search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "senthilbalaji"

    • அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • விசாரணையை தள்ளிவைக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல்.

    சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி சார்பில் பலமுறை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்தநிலையில், போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை முடியும் வரை சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையை தள்ளிவைக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அந்த வகையில், இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது. இந்த வழக்கின் தீர்ப்பை வரும் 15-ம் தேதிக்கு நீதிபதி அல்லி ஒத்திவைத்தார். 

    • அமலாக்கத்துறை விசாரணை முடிந்து சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்
    • நீதிமன்றத்தில் அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்

    அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.

    அதனடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை முதல் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். ஐந்து நாள் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிமன்ற காவலை நீட்டித்து புழல் சிறையில் அடைக்க மீண்டும் உத்தரவிட்டார்.

    செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குற்றபத்திரிகையை அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை டிரங்க் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.

    இந்த நிலையில் குற்றப்பத்திரிகை உள்ளிட்ட வழக்கு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விரைவாக விசாரிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதில் அல்லி, இது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு தெரிவிக்கும்படி கூறினார்.

    அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டதும், நீதிபதி இந்த மனு மீது விசாரணை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அ.தி.மு.க. அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தார்.
    • கவர்னர் டிஸ்மிஸ் செய்ததை அரசியல் சட்டத்துக்கு முரண்பாடானது என்கிறார்.

    செந்தில்பாலாஜி டிஸ்மிஸ் செய்யப்பட்டது, பின்னர் அந்த உத்தரவை கவர்னர் நிறுத்தி வைத்தது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, இது என்ன நியாயம்? என்று புரியவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அ.தி.மு.க. அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தார்.

    ஆனால் இப்போது கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும் தனது அமைச்சரவை அமைச்சரை கவர்னர் டிஸ்மிஸ் செய்ததை அரசியல் சட்டத்துக்கு முரண்பாடானது என்கிறார். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?

    செந்தில்பாலாஜி ஊழல் செய்துள்ளார். ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தவிர ஒட்டு மொத்த தமிழகமும் விரும்புகிறது என்றார்.

    • தமிழத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின், பீகார் சென்று சர்வகட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்குகிறாராம்.
    • மதுபான பார்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10 கோடி என ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் செய்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சூரப்பள்ளி, சவுரியூர், காப்பரத்தாம்பட்டி, கரிக்காப்பட்டி பகுதிகளில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கட்சியை கொடியை ஏற்றி வைத்தார்.

    பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: -

    தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அ.தி.மு.க கொண்டு வந்த ஒவ்வொரு திட்டத்தையும் ரத்து செய்கின்ற காட்சியைத்தான் சாதனையாக பார்க்கிறோம்.

    தமிழகத்தில் மின் கட்டணம் 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கைத்தறி, விசைத்தறி, உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. தமிழத்தை காப்பாற்ற முடியாத முதலமைச்சர் ஸ்டாலின், பீகார் சென்று சர்வகட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்குகிறாராம்.

    நான் முதலமைச்சராக இருந்தபோது, உங்கள் மீது வழக்கு போட்டிருக்க முடியும். ஆனால் வழக்கு போடவில்லை.

    மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் இருந்தது. 4ஆண்டுகள் சிறப்பான ஆட்சி தந்தோம். பொது இடத்தில் கூட்டம் போட்டு எங்கள் ஆட்சி மீதுள்ள குற்றச்சாட்டை சொல்லுங்கள், அதற்கு நான் பதில் தருகிறேன்.

    கைதான அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தமிழகத்தில் மதுபான பார்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10 கோடி என ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் செய்துள்ளனர். இதற்கு தான் மத்திய அரசு ரெய்டு நடத்துகிறது. செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துவிட்டால், பலர் சிக்குவார்கள்.

    இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • ஐ.சி.யூ. வார்டில் வைத்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.
    • எங்களை பொறுத்தவரை உடல் நலம் என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்தோடுதான் அணுகி வருகிறோம்.

    சென்னை:

    அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    ஐ.சி.யூ. வார்டில் வைத்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று மாலையில் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆஸ்பத்திரியின் 4-வது தளத்தில் அறை எண். 435-ல் தற்போது செந்தில்பாலாஜி தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    அவரது உடல்நிலை குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே இருக்கிறார். மருத்துவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர் உடல் நிலை தேறி வருவதாக தெரிவித்தார்கள். விரைவில் பூரண குணம் அடைவார்.

    எங்களை பொறுத்தவரை உடல் நலம் என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்தோடுதான் அணுகி வருகிறோம்.

