search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "correction"

    • கட்டிடத்தின் உயரத்தை அதிகரிக்க விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பது வரவேற்க கூடியது.
    • தரையில் இருந்து சீலிங் வரை 10 அடியில் இருந்து 11.5 அடியாக உயர வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையானது, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் திருத்தம் செய்துள்ளது.

    உயரம் இல்லாத கட்டிடங்களின் அதிக பட்ச அனுமதிக்கப்பட்ட கட்டிட உயரத்தை 14 மீட்டர் வரை உயர்த்தி உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்கு மிகாமல் உள்ள கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. தரைதளம் மற்றும் 3 தளத்துக்கு இதுவரையில் 12 மீட்டர் உயரம் அனுமதிக்கப்பட்டு இருந்தது. தற்போது 14 மீட்டர் வரை கட்டிடத்தின் உயரத்தை அதிகரித்து கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளது. அதே போல தரை தளம் மற்றும் 2 அடுக்குமாடி வீடுகளுக்கு 9 மீட்டர் உயரத்தில் இருந்து 10 மீட்டர் உயரம் வரை கட்டிக் கொள்ளலாம். 3 அடுக்கு மாடிகளுக்கு கட்டிடத்தின் உயரத்தை 6 அடி வரை உயர்த்தி கொள்வதன் மூலம் பல்வேறு வசதிகளை செய்து கொள்ள முடியும் என்று கட்டுமானர்கள் தெரிவிக்கின்றனர். ஏர்கண்டிஷன், பால் சீலிங் போன்ற வசதிகள் செய்வதற்கு தரையில் இருந்து கட்டிடத்தின் உயரத்தை உயர்த்த இது போதுமானதாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

    இது புதிதாக வீடு கட்டுபவர்களுக்கும், சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு வாங்குபவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது என்று கட்டுமான சங்கத்தை சேர்ந்த ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தென்னக கட்டுமான சங்க தலைவர் மோகன் கூறியதாவது:-

    கட்டிடத்தின் உயரத்தை அதிகரிக்க விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பது வரவேற்க கூடியது. இதன் மூலம் கார் பார்க்கிங் வசதி நேர்த்தியாக செய்து கொடுக்க முடியும். தரையில் இருந்து சீலிங் வரை 10 அடியில் இருந்து 11.5 அடியாக உயர வாய்ப்பு உள்ளது. இது சொந்த வீடு வாங்குவதற்கு உதவியாக இருக்கும் என்றார்.

    மேலும் கட்டிட நிறைவு சான்றிதழ் பெறுவதிலும் விலக்கு அளிக்கப்படுகிறது. தற்போது 3 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டரக்கு மிகாமல் உள்ள கட்டி டங்களுக்கு சம்பந்தப்பட்ட ஒழுங்க முறை ஆணை யத்தின் நிறைவு சான்றி தழ்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் அளவு மாறாமல் இருந்தாலும் குடியிருப்புவீடுகள் 3-ல் இருந்து 8 வரை கட்ட அனுமதிக்கப்படுகிறது. மேலும் வீடு கட்டுபவர்கள் மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளை நிறைவு சான்றிதழை சமர்பிக்காமல் எளிதாக பெறவும் இந்த திருத்தங்கள் உதவுகிறது.

    • வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் தொடர்பான சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.
    • புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவுப்படி 27.10.2023 முதல் 09.12.2023 வரை வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் தொடர்பான சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு 25.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 26.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    மேலும் அந்நாட்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.

    • நாமக்கல் மாவட்டத்தில் நாளை (27-ந் தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
    • நவம்பர் மாதம் 4, 5, 18 மற்றும் 19-ந் தேதி ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் நாளை (27-ந் தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதன் தொடர்ச்சியாக நாளை முதல் டிசம்பர் மாதம் 9-ந் தேதி வரை புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் குறித்த சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.

    தவிர நவம்பர் மாதம் 4, 5, 18 மற்றும் 19-ந் தேதி ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அந்நாட்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.

    நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுடைய இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது. எனவே 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர்களாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள், வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் அல்லது தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களுக்கு சென்று படிவம் 6-ல் விண்ணப்பம் செய்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • மார்ச் மாத இறுதியில் முதல் மற்றும் 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தி வருகின்றனர்.
    • ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை பெற நகர்ப்புற உள்ளாட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாநகராட்சி சட்ட விதிமுறைகளின் படி ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடங்கும் முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுகளுக்கான சொத்து வரியை அரையாண்டு ஆரம்பித்த 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

    ஆனால் வரி விதிப்பு தாரர்கள் பெரும்பாலும் செப்டம்பர், மார்ச் மாத இறுதியில் முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தி வருகின்றனர்.

    நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டிலும் முதல் 30 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்தி 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை பெற நகர்ப்புற உள்ளாட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த நடைமுறை தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் நடைமுறைக்கு வந்துள்ளது.

    எனவே தஞ்சை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து வரி விதிப்பு தாரர்களுக்கு 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் அதிகளவில் சொத்து வரியை மாநகராட்சிக்கு செலுத்தி பயனடைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்காசி மாவட்டத்தில் ரெயில் நிலையங்களில் பெயர் பலகைகளில் எழுத்துப் பிழைகள் உள்ளது என ரெயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் எழுதப்பட்டிருந்ததில் ஆங்கில எழுத்தில் பிழைகள் காணப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் ெரயில் நிலையங்களில் பெயர் பலகைகளில் எழுத்துப் பிழைகள் உள்ளது என ெரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் எழுதப்பட்டிருந்ததில் ஆங்கில எழுத்தில் பிழைகள் காணப்பட்டது.

