search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் ரெயில்நிலையத்தில்  தவறாக இருந்த பெயர் பலகை- பயணிகளின் கோரிக்கையை ஏற்று திருத்தம்
    X

    பாவூர்சத்திரம் ரெயில்நிலையத்தில் தவறாக இருந்த பெயர் பலகை- பயணிகளின் கோரிக்கையை ஏற்று திருத்தம்

    • தென்காசி மாவட்டத்தில் ரெயில் நிலையங்களில் பெயர் பலகைகளில் எழுத்துப் பிழைகள் உள்ளது என ரெயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் எழுதப்பட்டிருந்ததில் ஆங்கில எழுத்தில் பிழைகள் காணப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் ெரயில் நிலையங்களில் பெயர் பலகைகளில் எழுத்துப் பிழைகள் உள்ளது என ெரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் எழுதப்பட்டிருந்ததில் ஆங்கில எழுத்தில் பிழைகள் காணப்பட்டது.

    இது குறித்து பயணிகள் பாவூர்சத்திரம் பெயர் பலகையில் இருக்கும் பிழையை திருத்தி எழுத வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை ஏற்று தென்னக ெரயில்வே சார்பில் ஆங்கிலத்தில் இருந்த எழுத்துப் பிழை நீக்கப்பட்டது. இதற்கு பாவூர்சத்திரம் பகுதி ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×