    சமீபத்தில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்ற போது கூட மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டேன்.

    இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.

    • ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தி உள்ளார்.
    • வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் சோ்க்கை கடந்த 2 ஆண்டுகளில் 2 மடங்கு உயர்ந்து உள்ளது.

    ஈரோடு:

    வணிகர் தினமான நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 40-வது மாநாடு 'வணிகர் உரிமை முழக்க மாநாடு' என்ற பெயரில் ஈரோடு டெக்ஸ்வேலி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.

    மாநாட்டில் வணிகர்களுக்கான 'வி.வி.டி.', 'மைசாட்டோ' ஆகிய செயலிகள் மற்றும் பேரமைப்பு வலைதளம் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த மாநாட்டில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன், வி.செந்தில்பாலாஜி, பி.மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தி உள்ளார். வணிகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பெயரில் காவல் உதவி செயலி கொண்டு வரப்பட்டது. எனவே வணிகர்களுக்கு உறுதுணையாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது, வணிகர்கள் விடுக்கும் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்றி வருகிறார். 2007-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வரைமுறை செய்வதற்கு மனுக்கள் பெறப்பட்டது. ஆனால் கட்டிடம் வரைமுறை தொடர்பாக முடிவு எடுக்கக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மனுக்களை பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்து விட்டது. வேண்டுமென்றால் மனுக்களை பெறுவதற்கான அவகாசத்தை நீட்டிப்பு செய்யலாம். முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று காலஅவகாசத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அமைச்சர் செந்தில்பாலாஜி பேசும்போது கூறியதாவது:-

    வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் சோ்க்கை கடந்த 2 ஆண்டுகளில் 2 மடங்கு உயர்ந்து உள்ளது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியே காரணம்.

    இந்த மாநாட்டில் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசும்போது, மின் கட்டணம் உயர்வு தொடா்பாக போராட்டம் நடத்தப்படுமா? என்று உறுப்பினர்கள் கேள்வி கேட்டதாக தெரிவித்தார். அந்த கேள்வி கேட்டவர்களை பார்த்து கேட்கிறேன், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.410-ல் இருந்து ரூ.1,200 உயர்த்தப்பட்டதற்கும் ஏன் போராட்டம் நடத்தவில்லை. பேரமைப்பு தலைவரை தூண்டிவிடும் வகையில் செயல்படுகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விக்கிரமராஜா நேரில் சந்தித்து கோரிக்கையை தெரிவிக்கும்போது, அதை அவர் உடனடியாக நிறைவேற்றி கொடுத்து வருகிறார்.

    இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

    அமைச்சர் பி.மூா்த்தி பேசியதாவது:-

    திராவிட மாடல் ஆட்சி வணிகர்களுக்கு முழுஆதரவு அளித்து வருகிறது. நேர்மையாக தொழில் நடத்தி வரும் உங்களை போன்ற வணிகர்களுக்கு எப்போதும் தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும். கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    வணிகர் நல வாரியத்தின் நிர்வாகிகளை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.

    இவ்வாறு அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.

    • 70 ஜோடிகளுக்கு தி.மு.க. சார்பில் திருமணம் நடைபெற உள்ளது.
    • அரசின் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவி குழு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    கோவை,

    கோவை சின்னியம்பாளையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநா–ளையொட்டி 70 ஜோடிகளுக்கு தி.மு.க. சார்பில் திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

    இதனை–யொட்டி திருமண விழா நடைபெறும் இடத்தில், நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதோடு, ஒருங்கிணைந்த தி.மு.க. சார்பில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்து பரிசுகளை வழங்குகிறார். இதனைத் தொடர்ந்து வ .உ. சி. மைதானத்தில் அரசின் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவி குழு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    மாலையில் கொடிசியாவில் நடைபெறும் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் 2ஆயிரம் தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிளிகளை வழங்கி விழா பேருரையாற்ற உள்ளார்.

    கோவையில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகளில் மின் இணைப்பு துண்டிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டு சுட்டிகாட்டிய இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் செங்கல் உற்பத்தியை தொடங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது.

    வருவாய்த்துறை ஆவணங்கள் சரியாக இருந்தால் 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும். கோைட காலமான ஏப்ரல், மே, மாதங்களில் மின் தேவையை பூர்த்தி செய்ய 4,200 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டுள்ளது.

    இதற்காக டெண்டர் கோரப்பட்டு இது செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மின் விநியோகத்தில் எந்த வித பாதிப்பும் இருக்காது.

