 3 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

    இதையடுத்து தன்வி ருப்ப நிதியின் மூலம் அஜய் குடும்பத்தாருக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதற்கான ரூ. 20000 மதிப்பிலான காசோலையும், சுகந்தி குடும்பத்தாருக்கு ரூ. 40000 மதிப்பிலான காசோலையும் வழங்கினார். மொத்தம் ரூ.3.60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா , தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ரேசன்கார்டில் திருத்தங்கள் செய்தால் 20 ரூபாய்க்கு மாற்று ரேசன் கார்டு வழங்கப்படும் என்று உணவு வழங்கல் அதிகாரி தெரிவித்துள்ளார். #RationCard
    சென்னை:

    தமிழ்நாட்டில் 1 கோடியே 97 லட்சம் குடும்பங்களுக்கு ‘ஸ்மார்ட் ரேசன் கார்டுகள்’ வழங்கப்பட்டுள்ளன. ஆதார் எண் விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளது.

    ரேசன் கார்டில் குடும்ப தலைவர், மகன், மகள் பெயர்களில் பிழைகளை திருத்தம் செய்யவும், முகவரி மாற்றம் செய்யவும் பொது வினியோக திட்ட இணையதளத்தில் பலர் திருத்தம் செய்து வருகின்றனர்.


    இந்த கார்டுகளை நகல் எடுப்பதற்கு அரசு இ-சேவை மையங்களில் மாற்று ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டன. இதற்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

    ஆனால் சேவை மைய ஊழியர்கள் மாற்று கார்டு வழங்க அதிக பணம் வசூலித்ததால் கார்டு வழங்குவதை சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தி விட்டனர்.

    தற்போது மாற்று கார்டுகள் கேட்டு ஏராளமானோர் உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்துக்கும், வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கும் சென்ற வண்ணம் உள்ளனர்.

    இதனால் 20 ரூபாய்க்கு மாற்று ஸ்மார்ட் கார்டுகள் வழங்க ஏற்பாடு நடந்து வருவதாக உணவு வழங்கல் துறை அதிகாரி தெரிவித்தார். #RationCard
    ×