என் மலர்

    நீங்கள் தேடியது "loan waiver"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன பல கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    சேலம்:

    தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வேல்முருகன் வரவேற்றார். மாநிலத் தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார்.

    மாநில பொதுச்செயலாளர் பழனிமுருகன், மாநிலச் செயலாளர் வேலுநாயக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யும் ஆட்களை, விவசாயகளின் தோட்டத்திற்கு வேளாண் பணிக்கு அனுப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.10.78 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் சான்றிதழ் வழங்கினார்

    சிவகங்கை

    சிவகங்கையில் கூட்டுறவுத்துறை சார்பில் 371 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10.78 கோடி மதிப்பீட்டில் கடன் தள்ளுபடிக்கான சான்று மற்றும் 7 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.30.10 லட்சம் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களையும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகளையும் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2022-23-ம் ஆண்டில் 472 பேருக்கு ரூ.14.65 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு கடன் வழங்கப்பட்டுள்ளது. ேமலும் முதல்-அமைச்சரின் ஆணையின் படி தமிழகத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் அன்றைய தேதியில் நிலுவையில் இருக்கும் மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்ய அரசாணை வெளியி டப்பட்டது.

    அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 732 மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 38 ஆயிரத்து 681 உறுப்பினர்களிடம் நிலுவையாக இருந்த ரூ.82.04 கோடி மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

    அதற்கான தொடக்க நிகழ்வாக இன்றைய தினம் 371 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.10.78 கோடி மதிப்பீட்டில் கடன் தள்ளுபடிக்கான சான்றுகள் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதை தவிர, 7 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

    அரசின் திட்டங்களின் மூலம் பயன்பெற்று வரும் பெண்கள், திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்களின் வாழ்வா தாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) கோ.ஜினு, மேலாண்மை இயக்குநர் (மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி) ரவிச்சந்திரன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர் மன்றத் தலைவர் துரைஆனந்த், காரைக்குடி சரகத்துணை பதிவாளர் சீமான், சிவகங்கை துணை பதிவாளர் பாலச்சந்திரன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூட்டுறவுத் துறையின் இணை பதிவாளர் எஸ்.சீனிவாசன் வரவேற்று பேசினார்,
    • கூட்டுறவு துறையினர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் முத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடனுக்கான தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறையின் இணை பதிவாளர் எஸ்.சீனிவாசன் வரவேற்று பேசினார், தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் காங்கேயம், வெள்ளகோவில் பகுதிகளை சேர்ந்த 103 மகளிர் சுய குழுக்களை சேர்ந்த ஆயிரத்து 31 நபர்களுக்கு ரூ.1 கோடியே 87 லட்சத்திற்கான கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கினார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மொத்தம் ரூ. 5 லட்சத்து 42 ஆயிரத்து 541 மதிப்பிலான 3 நபர்களுக்கு பேட்டரி வீல் சேர், 9 நபர்களுக்கு செல்போன், 15 நபர்களுக்கு தையல் எந்திரம் என மொத்தம் 27 நபர்களுக்கு வழங்கினார்.

    முன்னதாக வெள்ளகோவில் ஒன்றியம், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியில் சடையப்பா நகர் மற்றும் கொங்கு நகர் ஆகிய பகுதிகளில் பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் வெள்ளகோவில் நகர் மன்ற தலைவர் மு.கனியரசிமுத்துக்குமார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ராசி கே. ஆர்.முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,வருவாய்த்துறையினர், கூட்டுறவு துறையினர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ.30.29 லட்சம் தள்ளுபடி
    • நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி அடுத்த சம்புவராய நல்லூர் நடுக்குப்பம் சுற்றுவட்டார கிராமத்தில் 22 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

    மேலும் இந்த சுய உதவிக் குழுக்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு துறையின் மூலம் 30 லட்சம் ரூபாய் கடன் உதவி அளிக்கப்பட்டு இருந்தன.

    தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

    இதன் அடிப்படையில் இந்த 30 லட்சத்து 29ஆயிரம் ரூபாய் மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடியானது.

    இந்த கடன் தள்ளுபடி அரசானை சான்றிதழை ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன் தலைமையில் பயனா ளிகளுக்கு வழங்கினார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய கூட்டுறவு வாரவிழா சிறப்பாக நடத்தப்பட இருக்கிறது.
    • பயிர்க்கடன் ரூ.10 ஆயிரத்து 292 கோடி கொடுக்கப்பட்டது.

