search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "withdraw"

    • சாய ஆலைகளுக்கு போதிய அளவு ஆா்டா்கள் இல்லாமல் மந்தமான நிலையில் உள்ளது.
    • 50 சதவீத வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது.

    திருப்பூர் :

    மின் கட்டண உயா்வு அறிவிப்பை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன், செயலாளா் முருகசாமி ஆகியோா் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் பின்னலாடை தொழிலானது நூல் விலை அதிகரிக்கும்போது கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சாய ஆலைகளுக்கும் போதிய அளவு ஆா்டா்கள் இல்லாமல் மந்தமான நிலையில் உள்ளது. இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 சதவீத வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது. மேலும் சாயத் தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்களின் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது.

    இத்தகைய சூழ்நிலையில் மின் கட்டணத்தை உயா்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது பின்னலாடைத் தொழிலின் வளா்ச்சியை வெகுவாகப் பாதித்துள்ளது. ஆகவே மின் கட்டண உயா்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்

    • வேட்பாளர்கள் வாபஸ் பெற்றது ஏன்? என்று தி.மு.க. மாவட்ட செயலாளர் மணிமாறன் கூறினார்.
    • மற்ற கட்சி வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் தி.மு.க. வேட்பாளர் வசந்தகுமாரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் 1-வது வார்டு செங்கப்படை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான இடை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் விலகிக் கொண்டார். இதேபோல் மற்ற கட்சி வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் தி.மு.க. வேட்பாளர் வசந்தகுமாரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    அவருக்கு தேர்தல் அதிகாரி சரவணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோ ஆகியோர் வெற்றி சான்றிதழை வழங்கினார். வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர் வசந்தகுமாரிக்கு, தி.மு.க மாவட்ட செயலாளர் மணிமாறன் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உழைப்பு, மக்களுக்கு ஆற்றி வருகின்ற பணிகள், அவர் தலைமையில் நல்லாட்சி தொடர்வதால் எதிர்க்கட்சிகள் போட்டியிட்டால் தோல்வி அைடந்து விடுவோம் என்ற பயத்தில் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். செங்கப்படை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதன்குமார், பாசபிரபு, முன்னாள் எம்.எல்.ஏ. லதா அதியமான், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், திருமங்கலம் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், நகரமன்றத் துணைத் தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்கபாண்டி, புவனேஸ்வரி ராஜசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலம்பட்டி சண்முகம், ஆதிமூலம், முன்னாள் யூனியன் தலைவர் கொடி சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் பிரச்சினை சீராகும் என தெரிகிறது.
    சென்னை:

    நிலத்தடி நீரை எடுக்க ஐகோர்ட்டு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வருகிற 27-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

    தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் பிரச்சினையால் மக்கள் கடும் அவதிப்படும் சூழ்நிலை உருவானது.

    இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    பேச்சுவார்த்தையின்போது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் வேலைநிறுத்தம் தள்ளி வைக்கப்படுவதாகவும் தற்போது வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாகவும், தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.முருகன் அறிவித்தார்.

    நிலத்தடி நீரை எடுக்க ஐகோர்ட்டு பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளது. நிலத்தடி நீரை கனிம வளப்பிரிவில் சேர்த்துள்ளதால் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நிலத்தடி நீரை பெறுவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் தொடர்பான தடையை நீக்க வேண்டும்.

    கனிம வளப்பிரிவில் இருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும்.

    பருவமழை பொய்த்ததாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டதாலும் மக்கள் கடும் குடிநீர் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். லாரி தண்ணீருக்காக மக்கள் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது.

    தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் மக்கள் மேலும் அவதிப்படுவார்கள், அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலை நிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தற்போதைய சூழ்நிலையில் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் பிரச்சினை சீராகும் என தெரிகிறது.

