search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "education loan"

    • 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முகாமில் பங்கேற்று கல்விக்கடன் கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தனர்.
    • ஜெய்பீம், மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி ரவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி படிப்புக்கான கல்விக்கடன் சிறப்பு முகாம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமை மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.முகாமில் கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 22 வங்கிகள் பங்கேற்றன.

    300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முகாமில் பங்கேற்று கல்விக்கடன் கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தனர். நடப்பு கல்வியாண்டில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ.64 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    சாலையோர வியாபாரிகளுக்கான விண்ணப்பங்களை விரைந்து பரிசீலனை செய்து கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்விக்கடன் கேட்டு முகாமில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு விரைந்து கல்விக்கடன் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி ரவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக கல்விக் கடன் முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 22-ந் தேதி நடைபெற உள்ளது.
    • இந்த அரிய வாய்ப்பினை கல்லூரி மாணவ- மாணவி கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கல்விக் கடன் முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 22-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    இந்த கல்விக் கடன் முகாமில் பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மற்றும் மாநில, மத்திய அரசின் பதிவு பெற்ற அனைத்து வகையான கல்லூரிகளில் படிக்கின்ற முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவ- மாணவிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    தேனி மாவட்டதில் உள்ள அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகள் இந்த முகாமில் கலந்துகொண்டு, மாண வர்கள் இணையதளத்தில் கல்விக்கடன் விண்ண ப்பத்தை பதிவு செய்வத ற்கும், பரிசீலனை செய்வத ற்கும் உறுதுணையாக இருப்பார்கள்.

    இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், கல்லூரி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ஆண்டு வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், குடும்ப அட்டை நகல், பான் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம் நகல், கவுன்லிங் மற்றும் கல்லூரி அட்மிஷன் கடிதம், கல்விக்கட்டண விவரம், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை கொண்டுவர வேண்டும்.

    இந்த அரிய வாய்ப்பினை கல்லூரி மாணவ- மாணவி கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடை–பெற உள்–ளது.
    • www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்,

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்க சிறப்பு கல்விக்கடன் முகாம் வருகிற 23-ந்தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

    மாவட்டத்தின் முன்னோடி வங்கியான கனரா வங்கி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் இந்த முகாம் நடைபெற உள்ளது.

    கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளில் விண்ணப்பத்தின் நகல், மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

    விண்ணப்ப நகல், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கிக்கணக்கு புத்தக நகல், ஆண்டு வருமான சான்று நகல், சாதிச்சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், கல்விக்கட்டண விவரம், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆவணம் போன்றவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.

    இதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் கலந்து கொண்டு மாணவர்களின் விண்ணப்பங்களை பெற்று கல்விக்கடன் வழங்க, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உரிய சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு கல்விக்கடன் பெற்று பயன்பெறலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • திருச்செந்தூர் தாசில்தார் வாமணன் கலந்துகொண்டு, கல்விக்கடன் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.
    • மாணவர்கள் சாந்தகுமார், பாலகுமரன் ஆகியோர் திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்தர மதிப்பீடு குழு தலைமையில் மத்திய அரசின் அனைவருக்கும் கல்விக்கடன் திட்டத்தின் ஒரு பகுதியாக நிதி மற்றும் கல்வி அமைச்சகத்தின் கீழ் வித்தியலட்சுமி இணைய வாயிலாக மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்விக்கடன் பெறும் வசதி தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    உள்தர மதிப்பீடு குழு ஒருங்கிணைப்பாளர் ஜீம்ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்றார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். அரசு சார்பில் திருச்செந்தூர் தாசில்தார் ப.வாமணன் கலந்து ெகாண்டு, கல்விக்கடன் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். தாவரவியல் துறைத்தலைவர் சி.பா.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கல்விக்கடன் திட்ட செயல்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கான திட்டம் குறித்து விளக்கி பேசினார். மாணவர்கள் சாந்தகுமார், பாலகுமரன் ஆகியோர் திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினர். கல்வி கடன் திட்டத்தின் நோடல் அதிகாரி பேராசிரியை க.பார்வதி தேவி நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சிரில் அருண், திருச்செல்வன், செந்தில்குமார், அண்டனி முத்து பிரபு, ராஜபூபதி ஆகியோர் ெசய்திருந்தனர்.

