என் மலர்
நீங்கள் தேடியது "செந்தில்பாலாஜி"
- "திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது’’ என நேற்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார்.
- இன்னும் நூறு பெளர்ணமிகளுக்கு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தொடர்வார்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23ம் புலிகேசி பழனிசாமி, இன்னும் நூறு பௌர்ணமிகளுக்கு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தொடர்வார் என்பதை 2026ல் உணர்வார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன... மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்"
'அமைதிப்படை' படத்தில் வரும் டயலாக் இது. அதில் வரும் 'அமாவாசை' கேரக்டர் தான் எடப்பாடி பழனிசாமி.
பலரை ஏறி மிதித்து, ஊர்ந்து சென்று, பதவியைப் பிடித்த பழனிசாமி, ''திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது'' என நேற்று பேசியிருக்கிறார்.
ஆட்சியை இழந்த இந்த நான்கு ஆண்டுக் காலத்தில் அமாவாசையையென உருட்டியே அரசியல் செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி.
''2024-ம் வருடம் சட்டசபைக்கும் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள் மட்டுமே ஸ்டாலின் முதலமைச்சராக இருக்க முடியும். மீண்டும் அதிமுக அரசு தமிழகத்தில் அமையும்'' - 2022 பிப்ரவரி 12. சேலம், தாரமங்கலம்.
''இன்னும் 28 அமாவாசைகள் மட்டுமே திமுக அரசு ஆட்சியில் இருக்கும்'' - 2024 ஜனவரி 25. எக்ஸ் தள பதிவு.
''திமுக ஆட்சியின் ஆயுட் காலம் 19 அமாவாசைகள்தான். நாட்கள் எண்ணப்படுகின்றன'' - 2024 செப்டம்பர் 20. X தளப்பதிவு.
இப்படி ஒவ்வொரு அமாவாசைக்கும் பழனிசாமி கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். அமாவாசைகள்தான் கடந்து சென்று கொண்டிருக்கிறன.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23-ம் புலிகேசி பழனிசாமி, இன்னும் நூறு பெளர்ணமிகளுக்கு மாண்புமிகு தளபதிதான் முதலமைச்சராக தொடர்வார் என்பதை 2026ல் உணர்ந்து கொள்வார்" என்று பதிவிட்டுள்ளார்.
- சில அரசியல் இயக்கங்கள் குளிர்காய நினைத்தார்கள்.
- முதலமைச்சர் எப்போதும் விவசாயிகளின் தோழனாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். கூட்டத்தில் சப்-கலெக்டர் கேத்தரின் சரண்யா, நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பொள்ளாச்சி அருகே மெட்டுவாவி பகுதியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதாக வதந்தியை பரப்பி, பொதுமக்கள் மத்தியில் ஒரு குழப்பமான சூழ்நிலையை உருவாக்க கூடிய வகையில் சில அரசியல் இயக்கங்கள் செயல்பட்டு வந்தன. இதுவரை சிப்காட் அமைப்பதற்கு எந்தவிதமான புதிய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.
அரசின் சார்பில் சட்டமன்றத்திலோ, நிதிநிலை அறிக்கையிலோ அல்லது மானிய கோரிக்கையிலோ எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் இருக்க கூடிய என்.இ.பி.சி. நிலங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் மெட்டுவாவியில் என்.இ.பி.சி. நிலங்கள் இருப்பதாக அறியப்பட்டு, அந்த கணக்கெடுப்பு பணிகள் தான் நடைபெற்று வருகிறது.
சிப்காட் அமைப்பதற்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதை மாற்றி ஏதோ இந்த பகுதியில் சிப்காட் அமைப்பதாக விவசாயிகள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி, பதற்றத்தை உருவாக்கி அதன் மூலம் சில அரசியல் இயக்கங்கள் குளிர்காய நினைத்தார்கள். எனவே தமிழக முதலமைச்சர் சார்பில் விவசாயிகளை சந்தித்து, இதற்கான தெளிவான ஒரு விளக்கத்தை வழங்கி இருக்கிறோம். விவசாயிகளும் அரசுக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். முதலமைச்சர் எப்போதும் விவசாயிகளின் தோழனாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
குறிப்பாக அரசின் மீது குறை சொல்வதற்கு இதுபோன்ற தவறான கருத்துக்களை விவசாயிகள் மத்தியில் கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறானது. விவசாயிகள் பயப்பட வேண்டியதில்லை. நிச்சயம் முதலமைச்சர் துணை உங்களுடன் நிற்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
- இந்த ஜாமியை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அமைச்சரான செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதனால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
சுமார் 471 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி ஜாமின் வழங்கியது.
