என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கர்நாடகா"
- பாதிக்கப்பட்ட நபரின் முதுகில் கீறல்களும், முகத்தில் மற்ற காயங்களும் உள்ளன.
- இது வகுப்புவாத காரணங்களைக் காட்டிலும் பணத்துக்கான தாக்குதலாகவே தெரிகிறது.
கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டத்தில் இஸ்லாமிய நபர் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் ஹூசென்சாப் என்பவர், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர், கடந்த 25ம் தேதி ஹொசப்பேட்டை நகரிலிருந்து கங்காவதி நகருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தன்னைத் தாக்கியதாகவும், பிறகு அந்த நபர்கள் தன்னிடம் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு, உடைந்த பீர் பாட்டிலின் துண்டுகளால் தனது தாடியை வெட்ட முயன்றதாகவும், தனது தாடியை தீ வைத்து எரித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், என்னை விட்டுவிடும்படி கெஞ்சினேன். ஆனால், அவர்கள் தன்னை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லும்படி வற்புறுத்தினர். எனக்கு பார்வையில் பிரச்சனை இருப்பதால், என்னால் அவர்களின் அடையாளங்களை காண முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
பிறகு, அங்கிருந்த ஆடு மேய்ப்பவர்கள் தன்னைக் காப்பாற்ற வந்தபோது, மர்ம நபர்கள் தன்னை கல்லால் தலையில் அடிக்க முயன்றதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், இந்த தாக்குதல் வகுப்புவாத தாக்குதலாக இல்லாமல் கொள்ளையாக நடந்ததாக தெரிகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, கொப்பல் காவல்துறை கண்காணிப்பாளர் யசோதா வந்தகோடி கூறுகையில்" பாதிக்கப்பட்ட நபரின் முதுகில் கீறல்களும், முகத்தில் மற்ற காயங்களும் உள்ளன. அவர் ஒரு பாட்டிலால் தாக்கப்பட்டதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. இது வகுப்புவாத காரணங்களைக் காட்டிலும் பணத்துக்கான தாக்குதலாகவே தெரிகிறது. விசாரணைகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.
- தெலுங்கானா தினசரி நாளேடுகளில் கர்நாடக அரசு விளம்பரங்கள் வெளியீடு.
- பா.ஜ.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், கர்நாடகா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி தெலுங்கானா தினசரி நாளேடுகளில் கர்நாடக அரசு செய்த சாதனைகளை விளக்கும் விளம்பரங்களை வெளியிட்டது.
கர்நாடக அரசு விளம்பரங்கள் தேர்தல் நடைபெற இருக்கும் தெலுங்கானா மாநில நாளேடுகளில் விளம்பரங்களாக வெளியிடுவது குறித்து பா.ஜ.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்திருக்கும் தேர்தல் ஆணையம், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தின் விளம்பரங்கள் தெலுங்கானா நாளேடுகளில் வெளியிட தடை விதித்து இருக்கிறது.

தேர்தலில் பலத்தை நிரூபிக்க காங்கிரஸ் கட்சி பொது மக்களின் வரி பணத்தை வீணடிக்கிறது என பா.ஜ.க. குற்றம்சாட்டி இருந்தது. தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கட்சி நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யானின் ஜன சேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.
நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதே நாளில் தெலுங்கானா மட்டுமின்றி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் என மொத்தம் ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.
- தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
- காவிரி விவகாரத்தில் நமது உரிமை பறிக்கப்பட்டு வருகிறது.
மண்டியா:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. இதனால் கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்பேரில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனை கண்டித்து கர்நாடகத்தில் விவசாய சங்கங்கள், கன்னட அமைப்பினர், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியாக மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினா் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள விசுவேஸ்வரய்யா பூங்காவில் கடந்த 33 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 34-வது நாளாக நேற்றும் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு பல்வேறு அமைப்பினரும், சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
நேற்று விவசாய சங்கத்தினரும், கன்னட அமைப்பினரும் மண்டியா டவுனில் கண்டன ஊர்வலம் நடத்தினர். அப்போது மத்திய, மாநில அரசுகள் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். பின்னர் விசுவேஸ்வரய்யா பூங்காவுக்கு சென்று போராட்டத்தை தொடர்ந்தனர்.
