என் மலர்
நீங்கள் தேடியது "கல்விக்கடன் ரத்து"
- கல்விக்கடனை வசூலிக்க இயலாத காரணத்தால் தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
- ரூ.48.95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிப்பு.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 1972- 1973 முதல் 2002- 2003 வரையிலான காலங்களில் அனைத்து படிப்புகளுக்கும் வழங்கப்பட்ட கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இதேபோல், 2003- 2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் வழங்கப்பட்ட கல்விக்கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புக்கு வழங்கப்பட்ட கல்விக்கடனை வசூலிக்க இயலாத காரணத்தால் தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கல்விக்கடன் வழங்கப்பட்ட மாணவர்கள் தொடர்பான ஆவணங்கள் இல்லாததால், நபர்களை அடையாளம் காண முடியாததால் தள்ளுபடி செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ரூ.48.95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார். தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 வழங்க வலியுறுத்தப்படும். மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல்மொழியாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். காவிரி, கோதாவரி ஆறுகள் இணைப்பு திட்டத்தை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்க அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மதம் மாறினாலும் சாதிரீதியான இட ஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும்படி கவர்னரிடம் வலியுறுத்தப்படும். பொது சிவில் சட்டதை அமல்படுத்தக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் முதல்வரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். #LSPolls #ADMK #ADMKmanifesto






