search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power tariff"

    • மின் கட்டண குறைப்பை விடுபட்ட 6 மாதங்களுக்கும் அமல்படுத்த வேண்டும்.
    • மின் கட்டணத்தை அபராதம் இன்றி 8 தவணைகளில் செலுத்த அனுமதிக்க வேண்டும்.

    பல்லடம்:

    கோவையில் அமைச்சர் முத்துசாமியை விசைத்தறியாளர்கள் சந்தித்து, மின் கட்டண குறைப்பை விடுபட்ட 6 மாதங்களுக்கும் அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை அபராதம் இன்றி 8 தவணைகளில் செலுத்த அனுமதிக்க வேண்டும். தற்பொழுது உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை ரத்து செய்து மின் கட்டண உயர்விலிருந்து விசைத்தறிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்தனர்.

    விசைத்தறியாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த அவர் இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர், மற்றும் மின்துறை அமைச்சர், மின்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    • புதிய கட்டணம் மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • புதிய விதிமுறைகள் கடந்த 2015-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்ததாக அமைச்சர் தகவல்

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மின் உற்பத்திக்கான எரிபொருள் கொள்முதல் செலவு அதிகரித்துள்ளதால் அதை சரிசெய்வதற்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் யுனிட்டுக்கு சராசரியாக 35 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் ஜூன் மாதம் 25 முதல் 30 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது வருகிற மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என்று கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    புதிய கட்டணத்தின்படி, பெங்களூரு மின்சார வினியோக நிறுவன (பெஸ்காம்) எல்லையில் ஒரு யூனிட்டுக்கு 43 பைசா வசூலிக்கப்படும். மங்களூரு மின்சார வினியோக நிறுவன (மெஸ்காம்) எல்லை பகுதியில் 24 பைசாவும், உப்பள்ளி மின்சார வினியோக நிறுவன (ஹெஸ்காம்) எல்லை பகுதிகளில் 35 பைசாவும், கலபுரகி மின்சார வினியோக (ஜெஸ்காம்) எல்லை பகுதியில் 35 பைசாவும், சாமுண்டீஸ்வரி மின்சார வினியோக நிறுவன (செஸ்காம்) எல்லை பகுதியில் 34 பைசாவும் அதிகரித்துள்ளது.

    மின் கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகளும், மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    மின் கட்டணம் உயர்வு குறித்து மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது;-

    கர்நாடகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மின் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2015-ம் ஆண்டு நிலக்கரியின் விலை உயர்வுக்கு ஏற்பவுவும், நிலக்கரி விலையை ஒப்பிட்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது என்ற புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. அதாவது 3 மாதங்களுக்கு ஒருமுறை நிலக்கரி விலையை மதிப்பீடு செய்து, அதற்கு தகுந்தாற் போல் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, தற்போது நிலக்கரி விலை உயர்வு காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய விதிமுறைகள் கடந்த 2015-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அமலுக்கு வந்தது. மாநிலத்தில் மின் கட்டணம் உயர்வதற்கு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறையே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

    • 10 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை விசைத்தறி ஜவுளி தொழில் காப்பாற்றி வருகிறது.
    • விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளது.

    பல்லடம் :

    மின் கட்டண உயர்வில் சலுகை கேட்டு சென்னையில் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சந்தித்தனர்.

    இதுகுறித்து பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை விசைத்தறி ஜவுளி தொழில் காப்பாற்றி வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே நூல் விலை உயர்வு, உற்பத்தி செய்த காடா ஜவுளிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளது. இந்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தால் விசைத்தறி தொழில் முற்றிலும் அழிந்துவிடும். எனவே உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மேலும் சலுகைகள் வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மின் வாரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

    எங்களது கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்து, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் எடுத்துக்கூறி நல்ல பதில் கூறுவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். தமிழக முதல்வர் விசைத்தறி தொழிலுக்கு சலுகை அளித்து ஜவுளித் தொழிலை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சாய ஆலைகளுக்கு போதிய அளவு ஆா்டா்கள் இல்லாமல் மந்தமான நிலையில் உள்ளது.
    • 50 சதவீத வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது.