மேலும் மண்டியா நகர் ஜெயசாமராஜ உடையார் சர்க்கிளில் கர்நாடக சேனா அமைப்பினா் தேங்காய் கூடுகளை காண்பித்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தமிழக அரசுக்கு எதிராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராகவும் குற்றம்சாட்டினர்.
மேலும் மண்டியா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்கத்தினர் மைசூரு-பெங்களூரு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விசுவேஸ்வரய்யா பூங்காவுக்கு சென்ற அவர்கள், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர். அப்போது தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு பல தகாப்தங்களாக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. கன்னடர்களுக்கு பேரடி விழுகிறது. காவிரி விவகாரத்தில் நமது உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் மாநில அரசு, விவசாயிகளின் நலனை காக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. அணைகளில் தண்ணீர் குறைவாக உள்ளதால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
காவிரி நீரை நம்பி உள்ள மண்டியா, மைசூரு, பெங்களூரு மக்கள் குடிநீருக்காக சிரமப்படுவார்கள். தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரை உடனடியாக நிறுத்த வேண்டும்.
காவிரி விவகாரத்தில் மாநிலத்தில் உள்ள 3 அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு அநீதி இழைத்து வருகிறது. காவிரி விவகாரத்தில் நமக்கு அநீதி ஏற்படுவதால் கர்நாடகத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலை அனைவரும் புறக்கணிக்க வேண்டும். குறிப்பாக காவிரி படுகையில் உள்ள மக்கள் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டும். அப்போது தான் மத்திய அரசின் பார்வை நம் பக்கம் திரும்பும் என்றனர்.
- ரோஹித் 3 வருடங்களாக அரபு நாட்டில் வேலை பார்த்து வந்தார்
- தூரத்திலேயே தாயை கண்ட ரோஹித், தாயுடன் விளையாட விரும்பினார்
கர்நாடகா மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ளது கந்தபூர் தாலுக்கா. இங்குள்ளது கங்கோலி எனும் கிராமம். கர்நாடகாவின் மேற்கு கடற்கரையோரத்தில் பஞ்சகங்காவளி ஆறு கடலை சேரும் இடத்தில் இக்கிராமம் அமைந்துள்ளதால் இங்கு மீன்பிடி வியாபாரம் முக்கிய தொழிலாக உள்ளது.
இங்கு வசிப்பவர் சுமித்ரா எனும் மீன் விற்பனை செய்யும் பெண்மணி. இவருடைய இள வயது மகன் ரோஹித்.
ரோஹித் ஒரு அரேபிய நாட்டில் கடந்த 3 வருடங்களாக வேலை பார்த்து வந்தார். 3 வருடங்களாக வீட்டிற்கு வராத ரோஹித் சொந்த ஊருக்கு திடீரென திரும்பி வந்தார். ஆனால், அனைவருக்கும் ஒரு ஆச்சரியம் கலந்த ஆனந்தத்தை கொடுப்பதற்காக தான் ஊர் திரும்பும் தகவலை பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ கூட கூறாமல் தனது சொந்த கிராமத்திற்கு வந்திறங்கினார்.
இவர் வீட்டிற்கு வந்த போது அவர் தாயார் வீட்டில் இல்லை. தினமும் அவர் செய்து வரும் மீன் வியாபாரத்திற்காக சந்தைக்கு சென்றிருப்பதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தாய்க்கு ஒரு ஆனந்த அதிர்ச்சியை கொடுக்க விரும்பிய ரோஹித் தனது முகத்தை ஒரு முகவுரையால் மூடிக் கொண்டு சந்தைக்கு சென்று தாயாரை கண்டார். அங்கு அவர் தாயார் மீன் விற்று கொண்டிருந்தார்.