    காங்கிரஸ் மீதான அவதூறு வழக்கினை வாபஸ் பெற அனில் அம்பானி முடிவு செய்துள்ளார்.
    ஆமதாபாத்:

    ரபேல் ஒப்பந்தத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு தான் அனில் அம்பானி ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார் என காங்கிரஸ் சார்பு நே‌ஷனல் ஹெரால்டு பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. இதையடுத்து காங்கிரஸ் மீதும், நே‌ஷனல் ஹெரால்டு பத்திரிகை மீதும் அனில் அம்பானி சார்பில் ரூ.5 ஆயிரம் கோடி கேட்டு ஆமதாபாத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் அந்த வழக்கை வாபஸ் பெற அனில் அம்பானி முடிவு செய்துள்ளார். இது குறித்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலையொட்டி அரசியல் காரணங்களுக்காக தான் இது போன்ற செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தற்போது தேர்தல் முடிவடைந்து விட்டது. எனவே எங்கள் தரப்பில் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற முடிவு செய்திருக்கிறோம் என கூறப்பட்டு உள்ளது. எனினும் அறிக்கை யார் பெயரில் வெளியிடப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை.
    மணிப்பூரில் பா.ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற நாகா மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    இம்பால்:

    நாகா மக்கள் முன்னணி கட்சியில் கடந்த சில நாட்களாகவே பல குழப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. நாகாலாந்தில் கட்சிக்குள் நிகழும் பிரச்சினைகளுக்கு பா.ஜனதா தான் காரணம் என்று நாகா மக்கள் முன்னணி கூறி வருகிறது.

    மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபை இடங்கள் உள்ளன. கடந்த 2017-ல் நடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் 28 இடங்களை பெற்றது. இருப்பினும் 21 இடங்களை பெற்ற பா.ஜனதா, 4 இடங்களை பிடித்த நாகா மக்கள் முன்னணி மற்றும் தலா ஒரு இடங்களை வென்ற எல்.ஜே.பி., சுயேட்சை, ஏ.ஐ.டி.சி கட்சிகள் ஆதரவு அளித்து வந்தது. முதல்வராக பா.ஜனதாவை சேர்ந்த என்.பிரேன்சிங் முதல்வாராக பதவி வகித்து வருகிறார்.

    நாகா மக்கள் முன்னணி, மக்களவைத் தேர்தலில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சிக்கு ஆதரவு பிரசாரம் மேற்கொண்டதாக 7 சட்டப்பேரவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது. அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான மனுவையும் சபாநாயகரிடம் அளித்தது. அதேசமயம், 7 சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கட்சித் தலைவர்களும் ராஜினாமா செய்தனர்.

    இந்நிலையில் நாகலாந்து மாநிலம் கோஹிமாவில் நடைபெற்ற நாகா மக்கள் முன்னணி கூட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜனதா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஆட்சி அமைத்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், தங்கள் கட்சிக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும் நாகா மக்கள் முன்னணி மாநில தலைவரான அவாங்போநெவ்மாய் கூறியுள்ளார்.
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் காயம் காரணமாக காலிறுதி ஆட்டத்தில் இருந்து ரோஜர் பெடரர், நவோமி ஒசாகா ஆகியோர் விலகினார்கள்.
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 2-6, 6-4, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் குரோஷியாவில் போர்னா கோரிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரர், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ்சை சந்திக்க இருந்தார். இந்த நிலையில் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பெடரர் போட்டியில் இருந்து விலகினார். இது குறித்து 37 வயதான ரோஜர் பெடரர் கருத்து தெரிவிக்கையில், ‘காலிறுதி ஆட்டத்தில் விளையாட முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. நான் 100 சதவீத உடல் தகுதியுடன் இல்லாததால் எனது அணியினருடன் கலந்து ஆலோசித்து விலகல் முடிவை மேற்கொண்டேன். அடுத்த ஆண்டு இந்த போட்டிக்கு திரும்புவேன் என்று நம்புகிறேன்’ என்றார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-4, 6-0 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் ரபெல் நடால்-சிட்சிபாஸ் மோதுகிறார்கள்.

