search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் பாஜக இளைஞரணி உறுப்பினர் படுகொலை- முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம்
    X

    பசவராஜ் பொம்மை    பிரவீன் நெட்டாரு

    கர்நாடகாவில் பாஜக இளைஞரணி உறுப்பினர் படுகொலை- முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம்

    • இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொன்றனர்.
    • தட்சிண கன்னடா பகுதியில் பாஜகவினர் போராட்டம்

    தட்சிண கன்னடா:

    கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த ஆளும் பாஜகவின் இளைஞரணி உறுப்பினர் பிரவீன் நெட்டாரு நேற்று மாலை பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்த படுகொலையை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து பெல்லாரே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பாஜக இளைஞரணி உறுப்பினர் படுகொலையை கண்டித்து தட்சிண கன்னடா பகுதி பாஜகவினர் சாலை மறியல் உள்ளிடட் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இந்நிலையில்,பிரவீன் நெட்டாரு படுகொலைக்கு கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பிரவீன் நெட்டாரு படுகொலை காட்டுமிராண்டித்தனமானது என்றும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தமது டுவிட்டர் பதிவில் பொம்மை குறிப்பிட்டுள்ளார். கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள், விரைவில் நீதி கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

    Next Story
    ×