    • வருகிற 11-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் முருகேஷ் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வருகிற 11-ந் தேதி கருணாநிதி அரசு கலைகல்லூரியில் கல்வி கடன் மேளா நடைபெற உள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

    அப்போது கூட்டத்தில் அவர் தெரிவித்தாவது:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி என 31 கல்லூரிகள் உள்ளது. மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் கல்லூரியில் படிப்பு தொடர வேண்டுமென என்னிடம் கல்விகடன் நிதியுதவி கேட்டு வருகின்றனர்.

    மாவட்ட ஆட்சியருக்கு அரசு வருடத்திற்கு ரூ.10 இலட்சம் நிதி ஓடுக்கீடு செய்கிறது.

    அதன் அடிப்படையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். கிராமப்பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் கல்லூரியில் சேர பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

    இந்த இன்னல்களை போக்கிடும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு உதவிடும் வகையில் கல்விகடன் மேளா வருகின்ற 11-ந் தேதி கலைஞர் கருணாநிதி அரசு கலைகல்லூரியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற உள்ளது.

    இந்த முகாம் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

    மேலும் மாணவர்களுக்கு https://www.vidyalakshmi.co.in என்ற இணைதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கான மாணவ, மாணவியர்களுக்கு தனி தனியே பதிவு செய்யும் மையம் அமைக்க உள்ளன. இந்த கல்விகடன் மேளாவில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி. இந்தியன் ஓவர்சீயஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, என 12 வங்கிகள் கலந்து கொள்ள உள்ளன.

    இவ்வாறு அவர் பேசினர்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி). ரிஷப், , திட்ட இயக்குநர், மகளிர் திட்டம். ஸையித்சூலைமான், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ச.கௌரி, மற்றும் உயர் அலுவலர்கள், கல்லூரி சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் வருகிற 12-ந்தேதி வங்கி கல்வி கடன் முகாம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் வங்கி கல்விக்கடன் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 12-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    இதில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம். இந்த வங்கி கடன் முகாமில் தேசியமய மாக்கப்பட்ட அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் உள்ளிட்ட 17 வங்கிகள் பங்கேற்கின்றன.

    17 வங்கிகள் ஒரே இடத்தில் ஒன்று கூடி மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து ஆவணங்களை சரிபார்த்து விரைந்து கல்வி கடன் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. பொருளாதார சூழல் காரணமாக உயர் கல்வியை தொடர முடியாத மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று கல்விக்கடன் பெற்று பயன்பெறலாம்.

    ஏற்கனவே ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 700 மாணவர்களுக்கான உயர் கல்விக்கான உதவியை தன்னுடைய சொந்த நிதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கி வரும் நிலையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வங்கிகளில் கல்வி கடன் பெற்று பயில விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மாணவர்களின் சிரமத்தை இலகுவாக்கும் வகையில் இந்த கல்வி கடன் முகாமை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருங்கிணைத்துள்ளார்.

    ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவர்கள் பொருளாதார தடையால் உயர் கல்வி தொடர முடியாத நிலையில் இருக்கக்கூடாது. வங்கிகளின் மூலம் கல்வி கடன் பெற்று உயர் கல்வியை தொடர விரும்பும் மாணவ-மாணவிகள் இது தொடர்பான விவரங்களை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகி கேட்டு அறியலாம்.

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது உயர்கல்வியை தொடர பயனுள்ள வகையில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தெரிவித்துள்ளார். 

    • சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்கு ரூ.30 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்.
    • இந்த தகவலை மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    திட்டம்1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1லட்சத்து 20ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புற மாயிருப்பின் ரூ.98ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம்2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் மிகாமல் இருத்தல் வேண்டும்.

    திட்டம்-1ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.20லட்சமும், திட்டம் 2-ன்கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30லட்சம் வரை வழங்கப்படுகிறது.

    கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5சதவீதம், பெண்களுக்கு 4சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக்குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1லட்சம் ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.

    திட்டம் 2-ன்கீழ் ஆண்களுக்கு 8சதவீதமும், பெண்களுக்கு 6சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1லட்சத்து 50ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மையின மாணவ- மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம்-2ன் கீழ் மாணவர்களுக்கு 8சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

    எனவே மதுரை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய மதங்களை சேர்ந்த சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுசான்றிதழ், உண்மைச்சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, ெசலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து சிறுபான்மையினர் இனத்தைச்சார்ந்த மக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    • 255 மாணவர்களிடம் இருந்து ரூ.966.80 லட்சம் கல்விக்கடன் பெற விண்ணப்பம் வந்துள்ளது என்று கலெக்டர் கூறினார்.
    • ரூ.174.46 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் வட்டார அளவிலான சிறப்பு கல்வி கடன் முகாம் நடந்தது.

    சாத்தூர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் கல்லூரியிலும், வெம்பக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியிலும், அருப்புக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த மாணவ ர்களுக்கு சவுடாம்பிகை பொறியியல் கல்லூரியிலும், ராஜ பாளையம் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ராம்கோ பொறியியல் கல்லூரியிலும், ஸ்ரீவில்லி புத்தூர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் கல்லூரியிலும், வத்தி ராயிருப்பு வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கலசலிங்கம் பல்கலைக்க ழகத்திலும், காரியாபட்டி வட்டாரத்தை சேர்ந்த மாண வர்களுக்கு தனி யார் கல்லூரியிலும், நரிக்குடி மற்றும் திருச்சுழி வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், விருதுநகர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் பாலிடெக்னிக்கிலும் முகாம்கள் நடந்தன.

    இதில் 156 மாணவ- மாணவிகளிடம் இருந்து மொத்தம் ரூ.486.06 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன் வேண்டி விண்ணப்பம் பெறப்பட்டது. 15 மாணவ- மாணவிகளுக்கு உடனடி கல்விக்கடனாக ரூ.75.34 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன்கள் வழங்கப்பட்டன.மேலும், சிவகாசி வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் கல்லூரியில் நடந்த முகாமில், 99 மாணவ- மாணவிகளிடம் இருந்து மொத்தம் ரூ.480.74 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன் வேண்டி விண்ணப்பம் பெறப்பட்டது. 14 மாணவ, மாணவிகளுக்கு உடனடி கல்விக்கடனாக ரூ.99.12 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மொத்தம் விருதுநகர் மாவட்டத்தில் நடந்த கல்விக்கடன் முகாம்களில் 255 மாணவ மாணவிகளிடம் இருந்து மொத்தம் ரூ.966.80 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன் வேண்டி விண்ணப்பம் பெறப்பட்டது.

    29 மாணவ- மாணவி களுக்கு உடனடி கல்விக்கடனாக ரூ.174.46 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்விக்கடன் முகாமில் வங்கிகள் பங்கேற்றன.
    • பேராசிரியர் அருண்ராஜா நன்றி கூறினார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து ''கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாமை'' சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

    கல்லூரி தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில் குமார், டீன் மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முதலாமாண்டு துறைத் தலைவர் ஸ்ரீராம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வெம்பக்கோட்டை கிளை மேலாளர் ராஜகுமாரி, ஆலங்குளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் தணிகைநாதன், தாயில்பட்டி கிளை மேலாளர் ஆனந்த், பேங்க் ஆப் இந்தியாவின் செவல்பட்டி கிளை மேலாளர் சீனிவாசராவ், சல்வார்பட்டி கிளை மேலாளர் பிரபு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மம்சாபுரம் கிளை மேலாளர் மணிகண்டன், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஏழாயிரம்பண்ணை கிளை மோலாளர் ரகுநாத் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர்.