    இன்னொரு காலிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீரர் நிஷிகோரி 4-6, 2-6 என்ற நேர்செட்டில் 24-ம் நிலை வீரரான டிகோ ஸ்வார்ட்ஸ்மனிடம் (அர்ஜென்டினா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்), 4-ம் நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பெர்டென்சை சந்திக்க இருந்தார். ஆனால் வலது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நவோமி ஒசாகா கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். இதனால் கிகி பெர்டென்ஸ் போட்டியின்றி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 6-7 (5-7), 6-2, 6-2 என்ற செட் கணக்கில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்ததுடன் 500-வது வெற்றியையும் ருசித்தார்.
    வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தேர்தல் களத்தில் களமிறங்கிய தாதா ஆதிக் அகமது தேர்தல் களத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    வாரணாசி:

    பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதியில் மோடியை எதிர்த்து ஆதிக் அகமது என்ற பிரபல தாதாவும் களமிறங்கினார். தற்போது பிரயாக்ராஜ் நகரில் உள்ள நைனி சிறையில் இருக்கும் அவர் வாரணாசி தொகுதியில் வேட்புமனுவும் தாக்கல் செய்திருந்தார். சுயேச்சையாக நின்ற அவருக்கு தொலைக்காட்சி பெட்டி சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியது.

    இந்தநிலையில் தேர்தல் களத்தில் இருந்து விலகுவதாக ஆதிக் அகமது நேற்று திடீரென அறிவித்தார். இது தொடர்பாக சிறையில் இருந்து அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு பிரசாரம் செய்ய பரோல் வழங்காததால் போட்டியில் இருந்து விலகுவதாக கூறியிருந்தார்.

    முன்னதாக தேர்தல் பிரசாரத்துக்காக பரோல் வழங்க வேண்டும் என உள்ளூர் கோர்ட்டு மற்றும் அலகாபாத் ஐகோர்ட்டு போன்றவற்றில் ஆதிக் அகமது மனு செய்திருந்தார். ஆனால் அவரது மனுக்களை 2 கோர்ட்டுகளும் தள்ளுபடி செய்தன. இதனால் தனக்கு ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டு இருப்பதாக தனது கடிதத்தில் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
    சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump #ArmsTradeTreaty
    வாஷிங்டன்:

    ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்து போட்டது.

    2013-ல் போடப்பட்ட இந்த ஒப்பந்தம், 2014-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 24-ந்தேதி அமலுக்கு வந்தது.

    இந்த ஒப்பந்தமானது, சர்வதேச அளவில் மரபு ரீதியிலான ஆயுத வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும். குறிப்பாக சிறிய ரக ஆயுதங்கள் தொடங்கி போர் விமானம் வரை இதன் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

    இந்த ஒப்பந்தம், டிரம்புக்கு பிடிக்கவில்லை. இதில் இருந்து அமெரிக்கா விலகுவது பற்றி அவர் பரிசீலித்து வந்தார்.

    இந்த நிலையில், இண்டியானாபொலிஸ் நகரில் நேற்று முன்தினம் நடந்த தேசிய துப்பாக்கி சங்கத்தின் ஆண்டு விழா கூட்டத்தில் டிரம்ப் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.

    இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் நாம் போட்ட கையெழுத்தை திரும்பப்பெறுகிறோம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ நோட்டீசை அமெரிக்காவிடம் இருந்து ஐ.நா. சபை பெற்றுக்கொள்ளும்” என்று கூறினார்.  #DonaldTrump #ArmsTradeTreaty 
    பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து இந்த ஆண்டுடன் விலக கத்தார் தீர்மானித்துள்ளது. #QatarWithdraw #OPEC #QatarEnergyMinister
    தோஹா:

    சர்வதேச சந்தையில் பெட்ரோலிய  கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வசதியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வளம்மிக்க அரபு நாடுகள் முடிவு செய்து வருகின்றன.
     
    இந்த முடிவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, உலகின் பெட்ரோலிய தேவையில் 73 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செய்யும் 18 முக்கிய நாடுகளுக்கு  சவுதி அரேபியா நாட்டின் எரிபொருள்துறை மந்திரி காலித் அல் ஃபலி கடந்த மாதம் ஆலோசனை தெரிவித்திருந்தார்.