தூரத்திலேயே தாயை கண்டு மகிழ்ந்தாலும், வேண்டுமென்றே முகத்திலிருந்த மாஸ்கை விலக்காமால் தாயிடம் சென்று "மீன் என்ன விலை?" என கேட்டு வியாபாரம் செய்தார்.
முதலில் மீன் வாங்க வந்திருக்கும் வாடிக்கையாளர் என நினைத்த சுமித்ரா, அந்த குரலை வைத்து சுதாரித்து கொண்டு சந்தேகம் அடைந்து, வாங்க வந்த நபரை உற்று நோக்கினார். ரோஹித் முகத்திரை அணிந்திருந்தாலும், அது தனது மகன் என அறிந்த சுமித்ரா ஓடிச்சென்று அவரை ஆர தழுவிக் கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தார்.
ரோஹித் தாயிடம் முதலில் வியாபாரம் செய்வதையும், பின் அவரது தாயார் அவரை அணைப்பது வரை அங்கிருந்தவர்கள் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.
எத்தனை வருடங்களானாலும் எந்த சூழ்நிலையிலும் மகனை அடையாளம் காணும் தாய் பாசத்தின் சிறப்பிற்கு ஈடில்லை என இந்த நிகழ்ச்சி குறித்து பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு.
- தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறக்கும் நிலையில் நாங்கள் இல்லை.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இன்று தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 5ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படவில்லை.
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் கூறியதாவது, "மாநிலத்தில் போதுமான மழை பெய்யாத காரணத்தால், உச்சநீதிமன்ற உத்தரவின் படி தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறக்கும் நிலையில் நாங்கள் இல்லை. பாராளுமன்ற சிறப்பு கூட்டம் துவங்கும் முன்பு, இந்த விவகாரம் தொடர்பாக எங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி திட்டமிட்டு வருகிறோம்," என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூட்டி இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் பி.எஸ். எடியூரப்பா, பசுவராஜ் பொம்மை, ஹெச்.டி. குமாரசுவாமி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் முதலமைச்சர்களான பசுவராஜ் பொம்மை மற்றும் குமாரசுவாமி ஆகியோர் மற்ற பணிகளில் ஈடுபட்டுள்ளதால், கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.
அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள காவிரி பகுதி அமைச்சர்கள், அனைத்து கட்சிகளை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர்கள், மூத்த அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கர்நாடகா மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்து இருந்தார்.
- கோபமுற்ற ஆசிரியர், மாணவிகளை கடுமையாக வசைபாடினார் என்று தகவல்.
- சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர் பள்ளி கல்வித் துறையிடம் புகார்.
கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் உருது பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் கன்னட மொழிப் பாடம் நடத்தும் ஆசிரியர் மாணவிகளிடம் கடுமையாக நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா இந்துக்களுக்கான நாடு என்பதை கூறி மாணவிகளை பாகிஸ்தானுக்கு போகுமாறு அந்த ஆசிரியர் கூறி இருக்கிறார்.
உருது பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவிகள் வகுப்பறையில் பேசியதாக கூறப்படுகிறது. மாணவிகள் பேசியதால் கோபமுற்ற ஆசிரியர், மாணவிகளை கடுமையாக வசைபாடினார் என்று கூறப்படுகிறது. கன்னடா மொழிப்பாடம் நடத்தி வரும் இந்த ஆசிரியர், மாணவிகளிடம், "பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள். இந்த நாடு இந்துக்களுக்கானது," என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர் பள்ளி கல்வித் துறையிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த பள்ளி கல்வித் துறை, சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்து இருக்கிறது.
"நாங்கள் அந்த ஆசிரியரை வேறு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்து இருக்கிறோம். அவர் மீது துறை ரீதிலியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிக்கை வெளியான பிறகு, மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று பள்ளி கல்வித் துறை அலுவலர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.