    வெம்பக்கோட்டை கிளைமேலாளர் ராஜகுமாரி பேசுகையில், விருதுநகர் மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின்படி இந்த சிறப்பு முகாம் நடை பெறுகிறது. தமிழக அரசின் ''வித்யாலட்சுமி'' என்ற திட்டத்தின் மூலமாக உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கவிக்கடன் வழங்கும் திட்டத்தை மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தினார். இந்த திட்டத்தின் கீழ் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்? அதற்குரிய ஆவணங்கள் சமர்பிப்பது பற்றிய வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டது. விண்ணப்பிக்கும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    ஏழை, எளிய மாண வர்களும் பயன்பெறும் வகையில் குறைந்த வட்டி விகிதத்தில் கல்வி கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், ஒருங்கிணைப்பாளர்கள் சாகுல் ஹமீது, பேராசிரியர் ராதாகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள் அலுவலக உதவியாளர் களுடன் இணைந்து செய்திருந்தனர். பேராசிரியர் அருண்ராஜா நன்றி கூறினார்.

    • திருப்பூரில் மொத்தமாக 440 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
    • கல்விக்கடன் பெற பெற்றோர்களுடன் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி படிப்பிற்கான கல்விக்கடன் பெற சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் முன்னோடி வங்கி மூலம் முகாம் நிறைவடைந்தது.

    2 நாட்களாக நடந்த இந்த முகாமில் திருப்பூர் மாவட்ட முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கல்விக்கடன் பெற பெற்றோர்களுடன் மாணவர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் வங்கி உள்ளிட்ட 18 வங்கிகள் கலந்துகொண்டன. திருப்பூரில் மொத்தமாக 440 மாணவர்கள் கலந்துகொண்ட இந்த முகாமில் 325 மாணவர்களுக்கு ரூ.10.39 கோடி அளவில் கடன் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது. மேலும் அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களான தாட்கோ, மாவட்ட தொழில் மையத்தின் கடன் திட்டங்கள், பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வங்கிகள் அதனை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி சாலையோர வியாபாரிகளுக்கான விண்ணப்பங்களை விரைந்து பரீசிலனை செய்து கடன் வழங்க அறிவுறுத்தினார். மேலும் அரசின் காப்பீடு திட்டங்கள் குறித்தும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் மீதான குறைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. முகாமில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரீசிலனை செய்யப்பட்டு விரைந்து கல்விக்கடன் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • இந்தக் கல்விக் கடன் முகாமில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் பங்கேற்கின்றன.
    • வங்கிக் கடன் முகாமில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டுமென ஷா நவாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் அக்டோபர் 28-இல் கல்விக் கடன் முகாம் மாணவர்கள் பங்கேற்று பயன்பெற ஷா நவாஸ் எம்.எல்.ஏ வலியுறுத்தல்!

    நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அக்டோபர் 28-ஆம் தேதி கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கி நடக்கும் இந்தக் கல்விக் கடன் முகாமில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் பங்கேற்கின்றன.

    இது தொடர்பான முழு விபரங்களை ஏற்கெனவே நாகை மாவட்ட ஆட்சித்த லைவர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அதன்படி வங்கிக் கடன் முகாமில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டுமென நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    குடும்ப சூழல் மற்றும் பொருளாதார பின்னடைவின் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் மாணவர்கள் ஒருவர் கூட இல்லாத நிலையை உருவாக்குவதே இந்த கல்விக் கடன் முகாமின் நோக்கம் என்று எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

    கல்விக் கடன் தொடர்பாக இதுவரை தம்மிடம் மனு அளித்த அனைவருக்கும், இந்த முகாம் பற்றிய தகவலை எம்.எல்.ஏ அலுவலகம் மூலம் தெரிவித்துள்ளதாகவும் ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பலவேறு கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்கள் பெறப்பட்டது.
    • மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்க–ப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் நடைபெற்ற மக்கள் குறை தீரக்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்க–ப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ள–ப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கருணை அடிப்படையில் சமையலராக ஒரு பயனாளிக்கு பணி நியமன ஆணையினையும், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளினை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப் திட்டம்) தவவளவன், நேர்முக உதவியாளர் சத்துணவு அன்பரசு மற்று அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×