இதனால் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஜாமின் வழங்கியதை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றம் மறுசீராய்வு மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் வாரத்தில் 2 நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் பிணை தொகையுடன் இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை ஐகோர்ட்டில் 5 முறை ஜாமின் மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் ஜாமின் மனு தாக்கல் செய்த நிலையில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
- மு.க.ஸ்டாலினின் அளவற்ற அன்பிற்கு நான் எந்நாளும் கடமைப்பட்டுள்ளேன்.
- கோவை மாவட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபடுவேன்.
கோவை:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.
முதல் நாள் நிகழ்ச்சியில் விளாங்குறிச்சியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைத்ததுடன், வீட்டு வசதி வாரியம் சார்பில் நிலம் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு நில விடுவிப்பு ஆணைகளை வழங்கினார்.
நேற்று 2-வது நாளாக கள ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை காந்திபுரம் அடுத்த அனுப்பர் பாளையத்தில் சிறைச்சாலைக்கு சொந்தமான 6.98 ஏக்கர் நிலத்தில் ரூ.300 கோடி மதிப்பில் அமைய தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜியை வெகுவாக பாராட்டி பேசினார்.
செந்தில் பாலாஜி கோவையின் பொறுப்பு அமைச்சராக இருந்து அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தீவிர களப்பணியாற்றி வந்தார். அவருக்கு இடையில் சில தடைகள் வந்தன.
அந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து தற்போது மீண்டும் கோவைக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார்.
மீண்டும் அதே உத்வேகத்துடன் கோவை மாவட்டத்தில் அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தீவிர களப்பணியாற்றுவார். அது உறுதி உறுதி என தெரிவித்து, அமைச்சர் செந்தில்பாலாஜியை பாராட்டி தள்ளினார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை பாராட்டியதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
தடைகள் வந்தபோதெல்லாம் தாயுமானவராய் இருந்து என்னை தாங்கிய தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலினின் இந்த அளவற்ற அன்பிற்கு நான் எந்நாளும் கடமைப்பட்டுள்ளேன்.
முதல்-அமைச்சர் ஆணைக்கு இணங்க களப்பணியாற்றி நலத்திட்ட பணிகளை வேகப்படுத்தி கோவை மாவட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபடுவேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். அத்துடன் முதலமைச்சர் தன்னை பாராட்டிய பேசிய அந்த வீடியோவையும் அந்த பதிவுக்கு கீழே பகிர்ந்துள்ளார்.
- செந்தில் பாலாஜி இன்று மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார்.
- முதல்வர் ஸ்டாலினை சந்தித்த செந்தில் பாலாஜி, காலில் விழுந்து வணங்கினார்.
471 நாட்கள் சிறையில் இருந்து ஜாமினில் நேற்று வெளியே வந்த செந்தில் பாலாஜி இன்று மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார்.
தொடர்ந்து, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, செந்தில் பாலாஜி சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.
அப்போது, முதல்வர் ஸ்டாலினை சந்தித்த செந்தில் பாலாஜி, காலில் விழுந்து வணங்கினார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்தும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் செந்தில் பாலாஜி உருக்கமாக பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில்.ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன்தலைவரே.! தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்..உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்! pic.twitter.com/wtwJCYvg0R
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) September 27, 2024
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில்.
ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே.!
தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்..
உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்!" என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "காலமெல்லாம் நிலைத்திருக்கும் கருப்பு சிவப்பின் எதிர்காலம்..