26 ஆண்டுகள் அனுபவம் மிக்க இந்த ஆசிரியர் உருது பள்ளியில் கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமிக்கு திடீர் உடல்நலக் குறைவு.
- குமாரசாமி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை தகவல்.
பெங்களூரு ஜெய்நகரில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அவரது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் குமாரசாமி எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
- விடுமுறை தினம் என்பதால் குறைந்த அளவே காவலர்கள் இருந்தனர்
- கீழே விழுந்ததில் காலில் அடிபட்டும் ஆட்டோவில் தப்பி சென்றார்
கர்நாடகாவின் மத்திய பகுதியில் உள்ள நகரம் தாவணகெரே.
இங்குள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு பாலியல் தாக்குதல் புகார் வந்தது. புகாரை விசாரித்த காவல் அதிகாரிகள், அது உண்மை என கண்டறிந்து வசந்த் என்பவரை கைது செய்து தாவணகெரே நகர சப்-ஜெயிலில் அடைத்தனர்.
அந்த சிறையின் சுற்றுச்சுவர் 40 அடி உயரம் கொண்டது.
இந்த சிறையில் நேற்று முன் தினம் குறைந்த அளவே சிறை காவல் அதிகாரிகள் இருந்தனர். விடுமுறை தினம் என்பதால் வெளியிலும் குறைவான அளவே கடைகள் திறந்திருந்தன.
இதனையறிந்து வசந்த் சிறையிலிருந்து தப்பிக்க திட்டம் தீட்டினார்.
அதன்படி, 40 அடி உயர சுற்றுச்சுவரை சிறைக்குள் எப்படியோ ஏறிய வசந்த், தப்பிப்பதற்காக அதன் உச்சியிலிருந்து துணிந்து கீழே குதித்தார். இந்த முயற்சியில் கீழே விழுந்த அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இருந்தும் அங்கிருந்து வெளியே சென்று ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி தப்பித்து சென்றார்.
இதையடுத்து சிறைக்கைதி தப்பி சென்றதாகவும், அவரை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் பசவநகர் காவல் நிலையத்தில் சிறைத்துறையால் ஒரு புகார் அளிக்கப்பட்டது. வசந்த் ஏறி குதித்த காட்சியும், காலில் அடிபட்டாலும் தப்பி செல்வதும், சிறையின் சுற்றுச்சுவர் அருகே ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது.
இதனை கொண்டும், விசாரணையின் மூலமாகவும் வசந்த் ஹரிஹரா தாலுக்காவில் உள்ள துக்காவதி பகுதிக்கு சென்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்ற காவல்துறையினர் அவர் பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்து பசவநகர் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
துரிதமாக செயல்பட்டு தப்பி சென்ற கைதியை 24 மணி நேரத்தில் காவல்துறை மீண்டும் பிடித்தது பலராலும் பாராட்டப்படுகிறது.
அதே நேரம், வசந்த் சிறையிலிருந்து தப்பிக்க உயரமான சுவற்றிலிருந்து கீழே குதிப்பதும், காலில் அடிபடுவதும் பதிவான காட்சி அடங்கிய கண்காணிப்பு கேமரா வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- ஐந்து பேரும் 2017-ம் ஆண்டு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்
- ஜெயிலில் இருக்கும்போது பயங்கரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியவர்கள்
கர்நாடகாவில் பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் ஐந்து பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பெங்களூருவில் குண்டு வைக்க திட்டமிட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் 5 பேரும் 2017-ம் ஆண்டு கொலை வழக்கில் தொடர்புடையவர்கள். பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்தபோது, பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் இருந்து நான்கு வால்கி-டால்கி, 7 நாட்டு துப்பாக்கி, 42 தோட்டாக்கள், 2 கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்கள், 2 சேட்டிலைட் போன்கள், 4 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.