    திருப்பூர் :

    மின் கட்டண உயா்வு அறிவிப்பை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன், செயலாளா் முருகசாமி ஆகியோா் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் பின்னலாடை தொழிலானது நூல் விலை அதிகரிக்கும்போது கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சாய ஆலைகளுக்கும் போதிய அளவு ஆா்டா்கள் இல்லாமல் மந்தமான நிலையில் உள்ளது. இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 சதவீத வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது. மேலும் சாயத் தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்களின் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது.

    இத்தகைய சூழ்நிலையில் மின் கட்டணத்தை உயா்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது பின்னலாடைத் தொழிலின் வளா்ச்சியை வெகுவாகப் பாதித்துள்ளது. ஆகவே மின் கட்டண உயா்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்

    இமாச்சல பிரதேசத்தில் விவசாய பாசனத்திற்கான மின்சார கட்டணத்தில், யூனிட்டுக்கு 25 காசுகள் குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #HimachalBudget #PowerTariff
    சிம்லா:

    இமாச்சல பிரதேசத்தில் இன்று 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல் மந்திரி ஜெய் ராம் தாக்கூர் தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    விவசாய பாசனத்திற்கான மின்சார கட்டணம், யூனிட்டுக்கு 75 பைசாவில் இருந்து 50 பைசாவாக குறைக்கப்படும். விவசாயிகள் தங்கள் பயிர்களை குரங்குகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக சோலார் வேலி அமைத்தால், 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். விவசாயிகளுக்காக 5000 பாலிஹவுஸ்கள் அமைக்கப்படும்.



    எமர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்களுக்கு ரூ.11 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.

    பொதுமக்களின் குறைகளைக் கேட்டு, நிவர்த்தி செய்வதற்காக இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்படும். அந்த எண்ணில் தொடர்பு கொள்ளும் மக்களிடம் முதல்வர் மற்றும் அமைச்சர்களே நேரடியாக பேசுவார்கள்.

    இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #HimachalBudget #PowerTariff

    கர்நாடகத்தில் மாநில அரசு மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்பேரில் யூனிட்டுக்கு ரூ.1 முதல் ரூ.1.65 உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. #Karnataka #Powertariff
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் 2019-2020-ம் ஆண்டில் மின் கட்டணத்தை உயர்த்த மின்வாரியத்திற்கு, மின் வாரிய நிறுவனங்கள் கோரிக்கையும், சிபாரிசும் செய்துள்ளன. அதாவது பெஸ்காம் மின் வாரிய நிறுவனம் யூனிட்டுக்கு ஒரு ரூபாய் உயர்த்தவும், அதுபோல செஸ்காம் மின் வாரிய நிறுவனம் யூனிட்டுக்கு ரூ.1.65 காசுகள் அதிகரிக்கும்படியும், இதேபோன்று கெஸ்காம் மற்றும் மெஸ்காம் மின் வாரிய நிறுவனங்கள் யூனிட்டுக்கு ரூ.1.30 காசுகள் முதல் ரூ.1.45 காசுகள் வரை கட்டணத்தை உயர்த்தலாம் என்றும் மாநில அரசின் மின் வாரியத்திற்கு சிபாரிசு செய்து அறிக்கை அளித்துள்ளது.



    பிற நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் மின்சாரத்தின் விலை அதிகரித்துள்ளதாலும், மின் உற்பத்தி செய்ய ஆகும் செலவு அதிகரித்துள்ளதாலும், மின் கட்டணத்தை உயர்த்த சிபாரிசு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மின் வாரிய நிறுவனங்கள் மின் கட்டணத்தை உயர்த்தும்படி கூறி கொடுத்துள்ள அறிக்கையை மாநில அரசும், கர்நாடக மின் வாரியமும் பரிசீலித்து வருவதாகவும், இதுதொடர்பாக ஆலோசித்து மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #Karnataka #Powertariff
    ×