    6,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய சோலார் பூங்காவுக்காக டெண்டர் கோரபட்டுள்ளது. இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை 99.7 சதவீதம் இணைக்கப்பட்டு உள்ளது. இன்னும் 0.3 சதவீதம் தான் இணைக்க வேண்டியது உள்ளது. இன்னும் இரு தினங்களில் அந்த பணிகள் நிறைவடையும்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு தொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் பழ–னிசாமி விமர்சித்துள்ளார்.

    அ.தி.மு.க.வுக்கு அவர்கள் நினைத்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. அந்த விரக்தியில் இது போன்ற கருத்துக்களை கூறுகின்றனர்.

    ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வெற்றி பயணம் என்பது வரக்கூடிய 2024 மக்களவை தேர்தலுக்கான தொடக்கம்.

    40 பாராளுமன்ற தொகுதியிலும், முதல்-அமைச்சரின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள்.

    சட்டசபை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் இரட்ைட இலை சின்னத்தில் தான் அ.தி.மு.க போட்டியிட்டது. அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அவ்வளவு தான். மக்களுக்கு நன்மை செய்ய கூடிய இயக்கமாக கட்சியை வழிநடத்த வேண்டும் என்ற சூழல் அ.தி.மு.கவிடம் இல்லை.

    கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக அ.தி.மு.க.வினர் கருத்து தெரிவிக்கவில்லை. அ.தி.மு.க.வை பொறுத்தவரை மக்களை பற்றிய கவலை இல்லை. அவர்களின் தேவை யார் டெல்லியில் போட்டி போட்டு அடிமையாக இருப்பது என்பது தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 10 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை விசைத்தறி ஜவுளி தொழில் காப்பாற்றி வருகிறது.
    • விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளது.

    பல்லடம் :

    மின் கட்டண உயர்வில் சலுகை கேட்டு சென்னையில் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சந்தித்தனர்.

    இதுகுறித்து பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை விசைத்தறி ஜவுளி தொழில் காப்பாற்றி வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே நூல் விலை உயர்வு, உற்பத்தி செய்த காடா ஜவுளிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளது. இந்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தால் விசைத்தறி தொழில் முற்றிலும் அழிந்துவிடும். எனவே உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மேலும் சலுகைகள் வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மின் வாரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

    எங்களது கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்து, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் எடுத்துக்கூறி நல்ல பதில் கூறுவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். தமிழக முதல்வர் விசைத்தறி தொழிலுக்கு சலுகை அளித்து ஜவுளித் தொழிலை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மற்ற மின் கட்டண உயர்வில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
    • கோவை, மதுரை,சென்னையில் மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அப்போது பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    கோவை:

    கோவை ஈச்சனாரியில் நாளை நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    இதற்காக அங்கு அமைக்கப்பட்டு வரும் மேடை, பந்தல் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் வட்டி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளால் மின் கட்டணம் உயர்ந்துள்ளது.

    மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக மக்களிடம் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் கருத்து கேட்டு வருகிறது.

    இதுவரை கோவை, மதுரை,சென்னையில் மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அப்போது பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக சிறு, குறு தொழில் நடத்துவோர், தொழில் முனைவோர்கள், நடுத்தர தொழில் நிறுவனத்தினர் தமிழக அரசு உயர்த்துவதாக உத்தேசித்துள்ள கட்டணத்தில், தங்களுக்கான பிக்சிடு சார்ஜ் மற்றும் டிமாண்ட் சார்ஜ் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதனை குறைக்க வேண்டும் எனவும் கருத்து கேட்பு கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தொழிலாளர்களின் கோரிக்கை முதல்-அமைச்சரின் கவனத்தி ற்கு கொண்டு செல்லப்பட்டு, சிறு, குறு தொழிலாளர்களுக்கான மின் கட்டண உயர்வு குறித்து மட்டும் பரிசீலிக்கப்படும். இது தொடர்பாக இரண்டொரு நாளில் ஒழுங்குமுறை ஆணையம் நல்ல தகவலை தெரிவிக்கும்.

    சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை குறைப்பது பற்றி மட்டுமே பரிசீலிக்க உள்ளோம். மற்றபடி மற்ற மின் கட்டண உயர்வில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அமைதி ஊர்வலம் நடந்தது.
    • மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

    கோவை

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

    சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் ரோட்டில் தொடங்கிய அமைதி பேரணி சித்தாபுதூர், ஆவாரம்பாளையம் ரோடு, வி.கே.கே.மேனன் ரோடு வழியாக காந்திபுரம் நகர பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு ஊர்வலம் வந்தடைந்தது.