    இது குறித்து பயணிகள் பாவூர்சத்திரம் பெயர் பலகையில் இருக்கும் பிழையை திருத்தி எழுத வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை ஏற்று தென்னக ெரயில்வே சார்பில் ஆங்கிலத்தில் இருந்த எழுத்துப் பிழை நீக்கப்பட்டது. இதற்கு பாவூர்சத்திரம் பகுதி ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    ரசீதை திருத்தம் செய்த வழக்கில் திட்டக்குடி வக்கீலுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் அருள்நிதி. இவர் வக்கீலாக உள்ளார். கடந்த 2010- 2011-ம் ஆண்டுகளில் சட்டசபையில் நடந்த நிகழ்ச்சிகளை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பித்தார். அதற்காக ரூ.12 ஆயிரத்து 830 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து வக்கீல் அருள்நிதி ரூ.30 மட்டும் செலுத்திவிட்டு ரூ.12 ஆயிரத்து 830 செலுத்தியதாக ரசீதை திருத்தம் செய்துள்ளார். இதனை சட்டசபை சார்பு செயலாளர் கண்டறிந்து இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி சென்னை டி.ஐ.ஜி.க்கு உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கு விசாரணை கடலூர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. ரசீதை திருத்தம் செய்த வக்கீல் அருள் நிதிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி உத்தரவிட்டார்.

    வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக தமிழகத்தில் 20 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. #VoterList #TN
    சென்னை:

    தமிழகத்தில் 2019-ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்காக கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப்பணிகள் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்று வந்தன.

    பெயர், முகவரி போன்றவற்றை திருத்துவதற்காக வாக்காளர்களுக்காக தமிழகம் முழுவதும் 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 1.1.2019 அன்று 18 வயதை பூர்த்தி செய்யக்கூடிய நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இந்த முகாமில் விண்ணப்பித்தனர். இந்த பணிகள் கடந்த அக்டோபர் மாத இறுதியில் முடிவடைந்தன.

    அந்த வகையில், தமிழகம் முழுவதும் 1.9.2108 முதல் 31.10.2018 வரை பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று வெளியிட்டார்.



    அதன்படி தமிழகம் முழுவதும் இவற்றுக்காக அலுவலகங்களில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் மொத்தம் 20 லட்சத்து 7 ஆயிரத்து 412 பேர் விண்ணப்பித்துள்ளனர். அலுவலகங்கள் மூலமாக 18 லட்சத்து 87 ஆயிரத்து 283 பேரும், ஆன்லைன் மூலமாக ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 129 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 97 ஆயிரத்து 996 விண்ணப்பங்கள், சென்னையில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 434 விண்ணப்பங்கள், காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 984 விண்ணப்பங்களும் தாக்கல் ஆகியுள்ளன.

    பெயர் சேர்ப்புக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் 74 ஆயிரத்து 984 விண்ணப்பங்களும், சென்னை மாவட்டத்தில் 92 ஆயிரத்து 863 விண்ணப்பங்களும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 84 ஆயிரத்து 286 விண்ணப்பங்களும் தாக்கல் ஆகியுள்ளன. தமிழகம் முழுவதும் பெயர் சேர்ப்புக்காக மட்டும் 13 லட்சத்து 11 ஆயிரத்து 861 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன.

    அதிகபட்சமாக சென்னையில் 92 ஆயிரத்து 863 விண்ணப்பங்களும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 8,631 விண்ணப்பங்கள் தாக்கல் ஆகியுள்ளன.

    அனைத்து வகை விண்ணப்பங்களையும் சேர்த்தால், அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 956 விண்ணப்பங்களும், அரியலூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 297 விண்ணப்பங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

    இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் முறையே பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, தகுதி இருக்கும் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். வீடுகளுக்கு தேர்தல் அலுவலர்கள் நேரடியாக வந்து சரிபார்ப்பு பணியை மேற்கொள்வார்கள்.

    பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு இனிமேலும் விண்ணப்பங்களை நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்த விண்ணப்பங்கள் வருகிற ஜனவரி 4-ந் தேதி வெளியிடப்படவுள்ள புதிய வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கு பரிசீலிக்கப்படாது. #VoterList #TN

    ரேசன்கார்டில் திருத்தங்கள் செய்தால் 20 ரூபாய்க்கு மாற்று ரேசன் கார்டு வழங்கப்படும் என்று உணவு வழங்கல் அதிகாரி தெரிவித்துள்ளார். #RationCard
    சென்னை:

    தமிழ்நாட்டில் 1 கோடியே 97 லட்சம் குடும்பங்களுக்கு ‘ஸ்மார்ட் ரேசன் கார்டுகள்’ வழங்கப்பட்டுள்ளன. ஆதார் எண் விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளது.

    ரேசன் கார்டில் குடும்ப தலைவர், மகன், மகள் பெயர்களில் பிழைகளை திருத்தம் செய்யவும், முகவரி மாற்றம் செய்யவும் பொது வினியோக திட்ட இணையதளத்தில் பலர் திருத்தம் செய்து வருகின்றனர்.


    இந்த கார்டுகளை நகல் எடுப்பதற்கு அரசு இ-சேவை மையங்களில் மாற்று ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டன. இதற்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

    ஆனால் சேவை மைய ஊழியர்கள் மாற்று கார்டு வழங்க அதிக பணம் வசூலித்ததால் கார்டு வழங்குவதை சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தி விட்டனர்.

    தற்போது மாற்று கார்டுகள் கேட்டு ஏராளமானோர் உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்துக்கும், வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கும் சென்ற வண்ணம் உள்ளனர்.

    இதனால் 20 ரூபாய்க்கு மாற்று ஸ்மார்ட் கார்டுகள் வழங்க ஏற்பாடு நடந்து வருவதாக உணவு வழங்கல் துறை அதிகாரி தெரிவித்தார். #RationCard
    ×