காலமெல்லாம் நிலைத்திருக்கும் கருப்பு சிவப்பின் எதிர்காலம்..தமிழ் கூறு நல்லுலகின் நம்பிக்கை.. தமிழர்களின் நம்பிக்கை...என்னைதோளோடு தோளாக அணைத்துக் கொண்ட இளஞ்சூரியனுக்குவாழ்நாளுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்..@Udhaystalin pic.twitter.com/37p3mPX1sI
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) September 27, 2024
தமிழ் கூறு நல்லுலகின் நம்பிக்கை.. தமிழர்களின் நம்பிக்கை...
என்னை தோளோடு தோளாக அணைத்துக் கொண்ட இளஞ்சூரியனுக்கு வாழ்நாளுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.." என குறிப்பிட்டுள்ளார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு சென்று, செந்தில் பாலாஜி சந்தித்தார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார்.
சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு சென்று, செந்தில் பாலாஜி சந்தித்தார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்கு
- இலாகாக்களில் பெரும்பாலும் மாற்றங்கள் செய்யப்படும்.
சென்னை:
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் (2011-ம் ஆண்டு) போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அவரது மறைவுக்கு பிறகு டி.டி.வி.தினகரனின் கட்சிக்கு சென்று அதன் பிறகு தி.மு.க.வுக்கு வந்தவர்.
2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கரூர் சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் டிரைவர்-கண்டக்டர்கள் நியமனத்துக்கு பலரிடம் பணம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு அவர்கள் கொடுத்த பணத்தை திரும்பத் தராமல் மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்தனர். இதனால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
471 நாட்கள் சிறையில் இருந்த அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில்பாலாஜி மீண்டும் உற்சாகமாகி உள்ளார்.
அவர் நேற்றிரவு நிருபர்களிடம் கூறும்போது, என் மீது தொடரப்பட்ட வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்கு என்றும் சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் எதிர் கொண்டு மீண்டு வருவேன் என்றும் கூறினார். என் மீது நம்பிக்கை பாசம் வைத்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவேன் என்று கூறி இருந்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் தமிழக அமைச்சரவையை மாற்றி அமைக்க இருப்பதால் அதில் செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவார் என்று அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
செந்தில்பாலாஜி ஏற்கனவே வகித்து வந்த மின்சாரம் மற்றும் மரபு சாரா எரிசக்தி மேம்பாடு துறையை தற்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூடுதலாக கவனித்து வருகிறார்.
இதேபோல் மது விலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமி கூடுதலாக கவனித்து வருகிறார்.
செந்தில்பாலாஜி அடுத்தவாரம் அமைச்சராகும் போது இந்த இலாகாக்கள் மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.
இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர் ஆகும் போது கூடுதல் இலாகாக்கள் வழங்கப்பட இருப்பதால் அமைச்சர்கள் பலருடைய இலாகாக்களில் பெரும்பாலும் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் தெரிகிறது.
- டெல்லியில் இருந்து சென்னை திரும்பியதும் சந்திக்க இருக்கிறார்.
- தி.மு.க. பவள விழா கூட்டத்திலும் செந்தில் பாலாஜி கலந்து கொள்வார்.
சென்னை:
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியதன் அடிப்படையில் புழல் சிறையில் இருந்து நேற்றிரவு அவர் வெளியே வந்தார்.
அவரை தி.மு.க. அமைப்புச் செயலாளர் மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. அம்பத்தூர் ஜோசப் சாமுவேல் உள்ளிட்ட ஏராளமானோர் சென்று வரவேற்றனர்.
மேள தாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி நேராக சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு மந்தைவெளியில் உள்ள வீட்டிற்கு சென்று தங்கினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி சென்றுள்ளதால் நேற்றிரவு செந்தில் பாலாஜி அவரை சந்திக்க இயலவில்லை.
எனவே இன்றிரவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை திரும்பியதும் செந்தில் பாலாஜி அவரை சந்திக்க இருக்கிறார்.
அவர் சென்னை வந்ததும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள உளுந்தை கிராமத்தில் உள்ள பண்ணை தோட்டத்திற்கு சென்று தங்குகிறார்.
எனவே அங்கு சென்று செந்தில் பாலாஜி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இல்லையென்றால் நாளை காலை ராணிப் பேட்டை நிகழ்ச்சிக்கு செல்லும் போது ராணிப் பேட்டையில் வைத்து செந்தில் பாலாஜி சந்திப்பார் என தெரிகிறது.