    சென்னை :

    கோவையில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள அகில இந்திய கூட்டுறவு வாரவிழா தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அகில இந்திய கூட்டுறவு வாரவிழா வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தமிழகத்தில் சிறப்பாக நடத்தப்பட இருக்கிறது. கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும், கூட்டுறவு சங்கங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை கவுரவிப்பதற்கும், கூட்டுறவு நோக்கத்தை மக்களிடத்தில் கொண்டுசேர்த்து, அதை சிறப்பாக வழிநடத்துவதற்கும் இந்த கூட்டுறவு வார விழா மிகப்பயனுள்ளதாக இருக்கும்.

    கூட்டுறவின் நோக்கம் என்பது பொருளாதாரத்தில் அடித்தட்டில் இருக்கின்ற மக்களுக்கு அவர்கள் செய்கின்ற விவசாயமாக இருந்தாலும், நெசவுத்தொழிலாக இருந்தாலும், கைவினைஞர்களாக இருந்தாலும், அவர்களே உறுப்பினர்களாக பதிவு செய்து ஒரு கூட்டமைப்பாக ஒரு சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடனை வழங்கி சேவை செய்வதாகும்.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வட்டியில்லாமல் கடன் வழங்கியதிலும் தமிழகம்தான் முன்னோடி. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிதான் வட்டியில்லாமல் தொடக்க வேளாண்மை வங்கிகளில் கடன் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். எவ்வளவு பொருளாதார நெருக்கடி இருந்தாலும், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளான நகைக்கடன் தள்ளுபடியில் ரூ.5,018 கோடி கணக்கெடுத்து, இதுவரை ரூ.4,888.88 கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. சுயஉதவி குழு கடனை பொறுத்தவரை ரூ.2,755 கோடி வரை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு கொடுத்திருக்கிறோம். பயிர்க்கடன் ரூ.10 ஆயிரத்து 292 கோடி கொடுக்கப்பட்டது.

    கடந்த 2020-ம் ஆண்டு கூட்டுறவுத்துறையில் இருந்த வைப்பீடு ரூ.67 ஆயிரம் கோடிதான்.

    இந்த ஆண்டு இந்த 6 மாத காலத்தில் ரூ.66 ஆயிரம் கோடி வந்துவிட்டது. அந்த அளவுக்கு மக்களுக்கு நம்பிக்கை இருப்பதால்தான் மக்கள் இதில் வைப்பீடு செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கர்நாடக மாநில விவசாயிகளின் 53 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகையை தள்ளுபடி செய்வது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதல் மந்திரி குமாரசாமி நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. முதல் மந்திரி வேட்பாளராக போட்டியிட்ட எடியூரப்பா, கவர்னரின் அழைப்பை ஏற்று அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக பொறுப்பேற்றவுடன் முதல் உத்தரவாக விவசாய கடனை தள்ளுபடி செய்து அறிவித்தார்.

    ஆனால், அவரது தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால், போதிய மெஜாரிட்டி இல்லாமல் மூன்று நாட்கள் மட்டுமே முதல் மந்திரியாக இருந்த எடியூரப்பாவின் உத்தரவு பலனற்றுப் போனது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாக பொறுப்பேற்றார்.

    இதை தொடர்ந்து முதல் மந்திரி குமாரசாமி இன்னும் ஒருவாரத்துக்குள் விவசாய கடனை தள்ளுபடி செய்தாக வேண்டும் இல்லாவிட்டால் கர்நாடத்தில் போராட்டம் வெடிக்கும் என எடியூரப்பா மிரட்டி வருகிறார்.

    கர்நாடக அரசின் சார்பில் பிறப்பிக்க வேண்டிய அனைத்து உத்தரவுகளுக்கும் காங்கிரஸ் தலைமையின் தயவை நாடும் நிலையில் மிக குறைந்த அளவிலான சொந்த கட்சி எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் குமாரசாமி, விவசாய கடன்களை நிச்சயமாக தள்ளுபடி செய்வேன். இல்லாவிட்டால், முதல் மந்திரி பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதற்காக கர்நாடக மாநில தலைமை செயலகமான விதான் சவுதாவில் நாளை காலை 11 மணியளவில் முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்த வருமாறு கர்நாடக மாநிலத்தில் உள்ள விவசாய சங்கங்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
    ×