    பின்னர் அங்குள்ள அண்ணா சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில், மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக், மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா என்ற கிருஷ்ணன்,கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.சேனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், சுகாதாரகுழு தலைவர் மாரிச்செல்வன், இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனா லோகு மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக்கழக பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகரக்கழக, பகுதிக்கழக, ஒன்றியக்கழக, பேரூர்க்கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மண்டலத் தலைவர்கள் , மண்டல நிலைக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகர வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் , மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் உள்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மாவட்டம் முழுவதும் கருணாநிதியின் நினைவுநாளையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டு, ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் தி.மு.கவினர் வழங்கினர்.

    இறுதி கட்ட பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கரூர் தேர்தல் அலுவலகத்தில் ஜோதிமணி- செந்தில்பாலாஜி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #senthilbalaji #jothimani

    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் நாளை 16-ந்தேதி நிறைவு பெறுகிறது. அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோதிமணி சார்பில் கரூர் பஸ் நிலையம் மனோகரா கார்னர் பகுதியில் இறுதிக்கட்ட பிர சாரம் செய்ய அனுமதி கேட்டு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது.

    ஆனால் அதிகாரிகள் தரப்பில் அ.தி.மு.க.வினர் முன்னதாகவே விண்ணப்பித்துள்ளதால், அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி, வேட்பாளர் ஜோதிமணி, விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் உள்பட ஏராளமான தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கரூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்த உதவி தேர்தல் அதிகாரி சரவண மூர்த்தியிடம் இறுதிக்கட்ட பிரசாரத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் அவர்கள் கூறும்போது, தேர்தல் விதிமுறைப்படி இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட நாங்கள் முறையான அனுமதி பெற்றுள்ளோம். ஆனால் அ.தி.மு.க.வுக்கு, நாங்கள் குறிப்பிட்ட மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே பிரசாரத்தை முடித்திட அனுமதி வழங்கியது முறை கேடானது என குற்றஞ்சாட்டினர். இதனால் அதிகாரிகளுக்கும், தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    உடனே அங்கு ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். கலவரத்தை அடக்க பயன்படுத்தப்படும் வஜ்ரா வாகனமும் வரவழைக்கப்பட்டது. அலுவலக வாயிற் கதவுகள் பூட்டப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனிடையே உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தை விட்டு வெளியே வராமல் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி, வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட தி.மு.க.வினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரசாந்த் குமார், செலவின பார்வையாளர் மனோஜ்குமார் ஆகியோர் வந்து, இந்த பிரச்சினை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது அ.தி.மு.க.- காங்கிரஸ் வேட்பாளர்கள் சார்பில் இறுதி கட்ட பிரசாரத்திற்காக அளித்த தகவல் விவரங்கள், பிரசார அனுமதி வழங்கியதற்கான ஒப்புதல் விவரம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு விசாரித்தனர்.

    இதைத்தொடர்ந்து நாளை மாலை 4-6 மணியளவில் மனோகரா கார்னர் அருகே காங்கிரஸ் வேட்பாளருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க.வுக்கு முன்னதாக அதே இடத்தில் மதியம் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 6 மணி நேரமாக நடந்த உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு, அதிகாரிகளிடம் இருந்து அதற்குரிய ஆணையை பெற்று கொண்டு ஜோதிமணி, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியே வந்தனர்.

    காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தெரிவிக்கையில், 16-ந்தேதிக்கான பிரசார இடங்களுக்கு அனுமதி பெற 11-ந்தேதி தான் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க. சார்பில் 10-ந்தேதியே விண்ணப்பித்திருக்கின்றனர். தேர்தல் பார்வையாளர் வந்து அ.தி.மு.க. சார்பில் நேரம் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டு பிடித்தார் எனக்கூறினார்.

    செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறும்போது, நாளை (செவ்வாய்க்கிழமை) இறுதி கட்ட பிரசாரத்திற்காக 15 இடங்களை தேர்வு செய்து கொடுத்திருந்தோம். காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெறப்போகிறார். ஆகவே அவரது பிரசாரத்தை முடக்கும் நோக்கிலேயே இத்தகைய பித்தலாட்டத்தில் ஆளும்கட்சியினர் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு போலீஸ் அதிகாரி உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளும் துணை போயிருக்கின்றனர். இந்த விவகாரத்தை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம். தம்பிதுரையின் தோல்வி உறுதியாகிவிட்டது. அவர் டெபாசிட் இழப்பது உறுதி என்றார். #senthilbalaji #jothimani

    ×