நாளை மாலை காஞ்சிபுரத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா மாநாட்டு பொதுக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்திலும் செந்தில் பாலாஜி கலந்து கொள்வார் என தெரிகிறது.
- 10 மாதங்களுக்கும் மேலாக செந்தில்பாலாஜி சிறையில் உள்ளார்.
- அடுத்த வாரம் விசாரணை நடைபெறும்
புதுடெல்லி:
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து இருந்தது.
இதற்கிடையே ஜாமீன் வழங்க கோரியும், அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும் செந்தில்பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று வந்தது. அப்போது விசாரணையை ஒத்திவைக்க அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. இதற்கு செந்தில்பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அடுத்த வாரம் விசாரணை நடைபெறும் வழக்கை ஒத்திவைக்க யாரும் கேட்ட கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து வருகிற 15-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.
- அமலாக்கத்துறை விசாரணை முடிந்து சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்
- நீதிமன்றத்தில் அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.
அதனடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை முதல் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். ஐந்து நாள் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிமன்ற காவலை நீட்டித்து புழல் சிறையில் அடைக்க மீண்டும் உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குற்றபத்திரிகையை அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை டிரங்க் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.
இந்த நிலையில் குற்றப்பத்திரிகை உள்ளிட்ட வழக்கு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விரைவாக விசாரிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதில் அல்லி, இது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு தெரிவிக்கும்படி கூறினார்.
அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டதும், நீதிபதி இந்த மனு மீது விசாரணை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அ.தி.மு.க. அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தார்.
- கவர்னர் டிஸ்மிஸ் செய்ததை அரசியல் சட்டத்துக்கு முரண்பாடானது என்கிறார்.
செந்தில்பாலாஜி டிஸ்மிஸ் செய்யப்பட்டது, பின்னர் அந்த உத்தரவை கவர்னர் நிறுத்தி வைத்தது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, இது என்ன நியாயம்? என்று புரியவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அ.தி.மு.க. அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தார்.
ஆனால் இப்போது கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும் தனது அமைச்சரவை அமைச்சரை கவர்னர் டிஸ்மிஸ் செய்ததை அரசியல் சட்டத்துக்கு முரண்பாடானது என்கிறார். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?
செந்தில்பாலாஜி ஊழல் செய்துள்ளார். ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தவிர ஒட்டு மொத்த தமிழகமும் விரும்புகிறது என்றார்.
- தமிழத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின், பீகார் சென்று சர்வகட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்குகிறாராம்.
- மதுபான பார்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10 கோடி என ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் செய்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சூரப்பள்ளி, சவுரியூர், காப்பரத்தாம்பட்டி, கரிக்காப்பட்டி பகுதிகளில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கட்சியை கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: -
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அ.தி.மு.க கொண்டு வந்த ஒவ்வொரு திட்டத்தையும் ரத்து செய்கின்ற காட்சியைத்தான் சாதனையாக பார்க்கிறோம்.
தமிழகத்தில் மின் கட்டணம் 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கைத்தறி, விசைத்தறி, உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. தமிழத்தை காப்பாற்ற முடியாத முதலமைச்சர் ஸ்டாலின், பீகார் சென்று சர்வகட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்குகிறாராம்.
நான் முதலமைச்சராக இருந்தபோது, உங்கள் மீது வழக்கு போட்டிருக்க முடியும். ஆனால் வழக்கு போடவில்லை.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் இருந்தது. 4ஆண்டுகள் சிறப்பான ஆட்சி தந்தோம். பொது இடத்தில் கூட்டம் போட்டு எங்கள் ஆட்சி மீதுள்ள குற்றச்சாட்டை சொல்லுங்கள், அதற்கு நான் பதில் தருகிறேன்.
கைதான அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தமிழகத்தில் மதுபான பார்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10 கோடி என ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் செய்துள்ளனர். இதற்கு தான் மத்திய அரசு ரெய்டு நடத்துகிறது. செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துவிட்டால், பலர் சிக்குவார்கள்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.