    நாளொன்றுக்கு உற்பத்தியில் 10 லட்சம் பீப்பாய்களை குறைத்து கொண்டால் பெட்ரோல் விலையை சமநிலையில் இருக்குமாறு செய்யலாம் என அவர் குறிப்பிட்டார்.



    சவுதி அரேபியாவும் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினந்தோறும் 5 லட்சம் பீப்பாய்களை குறைத்து கொள்ளும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்

    இந்நிலையில், பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து 1-1-2019 முதல் விலகப்போவதாக கத்தார் நாடு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பான அறிவிப்பை தோஹாவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்று வெளியிட்ட கத்தார் நாட்டு எரிசக்தி துறை மந்திரி சாத் அல்-காபி, ‘நாங்கள் தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுவோம்.

    ஆனால், எங்கள் நாட்டில் இயற்கை எரிவாயு உற்பத்திக்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதால் இனி இயற்கை எரிவாயு உற்பத்தியில் அதிக கவனம் செலுத்திவோம் என்று குறிப்பிட்டுள்ளார். #QatarWithdraw  #OPEC  #QatarEnergyMinister
    வங்கியின் சர்வரை ‘ஹேக்’ செய்த இணைய குற்றவாளிகள் சுமார் 15,000 பரிவர்த்தனைகளை மேற்கொண்டு ரூ.94 கோடியை சுருட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Hackers #ATMCard #PuneBank
    புனே:

    மராட்டிய மாநிலம் புனேயை தலைமை இடமாக கொண்டு காஸ்மோஸ் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைமை அலுவலக சர்வர் கடந்த 11 மற்றும் 13-ந்தேதிகளில் இருமுறை ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது. வங்கியின் சர்வரை ‘ஹேக்’ செய்த இணைய குற்றவாளிகள் சுமார் 15,000 பரிவர்த்தனைகளை மேற்கொண்டு ரூ.94 கோடியை சுருட்டி உள்ளனர்.

    இந்த தொகை வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள வங்கி கணக்குகளுக்கும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    இதுபற்றி அடையாளம் தெரியாத வெளிநாட்டு நபர்கள் மீது புனே போலீசில் காஸ்மோஸ் வங்கி அதிகாரிகள் புகார் செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  #Hackers #ATMCard #PuneBank 
    ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுகிறது என ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். #UNRightsCouncil #America
    வாஷிங்டன்:

    ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கடந்த 2006-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

    ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக இருந்து வருபவர் நிக்கி ஹாலே. இவர் இன்று செய்தியாள்ர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுகிறது என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், அரசியல் சார்பின் முரண்பாடு காரணமாகவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

    மனித உரிமைகள் பற்றிய கேலிக்குரிய ஒரு பாசாங்குத்தனமான மற்றும் சுய சேவை நிறுவனத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே நாங்கள் இந்த அமைப்பில் இருந்து விலகுவது என்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அண்மையில் அறிவித்தது.

    ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. எனவே, ஐ.நா. சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேறி விடுவோம் என தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. #UNRightsCouncil #America
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் விலகி இருக்கிறார். #Italian Open #SerenaWilliams
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் விலகி இருக்கிறார். இந்த தகவலை போட்டி அமைப்பு குழுவினர் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளனர்.

    36 வயதான செரீனா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பெண் குழந்தை பெற்ற பிறகு கடந்த மார்ச் மாதம் மீண்டும் களம் திரும்பினார். அந்த மாதத்தில் நடந்த இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நோகி ஒசாகாவிடம் தோல்வி கண்ட செரீனா வில்லியம்ஸ் அதன் பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை.

    ஸ்பெயினில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் போட்டியில் இருந்து விலகிய செரீனா வில்லியம்ஸ், இத்தாலி ஓபன் போட்டியில் இருந்தும் விலகி இருப்பதால் அவர் வருகிற 27-ந் தேதி தொடங்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. #Italian Open #SerenaWilliams 
    ×